Skip to content

சொல் பொருள்

(பெ) சங்க காலத்துப் பெண் ஒருத்தியின் பெயர், 

சொல் பொருள் விளக்கம்

சங்க காலத்துப் பெண் ஒருத்தியின் பெயர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the name of a woman of sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலன் காட்டி
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர் – அகம் 222/9-12

திசையெல்லாம் தன் கணவனைத் தேடி மதிமயங்கி வாடிய
அவன் மனையாளாகிய ஆதிமந்திக்கு அவள் காதலனைக் காட்டி
ஒலிக்கும் கடலில் புக்கு மறைந்த பாடுதல் அமைந்த சிறப்பினையுடைய
மருதியை ஒத்த சிறந்த புகழைப் பெரும்பொருட்டு

மருதி வரலாறு.
ஆதிமந்தி என்பவன் சோழநாட்டு நீச்சல்வீரன். அவன் அரச குடும்பத்தினர் முன்னிலையில் காவிரியில் நீச்சல்
நடனம் ஆடியபோது அவனைக் காவிரி ஆற்று வெள்ளம் கொண்டு சென்றது. வெள்ளத்தில் சென்ற
ஆட்டன் அத்தியை மருதி என்பவள் காப்பாற்றி அவனுடன் வாழ்ந்து வந்தாள். ஆட்டன் அத்தியைக் காதலித்த
கரிகாலன் மகள் ஆதிமந்தி தன் காதலனைத் தேடிக்கொண்டு வந்தாள். தன்னோடு வாழும் ஆட்டன் அத்தி
இளவரசியின் காதலன் என உணர்ந்ததும் அவனை ஆதிமந்தியிடம் ஒப்படைத்து விட்டு, மருதி கடலில் பாய்ந்து
தன்னை மாய்த்துக் கொண்டாள்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *