Skip to content

சொல் பொருள்

பல்லெல்லாம் போனவர் வாயை ஓவாய் என்பது நெல்லை மாவட்ட வழக்கு

சொல் பொருள் விளக்கம்

பல்லெல்லாம் போனவர் வாயை ஓவாய் என்பது நெல்லை மாவட்ட வழக்கு. ஓ என்பது ஏரி, குளம் ஆகியவற்றின் மடைநீர்த் தடுப்பாகிய பலகை. மதகு நீர் தாங்கும் பலகை என்பது அது. அப்பலகை எல்லாம் அகற்றப்பட்டது போன்ற வாய் ஓவாய். ‘பொழுவாய்’ எனவும் வழங்கும். பொள்ளல் என்பது ஓட்டை. பொள் – பொளு – பொழு என ஆகியிருக்க வேண்டும். இதுவும் நெல்லை மாவட்ட வழக்கே.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *