Skip to content
ஆ

ஆ –இது தமிழ் உயிர் எழுத்துக்களில், இரண்டாம் எழுத்தாகும்;பசு;வலிக்கான குறிப்பொலி;சோறு;‘ஆவாங்கிக் கொள்’ என்பது வழக்கு

சொல் பொருள்

இது தமிழ் உயிர் எழுத்துக்களில், இரண்டாம் எழுத்தாகும்.

பசு என்னும் வீட்டு விலங்கைக் குறிக்கும்.

வலிக்கான குறிப்பொலி ஆகும்.

சோறு; பண்டம். வாயைத் திறந்து இதனை வாங்கிக் கொள் என்பதை, ‘ஆவாங்கிக் கொள்’ என்பது வழக்கு

ஆ, என்பது பெற்றத்தினை உணர்த்தும்வழிப் பெயர்ச்சொல் எனவும், இரக்கக் குறிப்பினை உணர்த்தும்வழி இடைச்சொல் எனவும் ஏவற் பொருண்மையை உணர்த்தும்வழி வினைச்சொல் எனவும், ஆதற் புடை பெயர்ச்சியை உணர்த்தும் வழி உரிச்சொல் எனவும் கோடல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின் எழுத்தொப்புமை பற்றி உபசாரத்தால் பல பொருள் ஒரு சொல் எனப்படினும் உண்மையான் வேறுவேறு சொல்லேயாம் ….. புணர்ச்சிக்கட் பெற்றத்தினை உணர்த்தும்வழி ஆன்கோடெனச் சாரியை பெறுதலும், மரவிசேடத்தை உணர்த்தும்வழி ஆங்கோடென மெல்லெழுத்துப் பெறுதலும் ஆகிய செய்கை வேறுபாடுஞ் சொல்வேறுபாட்டானன்றிப் பெறப்படாமையின் அவை வேறுவேறு சொல்லென்பது பெற்றாம்.
(சிவஞானபாடியம். 2:4)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The second tamil vowel

cow

Food, eat

சொல் பொருள் விளக்கம்

சோறு; பண்டம். வாயைத் திறந்து இதனை வாங்கிக் கொள் என்பதை, ‘ஆவாங்கிக் கொள்’ என்பது வழக்கு. ஆசொல்லு என்று சொல்வதும் வாயைத் திற என்பதற்கே யாம். ஆ வாயைத் திறத்தலையும், வாயைத் திறந்து உண்ணும் உணவையும் குறிப்பதாயிற்று. இது மதுரை வட்டார வழக்கும் பொது வழக்குமாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *