Skip to content

1. சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககால ஊர்,

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு சங்ககால ஊர்,

அழுந்தூர் என்ற ஊர் சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலமான மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் உள்ளது. இக்காலத்தில் இந்த ஊர் தேரழுந்தூர் என்னும் பெயருடன் விளங்கிவருகிறது. கம்பராமாயணம் பாடிய கம்பர் இவ்வூரில் பிறந்தவர். வெண்ணிவாயில் என்னுமிடத்தில் வேந்தன் கரிகாலனை இரு பெரு வேந்தரும் 11 வேளிரும் ஒன்று கூடித் தாக்கினர். இவர்கள் அனைவரும் போர்க்களத்திலேயே மாண்டனர். போர்களத்தில் அவர்களது முரசங்கள் மட்டுமே எஞ்சிக் கிடந்தன. இவற்றைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் எனப் பரணர் பாடுகின்றார்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a city in sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/8-14

மிக்க சினமும் வலியும் உடைய பெரிய புகழினைக் கொண்ட கரிகால் வளவன்
மிக்க கள் வளமுடைய வெண்ணிவாயில் என்னுமிடத்தே
சிறப்பு வாய்ந்த பகையரசர் மாறுபட்டு எழுந்த போரின்கண்
மிக்க ஓசையையுடைய வீர முரசம் போர்க்களத்தே ஒழிந்து கிடக்க
வேளிர் பதினொருவருடன் இருபெரு வேந்தரும் நிலைகெட
அவர்தம் மிக்க வலியைக் கெடுத்த நாளில்
அழுந்தூர்க்கண் எழுந்த குறையாத ஆரவாரத்தினும் பெரிது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *