Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு வேளிர் குல அரசன், மதுரையிலிருந்த ஓர் உபகாரி என்பார் உ.வே.சா.

சொல் பொருள் விளக்கம்

ஒரு வேளிர் குல அரசன், மதுரையிலிருந்த ஓர் உபகாரி என்பார் உ.வே.சா.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இந்த வேளிர் குல அரசன் வேள் மகளிரின் துன்பம் போக்கினான்.

பெருவிதுப்புற்ற பல்வேள் மகளிர்
குரூஉப் பூம் பைந்தார் அருக்கிய பூசல்
வசைவிடக்கடக்கும் வயங்கு பெருந்தானை
அகுதை களைதந்து ஆங்கு – அகம் 208/15 – 18

மிக்க விரைவுகொண்டு வந்த பல வேளிர் மகளிர்
நிறமுள்ள பூக்களாலான அழகிய மாலைகளை அழித்துவிட்டுச் செய்த அழுகை ஆரவாரத்தினை
பழிநீங்க மாற்றார் படையினை வெல்லும் விளங்கும் பெரிய சேனையையுடைய
அகுதை என்பவன் நீக்கினாற் போல –

இன் கடும் கள்ளின் அகுதை தந்தை – குறு 298/5

இந்த அகுதை தந்தை என்பான் மேற்கூறப்பட்ட வேளிர்குலத் தலைவன். எனவே இதனை
அகுதையாகிய தந்தை எனக்கொள்லலாம்.

சீர் கெழு நோன் தாள் அகுதைக்கண் தோன்றிய
பொன்படு திகிரியின் பொய்யாயிகியர் – புறம் 233/3,4

சீர்மை பொருந்திய வலிய முயற்சியையுடைய அகுதையிடத்து உள்ளதாகிய
பொன்னாற்செய்யப்பட்ட சக்கரத்தைப் போல் பொய்யாகுக

மணம் நாறு மார்பின் மறப் போர் அகுதை
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன – புறம் 347/5,6

மணங்கமழும் மார்பினையுடைய மறம் பொருந்திய போரைச் செய்யும்
ஆழ்ந்த நீர்நிலைகளையுடைய இடமாகிய கூடல் நகரைப் போன்று 

இங்கு குறிப்பிடப்படும் கூடல் என்பது காவிரி ஆற்ரங்கரையில் உள்ள முக்கூடல் என்ற ஊரைக் குறிக்கும் என்பர்.

பார்க்க – அஃதை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *