Skip to content

சொல் பொருள்

(பெ) சூளுரை, சபதம்,

சொல் பொருள் விளக்கம்

சூளுரை, சபதம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

oath, swearing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வினை_வயின் பிரிந்த வேறுபடு கொள்கை
அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி – நற் 214/3-6

பொருளீட்டும்பொருட்டுப் பிரிந்து சென்ற நம்மிடம் வேறுபட்ட கொள்கையுடனே,
“அரும்புகள் அவிழ்ந்து மலராகிச் சுரும்புகள் தேனைப் பருகும் பலவான மலர்களை
சூடுவதற்கு வருவேன் உன் நீலமணி போன்ற கரிய கூந்தலில்” என்று
குறைவற்ற சூளுரைகளை என் மனம் கொள்ளுமாறு கூறி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *