Skip to content

சொல் பொருள்

ஆட்டுமந்தை – சிந்திக்காத கூட்டம்

சொல் பொருள் விளக்கம்

“ஆட்டுமந்தையாக இருக்கிறார்களே மக்கள்; சிந்திக்கிறார்களா?” என்று மேடையில் பலரும் சொல்வது வழக்கமாக உள்ளது. ஆட்டு மந்தை வயலில் கிடக்கும். ஒன்று எழும்பி நடந்து விட்டால் எங்கே போகிறது ஏன் போகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமலே ஒன்றை ஒன்று தொடர்ந்து மந்தை முழுவதும் போய்விடும். இவ்வாறே ஒருவர் சொல்வதைக் கேட்டு அதைச் சிந்திக்காமலேயே ‘ஆமாம்’ எனத் தலையாட்டும் கூட்டம் ஆட்டு மந்தையாகச் சொல்லப்படுவது வழக்கமாயிற்றாம்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *