Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஒலி, ஓசை, 2. பாம்பு, 

சொல் பொருள் விளக்கம்

1. ஒலி, ஓசை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

noise, sound, snake

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு – நற் 144/1,2

பெரிய களிற்றினைப் புலி தாக்கியதால், அதன் கரிய பெண்யானை எழுப்பிய
திரண்டுவரும் கரிய மேகம் ஒலிப்பதைப் போன்ற முழக்கத்தைக் கேட்டு அஞ்சி

உருமும் சூரும் இரை தேர் அரவமும் – குறி 255

இடியும், பிசாசுகளும், இரை தேடித்திரியும் பாம்பும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *