Skip to content

சொல் பொருள்

(பெ) ஒளிநாட்டார்,

சொல் பொருள் விளக்கம்

ஒளிநாட்டார்,

வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட தமிழகம் ஆசிரியர் தொல்காப்பியனுள் காலத்துப் பன்னிரு நிலங்களாகப்
பகுக்கப்பட்டிருந்ததென்பது “செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தும்” (எச்ச-4) என அவ் வாசிரியர் கூறுதலால் இனிது
விளங்கும். இப்பன்னிரு நிலங்களாவன: பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்ட நாடு, குடநாடு, பன்றிநாடு,
கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவா நாடு, அருவாவடதலை என்பன என்றும் இவற்றைத்
தென்கீழ்பால் முதலாக வடகீழ்பால் இறுதியாக எண்ணிக்கொள்க வென்றும் கூறுவர் சேனாவரையர்.

– https://ta.wikisource.org/wiki/பக்கம்:தொல்காப்பியம்_வரலாறு.pdf/269

“ஜயசிங்க குலகால வளநாட்டு வடசிறுவாயில் நாட்டு ஒளிப்பற்று வாளுவ மங்கலம்” என்ற புதுக்கோட்டை
சாசனத்தில் ஒளிப்பற்று என்றது இவ் ஒளிநாடு என்ப. – பொ.வே.சோ உரை விளக்கம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

people of oli land

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல் ஒளியர் பணிபு ஒடுங்க – பட் 274

பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து மறம் கெட்டு ஒடுங்கவும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *