Skip to content

சொல் பொருள்

(பெ) செந்தமிழ்நாட்டை அடுத்த நாடு,

சொல் பொருள் விளக்கம்

செந்தமிழ்நாட்டை அடுத்த நாடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a neighbouring country of ancient Tamilnadu

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல் ஒளியர் பணிபு ஒடுங்க
தொல் அருவாளர் தொழில் கேட்ப – பட் 274,275

பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து தம் வீரம் குறைய பழைய அருவாள நாட்டு அரசரும் தாங்கள் செய்யும் தொழிலை வந்து கேட்ப அருவாள நாடு என்பது அருவா நாடு எனவும் வழங்கும். இதுவும், ஒளிநாடு என்பதுவும் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலங்களைச் சேர்ந்தவை. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி – தொல்.சொல்.எச்ச.4
பன்னிருநிலமாவன்: பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு கற்காநாடு, சீதநாடு, பூழிநாடி, மலநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு எனச் செந்தமிழ்நாட்டுத் தென்கீழ்பான் முதலாக வடகீழ்பால் இறுதியாக எண்ணிக்கொள்க- சேனாவரையம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *