Skip to content

சொல் பொருள்

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர்,

சொல் பொருள் விளக்கம்

கடையெழு மன்னர்களின் ஒருவனான ஓரி என்பவன் ஆண்டபகுதி இது.
இவன் வில்லாற்றல் மிகுந்தவனாய் இருந்ததினால் வல்வில் ஓரி என்னப்பட்டான்.
இது பலாமரங்கள் மிகுந்த பகுதி. இங்கே கொல்லிப்பாவை என்ற ஒரு தெய்வத்திற்குக் கோயில் இருக்கிறது

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Range of hills in Namakkal district

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு – நற் 201/5,6

சிவந்த வேர்ப்பலாவின் பழங்கள் நிறைந்த கொல்லிமலையின்
தெய்வம் காக்கும் குற்றமற்ற உயர்ந்த உச்சிமலையில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *