Skip to content

சொல் பொருள்

(பெ) ஓர் ஊர், 

சொல் பொருள் விளக்கம்

ஓர் ஊர், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the name of a place

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செல்லா நல் இசை பொலம் பூண் திரையன்
பல் பூ கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய – அகம் 340/6-8

என்றும் கெடாத நல்ல கீர்த்தியினையும் பொற்பூணினையுமுடைய திரையன் என்பானது
பல பூக்களையுடைய சோலையினையுடைய பவத்திரி என்னும் ஊர் போன்ற இவள்
தனது நல்ல அழகு வாய்ந்த இலமைச் செவ்வி தொலையுமாறு.

சங்ககாலத்தில் தொண்டை நாட்டில் இருந்த ஊர் பவத்திரி. அக்காலத்தில் அதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் பொலம்பூண் திரையன். இந்த ஊர் ‘பல்பூங் கானல்’ எனச் சிறப்பிக்கப்படுவதால் கானல் இருக்கும் கடற்கரைப் பகுதியில் இருந்தது என்பது தெளிவாகிறது. தலைவியின் அழகு இந்த ஊர்போல் பொலிவுடன் திகழ்ந்தது எனப் பாடல் கூறுவதால் இந்த ஊரின் அழகை உணரமுடிகிறது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *