Skip to content
ஆர்

ஆர் என்பதன் பொருள்ஆத்திமரம்.

1. சொல் பொருள்

(வி) 1 நிறை, 2. நிறைவாக உண்,  3. கொண்டிரு, 4. பொருந்து, 5. நுகர், அனுபவி,  6. மிக்கு ஒலி, 7. பரவு,

2. (பெ.அ) 1. அரிய, 2. மிகுந்த,

3. (வி.பெ) யார்,

4. (பெ) 1. மலரின் புல்லிவட்டம், 2. அழகு, 3. ஆரம், 4. ஆத்திமரம்

2. சொல் பொருள் விளக்கம்

“போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெரும் வேந்தர் மலைந்த பூவும்”

என்னும் தொல்காப்பிய வழியில் வாய்த்த ஊர் ‘ஆர்க்காடு’. அதுமட்டுமா? ஆரணி ஆர்ப்பாக்கம் என்பனவும் செற்கற்பட்டு மாவட்டம் சார்ந்தவை. ஆர் என்பது ஆத்தி என்பதாம். பேர் > பேர்த்தி; ஆர் > ஆர்த்தி. பேத்தியும் ஆத்தியும் எண்ணலாம். ஆற்காடு என்று கற்றோரும் எழுதுவது, தெளிவு இல்லாமையால் அன்று. தெளிவாகக் கூடாது என்னும் தெளிவான முடிவில் எழுதுவதாம்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

become full, eat gratifyingly, be characterized by, to combine with , belong to, experience, enjoy, shout, roar, spread over, difficult, great, who, Calyx, beauty, spoke of a wheel, common mountain ebony, Bauhinia racemosa

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் – சிறு 65

கண்ணுக்கு நிறைந்த தலைமாலையையுடைய கடிய தேரை உடைய செழியன்

ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 175

ஒன்றாய்ப் பொருந்தின உடையினையுடைய, கூழை விரும்பி உண்ணும் இடையன்

யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ – குறு 216/3

நானே, தொகுதியைக் கொண்டிருக்கும் ஒளியையுடைய வளையல்கள் நெகிழ

சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1

வஞ்சகம் பொருந்திய குறிய வளையலையுடைய, அஞ்சுவதற்குக் காரணமான நடையையுடைய

ஆரா காமம் ஆர் பொழில் பாயல் – பரி 8/40

தெவிட்டாத காம இன்பத்தை நுகர்ந்து இன்புறும் சோலையாகிய படுக்கை

வாகை ஒண்பூப் புரையும் உச்சிய
தோகை ஆர் குரல் – பரி 14/7,8

வாகையின் ஒள்ளிய பூப்போன்ற உச்சிக்கொண்டையைக் கொண்ட
மயில்களின் ஆர்ப்பரிக்கும் ஒலி

வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44

வடுப்பட்டாற்போல கத்தூரிச் சாந்து பரவிக்கிடந்த மார்பினன்

வேறு பல் பெயர ஆர் எயில் கொள_கொள – மது 367

வேறுபட்ட பல பெயர்களையுடைய அழித்தற்கு அரிய அரண்களைக் கைக்கொள்ளக்கொள்ள

ஆர் கலி வானம் தலைஇ – நற் 53/5

மிக்க முழக்கத்துடன் மழைபெய்யத் தொடங்கி

ஆர் தர வந்தனன் ஆயினும் – நற் 119/4

யாராலே தரப்பட்டு வந்தவனாயினும்

புதுமலர், ஆர் கழல்பு உகுவ போல – குறு 282/7

புதிய மலர்கள், தம் காம்பினின்றும் கழன்று உதிர்வதைப் போல

ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி – பரி 18/30

அழகு ததும்பும் கூர்மையான அம்புகள் நிறைந்த அம்புக்கூடு

கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி – அகம் 14/19

கற்களில் மோதி ஒலிக்கும் பல ஆர்க்கால்களையுடைய சக்கரம்

அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் – அகம் 269/10

அம்பினால் அறுத்தெடுத்த ஆத்திமரத்தின் பட்டையாகிய நாரினால்

அர் ஆர் ப என வரூஉம் மூன்றும் - சொல். வினை:9/1

போந்தை வேம்பே ஆர் என வரூஉம் - பொருள். புறத்:5/4

ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்து தருதலும் - பொருள். புறத்:5/11
வரு பகை பேணார் ஆர் எயில் உளப்பட - பொருள். புறத்:12/7

அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
  என்பொடு இயைந்த தொடர்பு - குறள் 8:3
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
  ஆர் இருள் உய்த்துவிடும் - குறள் 13:1
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
  அமை ஆர் தோள் அஞ்சுபவர் - குறள் 91:6
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
  பலர் அறியார் பாக்கியத்தால் - குறள் 115:1
வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
  ஆர் அஞர் உற்றன கண் - குறள் 118:9

கண் ஆர் கண்ணி கரிகால்_வளவன் - பொரு 148
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் - சிறு 65
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை - சிறு 69
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் - பெரும் 175
புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து - பெரும் 184
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது - பெரும் 314
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப - முல் 96
குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின் - மது 195
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே - மது 260
வேறு பல் பெயர ஆர் எயில் கொள_கொள - மது 367
கள் ஆர் களமர் இரும் செரு மயக்கமும் - மது 393
வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து - மது 475
சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர் - மது 596
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த - நெடு 21
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப - குறி 36
புள் ஆர் இயத்த விலங்கு மலை சிலம்பின் - குறி 99
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் - பட் 264
தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் - மலை 152
செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன் - மலை 356
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து - மலை 368
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி - மலை 382
இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் - நற் 27/8
ஆர் கலி நல் ஏறு திரிதரும் - நற் 37/10
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு - நற் 38/4
ஆர் கலி வானம் தலைஇ நடுநாள் - நற் 53/5
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி - நற் 85/6
மண் ஆர் கண்ணின் அதிரும் - நற் 100/11
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு - நற் 102/2
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் - நற் 104/7
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் - நற் 108/1
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு - நற் 114/9
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை - நற் 119/4
இரை ஆர் குருகின் நிரை பறை தொழுதி - நற் 123/2
இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் - நற் 131/6
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும் - நற் 139/6
முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சி - நற் 151/6
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும் - நற் 154/11
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் - நற் 156/1
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள் - நற் 168/8
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் - நற் 190/2
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண் - நற் 216/7
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் - நற் 269/2
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் - நற் 285/1
ஏனல் செந்தினை பால் ஆர் கொழும் குரல் - நற் 288/8
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் - நற் 319/5
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை - நற் 323/5
ஆர் இருள் வருதல் காண்பேற்கு - நற் 332/9
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் - நற் 334/6
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் - நற் 344/2
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க - நற் 364/3
வரி ஆர் சிறு_மனை சிதைஇ வந்து - நற் 378/9
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை - நற் 382/6
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து - நற் 393/3
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல் - குறு 3/2
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் - குறு 52/1
நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே - குறு 70/2
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக - குறு 83/1
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு - குறு 128/3
ஆர் இருள் நடுநாள் வருதி - குறு 141/7
ஆர் இருள் கங்குல் அவர்-வயின் - குறு 153/4
முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர் - குறு 155/1
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை - குறு 158/4
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை - குறு 163/3
ஆர் கலி ஏற்றொடு கார் தலைமணந்த - குறு 186/1
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் - குறு 216/3
பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில் - குறு 223/1
ஆர் துயில் இயம்பும் நாடன் - குறு 247/6
ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம் - குறு 257/4
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ - குறு 275/4
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி - குறு 281/4
ஆர் கழல்பு உகுவ போல - குறு 282/7
சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன் - குறு 321/2
வளி பொரு நெடும் சினை உகுத்தலின் ஆர் கழல்பு - குறு 329/2
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக - குறு 353/1
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப - குறு 369/2
பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலை - குறு 385/1
ஆர் பதம் பெறுக தோழி அத்தை - குறு 389/2
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் - ஐங் 9/4
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து - ஐங் 71/1
மலர் ஆர் மலிர் நிறை வந்து என - ஐங் 72/4
போது ஆர் கூந்தல் இருந்தன எனவே - ஐங் 82/4
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க - ஐங் 232/1
இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே - ஐங் 256/4
ஆர் இருள் பெருகின வாரல் - ஐங் 282/4
தாது ஆர் பிரசம் ஊதும் - ஐங் 406/3
போது ஆர் புறவின் நாடு கிழவோனே - ஐங் 406/4
ஆர் குரல் எழிலி அழி துளி சிதறி - ஐங் 411/1
போது ஆர் நறும் துகள் கவினி புறவில் - ஐங் 416/1
தாது ஆர் பிரசம் மொய்ப்ப - ஐங் 417/3
போது ஆர் கூந்தல் முயங்கினள் எம்மே - ஐங் 417/4
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே - ஐங் 428/2
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே - ஐங் 455/2
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை - ஐங் 459/3
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக - ஐங் 468/3
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட - பதி 20/19
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின் - பதி 21/16
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின் - பதி 24/4
அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும் - பதி 29/13
கால் வழங்கு ஆர் எயில் கருதின் - பதி 33/11
அடங்கார் ஆர் அரண் வாட செல்லும் - பதி 39/7
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு - பதி 43/18
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதம் நல்கும் - பதி 55/11
மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇ - பதி 62/4
ஆர் பதம் நல்கும் என்ப கறுத்தோர் - பதி 66/9
ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடு - பதி 71/13
சுரும்பு ஆர் சோலை பெரும் பெயல் கொல்லி - பதி 81/24
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் - பதி 82/2
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா - பதி 84/8
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை - பதி 88/18
வண்டு ஆர் கூந்தல் ஒண்_தொடி கணவ - பதி 90/50
மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம் - பதி 92/13
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு - பரி 2/10
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில - பரி 2/29
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய - பரி 5/25
ஆரா காமம் ஆர் பொழில் பாயல் - பரி 8/40
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி - பரி 10/17
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப - பரி 10/89
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து - பரி 12/72
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை - பரி 14/8
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் - பரி 16/44
ஒருதிறம் கண் ஆர் குழலின் கரைபு எழ - பரி 17/11
ஒருதிறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத - பரி 17/12
ஒருதிறம் மண் ஆர் முழவின் இசை எழ - பரி 17/13
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி - பரி 18/30
ஆர் வேலை யாத்திரை செல் யாறு - பரி 19/18
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய - பரி 21/46
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத - பரி 22/11
தார் ஆர் முடியர் தகை கெழு மார்பினர் - பரி 22/23
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த - பரி 23/1
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து - பரி 23/2
விளைந்து ஆர் வினையின் விழு பயன் துய்க்கும் - பரி 23/46
போவார் ஆர் புத்தேள்_உலகு - பரி 34/4
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி - கலி 12/3
தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர் - கலி 29/18
முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின் - கலி 40/4
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் - கலி 44/20
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் - கலி 58/6
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும் - கலி 60/17
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய - கலி 75/1
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் - கலி 75/3
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய - கலி 84/2
சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக - கலி 85/14
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது - கலி 89/6
வடிவு ஆர் குழையும் இழையும் பொறையா - கலி 90/8
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின் - கலி 90/11
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ - கலி 90/12
ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப - கலி 92/34
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் - கலி 92/37
ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறா தட்ப - கலி 92/38
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் - கலி 101/30
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல் - கலி 103/44
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி - கலி 105/5
நீர் ஆர் நிழல குடம் சுட்டு_இனத்து உள்ளும் - கலி 109/3
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ - கலி 120/15
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே - கலி 121/12
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் - கலி 139/26
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச - கலி 143/11
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ - கலி 145/46
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல - கலி 147/30
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று - அகம் 1/17
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு - அகம் 9/6
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி - அகம் 14/19
அத்த இருப்பை ஆர் கழல் புது பூ - அகம் 15/13
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி - அகம் 17/9
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் - அகம் 21/22
மீன் ஆர் குருகின் மென் பறை தொழுதி - அகம் 40/3
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு - அகம் 45/4
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி - அகம் 71/11
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி - அகம் 82/16
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி - அகம் 83/2
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும் - அகம் 84/13
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் - அகம் 84/14
முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து - அகம் 98/10
சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில் - அகம் 99/3
ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும் - அகம் 108/9
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் - அகம் 118/9
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் - அகம் 139/5
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே - அகம் 150/14
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த - அகம் 155/14
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ - அகம் 176/14
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி - அகம் 180/6
அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார் - அகம் 183/3
ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி - அகம் 184/10
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே - அகம் 202/15
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள - அகம் 207/8
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை - அகம் 214/14
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே - அகம் 223/16
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று - அகம் 228/9
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே - அகம் 231/15
ஆர் கலி விழவு_களம் கடுப்ப நாளும் - அகம் 232/11
புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி - அகம் 244/12
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு - அகம் 246/5
தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு - அகம் 246/6
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய - அகம் 253/10
முறி ஆர் பெரும் கிளை செறிய பற்றி - அகம் 256/19
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப - அகம் 257/3
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் - அகம் 269/10
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி - அகம் 272/4
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற - அகம் 272/7
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை - அகம் 277/9
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும் - அகம் 295/16
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி - அகம் 298/11
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை - அகம் 300/4
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் - அகம் 306/5
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை - அகம் 314/7
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்-வயின் - அகம் 319/10
குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல் - அகம் 322/11
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை - அகம் 341/4
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் - அகம் 346/5
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப - அகம் 346/14
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி - அகம் 366/3
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே - அகம் 371/14
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து - அகம் 388/16
சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து - அகம் 389/2
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து - புறம் 6/14
ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு - புறம் 14/17
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் - புறம் 24/20
கண் ஆர் கண்ணி கலி_மான் வளவ - புறம் 39/12
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் - புறம் 43/13
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு - புறம் 45/3
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே - புறம் 45/4
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் - புறம் 56/22
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப - புறம் 65/3
ஆர் அமர் அலற தாக்கி தேரோடு - புறம் 71/4
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் - புறம் 81/3
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே - புறம் 82/6
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் - புறம் 99/6
மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனே - புறம் 160/13
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை - புறம் 172/9
சுரும்பு ஆர் கண்ணி பெரும் பெயர் நும் முன் - புறம் 174/18
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் - புறம் 192/9
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே - புறம் 195/9
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என - புறம் 203/10
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து - புறம் 205/10
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே - புறம் 212/10
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் - புறம் 216/5
ஆர் இருள் அரை இரவில் - புறம் 229/2
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் - புறம் 230/14
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு - புறம் 238/15
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப - புறம் 253/2
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன் - புறம் 254/8
கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை - புறம் 271/2
நீல கச்சை பூ ஆர் ஆடை - புறம் 274/1
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க - புறம் 283/8
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர - புறம் 288/5
நேரார் ஆர் எயில் முற்றி - புறம் 298/4
சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே - புறம் 308/7
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் - புறம் 321/6
ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல் - புறம் 337/1
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய - புறம் 337/10
ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி - புறம் 339/11
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் - புறம் 341/12
கயல் ஆர் நாரை உகைத்த வாளை - புறம் 354/5
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி - புறம் 355/5
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம் - புறம் 361/2
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் - புறம் 367/1
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ - புறம் 370/4
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி - புறம் 383/20
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து - புறம் 392/6

முறி ஆர் நறும் கண்ணி முன்னர் தயங்க - நாலடி:2 6/2
கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் சுரும்பு ஆர்க்கும் - நாலடி:13 2/2
குய் துவை ஆர் வெண் சோறேஆயினும் மேவாதார் - நாலடி:22 7/3
முட்டு உற்ற போழ்தில் முடுகி என் ஆர் உயிரை - நாலடி:24 8/1
அளவு இறந்த காதல் தம் ஆர் உயிர் அன்னார் - நாலடி:33 10/3
புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா - இன்னா40:15/1
பண் ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் - கள40:8/4
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் - கள40:22/5
கண் ஆர் கமழ் தெரியல் காவிரி நீர் நாடன் - கள40:24/4
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் - கள40:41/4
அஞ்சி ஒதுங்கும் அதர் உள்ளி ஆர் இருள் - ஐந்50:16/3
போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்கு - ஐந்50:22/1
ஆர் கலி வானம் பெயல் தொடங்கி கார் கொள - ஐந்70:23/2
கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல் - ஐந்70:30/2
பாழ் ஊர் பொதியில் புகா பார்க்கும் ஆர் இடை - ஐந்70:31/2
ஆர் இடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய் - ஐந்70:32/2
பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள் - ஐந்70:48/3
ஆர் பொருள் வேட்கையவர் - திணை50:15/4
மை ஆர் தடம் கண் மயில் அன்னாய் தீ தீண்டு - திணை150:5/3
நலம் கொண்டு ஆர் பூம் குழலாள் நன்று ஆயத்து அன்று என் - திணை150:9/3
இகந்து ஆர் விரல் காந்தள் என்று என்று உகந்து இயைந்த - திணை150:72/2
வந்தால்தான் செல்லாமோ ஆர் இடையாய் வார் கதிரால் - திணை150:77/1
வெந்தால் போல் தோன்றும் நீள் வேய் அத்தம் தந்து ஆர்
   தகர குழல் புரள தாழ் துகில் கை ஏந்தி - திணை150:77/2,3
வாரான் விடுவானோ வாள்கண்ணாய் கார் ஆர்
   குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும் - திணை150:112/2,3
செவ்வழி யாழ் பாண்மகனே சீர் ஆர் தேர் கையினால் - திணை150:124/1
மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று - திணை150:140/1
உண்ணா பூம் தாமரை பூ உள்ளும் கண் ஆர்
   வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள் - திணை150:140/2,3
அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு - குறள்:8 3/1
ஆர் இருள் உய்த்துவிடும் - குறள்:13 1/2
அமை ஆர் தோள் அஞ்சுபவர் - குறள்:91 6/2
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை - குறள்:115 1/1
ஆர் அஞர் உற்றன கண் - குறள்:118 9/2
ஒல்வது அறியும் விருந்தினனும் ஆர் உயிரை - திரி:26/1
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி - ஆசாரக்:101/1
கொக்கு ஆர் வள வயல் ஊர தினல் ஆமோ - பழ:18/3
அறை ஆர் அணி வளையாய் தீர்தல் உறுவார் - பழ:88/3
பை ஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும் - பழ:109/2
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப கெடுமே - பழ:194/3
பயவாமை செய்வார் ஆர் தம் சாகாடேயும் - பழ:308/3
நிறைந்து ஆர் வளையினாய் அஃதால் எருக்கு - பழ:376/3
பட்டு ஆர் அகல் அல்குலார் படர்ந்து ஒட்டி - பழ:398/2
பட்டு ஆர் அணி அல்குலார் படிந்து ஒட்டி - சிறுபஞ்:16/2
உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து ஊன் ஆர - சிறுபஞ்:32/3
உண்டு ஆர் அடிசிலே தோழரின் கண்டாரா - சிறுபஞ்:38/2
வண்டு ஆர் பூம் தொங்கல் மகன் தந்தை வண்தாராய் - சிறுபஞ்:52/2
யாப்பு ஆர் பூம் கோதை அணி இழையை நற்கு இயைய - சிறுபஞ்:52/3
அருள் போகா ஆர் அறம் என்று ஐந்தும் இருள் தீர - சிறுபஞ்:57/2
ஆய்வு இல்லா ஆர் அருளாம் அ அருள் நல் மனத்தான் - சிறுபஞ்:95/3
மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது மெய் அன்றால் - சிறுபஞ்:97/2
அருள் கூடி ஆர் அறத்தோடு ஐந்து இயைந்து ஈயின் - சிறுபஞ்:104/3
அளி வந்து ஆர் பூம் கோதாய் ஆறும் மறையின் - ஏலாதி:1/3
நூல் பட்டு ஆர் பூங்கோதாய் நோக்கின் இவை ஆறும் - ஏலாதி:13/3
பீடு ஆர் இரலை பிணை தழுவ காடு ஆர - கைந்:29/2
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய் பாண - கைந்:47/3
கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம் - கைந்:48/1
பா ஆர் அம் சேர்ப்பற்கு உரையாய் பரியாது - கைந்:49/3
கொக்கு ஆர் கொடும் கழி கூடு நீர் தண் சேர்ப்பன் - கைந்:55/1

அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த - நெடு 21

நடவி ஆர் தவத்தில் ஓங்கி நாதனை ஈன்றாள் தாளை - தேம்பா:0 7/3
மிடியில் ஆர் நயன் விளைவில் மாற்றுவான் - தேம்பா:1 18/1
முடியில் ஆர் கனி பொறை பொறா முயன்று - தேம்பா:1 18/2
கடியில் ஆர் மரம் வளைதல் காணுமே - தேம்பா:1 18/4
ஆலை ஆர் புகை முகில் என்று ஆர்ப்பு எழ - தேம்பா:1 19/1
சோலை ஆர் மயில் துள்ள மாம் குயில் - தேம்பா:1 19/2
மாலை ஆர் இருள் விரும்பும் மாக்கள் காண் - தேம்பா:1 19/3
குயில் இனத்தொடு கொம்பில் ஆர் கிளி - தேம்பா:1 25/1
தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே - தேம்பா:1 60/2
தாவு அழகு ஆர் நாடு இதுவேல் தரங்கம் இலாது அருள் பவ்வம் - தேம்பா:1 60/3
வாவு அழகு ஆர் திரு நிலைத்த வான் உலகம் நாடேமோ - தேம்பா:1 60/4
ஆய முழங்கின ஆர் புகழ் சங்குகள் ஆயம் முழங்கின மேல் - தேம்பா:1 64/2
ஆன் திரள் சிந்திய சீர் எவையும் செறி ஆர் பொழில் சிந்தியதே - தேம்பா:1 65/4
ஆலையின் வாய் உள தேன் அகலும் தரு ஆர் மலர் வாய் உள தேன் - தேம்பா:1 66/1
தேன் அக இனிய அன்பு ஆர் திருவினோன் அருளின் சிந்தும் - தேம்பா:2 5/1
பூ_உலகு இயல்பு அன்று அம் பொன் பொலி மணி நகரம் பொன் ஆர்
  தே உலகு உரித்து என்று அங்கண் தெளிந்து புக்கிடும் என்று ஆழி - தேம்பா:2 8/1,2
வேரி ஆர் இதழை பூத்து வெறி எறி அகழி தோற்றம் - தேம்பா:2 9/4
தலையின் ஆர் மனவினை தரித்த பூம் கொடி - தேம்பா:2 18/2
கொங்கு இட்ட விம்மிய கோதை ஆர் மது - தேம்பா:2 26/2
பெற்றி ஆர் குணில் கவண் பெரும் வில் நேமியோர் - தேம்பா:2 34/1
வெற்றி ஆர் அலங்கல் வாள் முதல் பல் வேல் படை - தேம்பா:2 34/3
பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய - தேம்பா:2 43/3
எழுது இனிது உரு என எழில் நலர் இழிவு ஆர்
  வழுது இனிது இனிது அல வழு இல இறையோன் - தேம்பா:2 56/1,2
பொன் ஆர் குழல் புகல் இன்பு அது பெரிதோ கலை புரி நூல் - தேம்பா:2 67/2
பூ நாணுப மது ஆர் அருள் புயல் நாணுப கொடைகள் - தேம்பா:2 69/2
வேட்டலால் விளி விழுங்கிய கயவன் ஆர் என்றான் - தேம்பா:3 19/4
சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி - தேம்பா:3 53/1
அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல் - தேம்பா:3 53/2
எல் ஆர் முகத்து இலங்கி பிறந்த தோன்றல் எழில் கண்டு - தேம்பா:3 53/3
நெறிவுற்று ஆர் நுதல் நிலத்தில் தாழ்ந்தனன் - தேம்பா:4 4/3
மீன் ஆர் வானம் பெற்றவன் ஓது விதி பெற்று - தேம்பா:4 47/1
தேன் ஆர் கானம் பெற்ற திருந்தும் தெளிவு ஆறாது - தேம்பா:4 47/2
ஊன் ஆர் காயம் பெற்று இவன் உவவோடு உயர் மற்ற - தேம்பா:4 47/3
வான் ஆர் மானம் பெற்று அறம் ஒன்றாய் வனைகின்றான் - தேம்பா:4 47/4
துன்னி தாழ்ந்து தொழ உன் தீம் சுவை ஆர் குதலை சொல் கேட்ப - தேம்பா:5 22/3
ஆர் ஆனும் நிகர்ப்பு அரிய அன்பு ஆர்ந்த நாயகன் தான் அலகை வெல்ல - தேம்பா:5 26/1
பின்னும் உயிர் காவலன் ஆர் பெறவோ - தேம்பா:5 59/4
சென்று ஆர் விழி நீர் திரை மாற்றி அறாத - தேம்பா:5 75/3
அன்று ஆர் உரன் ஆகி எழுந்தனளே - தேம்பா:5 75/4
அம் பொன் சிலம்பும் மணிமேகலையோடு பொற்பு ஆர்
  அம் பொன் சிலம்பும் கலனும் சிலர் கொண்டு அடைந்தார் - தேம்பா:5 80/3,4
அலின் ஆர் ஒளிர் ஆரிய தாரகையுள் - தேம்பா:5 87/1
அருகு ஆயின வான் அழகு ஆர் வதனம் - தேம்பா:5 99/1
திறல் ஆர் திரு நீரிய தீம் கொடியை - தேம்பா:5 104/1
வண் ஆம் கவின் ஆர் வயது ஈர் எழு கொள் - தேம்பா:5 112/1
மாய இருள் தவிர் வான நிலையினர் வாழி என என வாசம் ஆர்
  தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய் - தேம்பா:5 126/2,3
அப்பு அடை ஆர் கலி என்ன அலைந்த மனத்து உரம் செய்தாய் - தேம்பா:6 5/2
கதிரும் இன்பு ஆர் தவம் என்றாள் கருணை பவ்வ கரை இல்லாள் - தேம்பா:6 54/4
திருந்து இன் ஆர் முகத்து உரைத்த சொல் திளை மது செவியால் - தேம்பா:6 62/3
உறுமை ஆர் முகில் உறை இரந்து உயிர்க்கு எலாம் உகுத்த - தேம்பா:6 66/3
நறுமை ஆர் நளிர் நறு மலர் வாவியே போன்றார் - தேம்பா:6 66/4
மொய் படும் ஆர் கலி உடுத்த பாரில் நினக்கு அன்னை எனும் முகுளம் கன்னி - தேம்பா:8 14/2
அற்றை ஆர் ஒளியொடு சிவந்தது ஐந்திரி - தேம்பா:8 22/4
திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர் - தேம்பா:8 47/1
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி - தேம்பா:8 47/3
நீய் கனிவு ஆர் கடல் நீ ஒளி ஆர் சுடர் நீ அருள் ஆர் முகில் நீ - தேம்பா:8 75/2
நீய் கனிவு ஆர் கடல் நீ ஒளி ஆர் சுடர் நீ அருள் ஆர் முகில் நீ - தேம்பா:8 75/2
நீய் கனிவு ஆர் கடல் நீ ஒளி ஆர் சுடர் நீ அருள் ஆர் முகில் நீ - தேம்பா:8 75/2
ஆரணியே கருணாகரியே உயிர் யாவும் அளித்த அமுது ஆர்
  வாரணியே தனி நாயகியே நனி வாழுதி வாழுதியே - தேம்பா:8 76/3,4
தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர்
  மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று - தேம்பா:8 81/1,2
அழுது உணர்ந்தவை ஆர் அறைவார் அரோ - தேம்பா:8 82/4
மேலின் ஆர் வாசமே வீசு பூ விள்ளும் ஓர் - தேம்பா:9 6/1
புயல் ஆர் உடு ஆர் குழலாள் அவனும் புரி புன்னகையால் - தேம்பா:9 24/2
புயல் ஆர் உடு ஆர் குழலாள் அவனும் புரி புன்னகையால் - தேம்பா:9 24/2
செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ் - தேம்பா:9 28/1
செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ் - தேம்பா:9 28/1
கல் ஆர் உலகு உற்றவர்க்கும் கனி இன்பு இயற்றும் கருணை - தேம்பா:9 28/2
வில் ஆர் அறிவோய் விழையும் தொழிலை விடல் ஆகாதோ - தேம்பா:9 28/4
நீர் தோய் பொன் ஆர் தன் தலை நீட்ட நிசி நீத்தோன் - தேம்பா:9 62/1
ஏர் தோய் மின் ஆர் பொன் சிறை அம் புள் இனம் எல்லாம் - தேம்பா:9 62/2
செறித்து உண் அன்று ஆர் யோகி அவற்கே திளை பல் நாள் - தேம்பா:9 66/3
தேனின் ஆர் மடி என திங்கள் தெண் சுடர் - தேம்பா:9 87/1
ஆண்டகை ஆர் அருள் சாரார்க்கு அல்லது ஒரு துயர் சாரா - தேம்பா:10 13/2
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர் - தேம்பா:10 13/3
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர்
  பூண் தகையால் அறம் சார்ந்தாள் புரை சாரா புகல் செய்தாள் - தேம்பா:10 13/3,4
தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ் - தேம்பா:10 18/3
சோலை ஆர் தரு பூம் பணை தோற்றமே - தேம்பா:10 24/2
மாலை ஆர் உடு காட்டிய வான் எனா - தேம்பா:10 24/3
கொம்பின் ஆர் குயில் கூவவும் மஞ்ஞைகள் - தேம்பா:10 26/1
நீர் ஆர் பவள துறையின் நிரை நித்திலம் உய்த்து என்னா - தேம்பா:10 43/1
ஏர் ஆர் துவர் வாய் முறுவல் இலங்க நின்றாள் ஏதோ - தேம்பா:10 43/2
சூர் ஆர் முகத்தோடு உரையா துறந்தாள் என்று ஆங்கு உறைந்தார் - தேம்பா:10 43/3
வார் ஆர் கழல் ஆர்த்து இடிப்ப வருந்தி வெருவி போனார் - தேம்பா:10 43/4
ஆய்ந்த நூல் கடந்து ஆர் உணர்வு எய்தினாள் - தேம்பா:10 113/4
தனக்கு நேர் இழந்து ஆர் தகவோன்-தனை - தேம்பா:10 115/2
அறம் செய் தான் எமது ஆர் துகள் மூடலின் - தேம்பா:10 117/3
கோதை வாகையை நீழல் ஆர் அடி கோதை ஆக அணிந்த கை - தேம்பா:10 129/1
குருவாய் வந்தோய் ஒளிப்பாயோ கோது ஆர் இருள் தீர் வெம் சுடரின் - தேம்பா:10 148/1
மாலை ஆக வீங்கு உவந்து வாசம் ஆரும் முல்லை ஆர்
  மாலை ஆக ஈங்கு வந்து வாசம் ஆரும் முல்லையார் - தேம்பா:11 3/3,4
மணி ஆர் அணியே மறையின் திருவே - தேம்பா:11 66/4
வில்லை தாராய் வேய்ந்தனன் அன்பு ஆர் விதி சொல்வான் - தேம்பா:11 80/4
பார் ஆர் கங்குல் பானு ஒளி முன்னர் பரவு உண்டோ - தேம்பா:11 85/1
ஏர் ஆர் வில் செய் மு சுடர் அன்னான் இவரை கண்டு - தேம்பா:11 85/2
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ - தேம்பா:11 85/3
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ - தேம்பா:11 85/3
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ - தேம்பா:11 85/3
ஆர் அணிக்கு எழு மிக்கயேல் கபிரியேல் அன்ன - தேம்பா:11 91/1
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப புகழ் உற்று ஆய்ந்த - தேம்பா:11 103/3
ஆர் ஆழி அறத்து இறைவற்கு அருச்சனை செய்வதற்கு உரிய அரிய தூபம் - தேம்பா:11 113/3
பான் அகத்து ஆர் சுடர் உமிழ் வேல் பற்று ஒரு வானவன் அங்கண் பதிந்து எஞ்ஞான்றும் - தேம்பா:11 123/2
கானகத்து ஆர் விலங்கு இனம் அ கந்தரத்துள் புகல் செய்யா காவல் செய்து - தேம்பா:11 123/3
சென்னி ஆர் இள மது திருந்தும் பூ மலர் - தேம்பா:12 30/1
துன்னி ஆர் நறவிய கனிகள் தோற்றமும் - தேம்பா:12 30/2
மின்னி ஆர் உடு முடி வேய்ந்த நாயகி - தேம்பா:12 30/3
ஆர் முகம் புதைத்த இன்பு அருந்தி கூய் குயில் - தேம்பா:12 32/3
ஈய்ந்த கள் நாடி வண்டு யாழ் செய்து ஆர் நிழல் - தேம்பா:12 40/1
கான் வயிறு ஆர் பூம் கொடியோன் உறங்கும் காலை கதிர் தும்மி - தேம்பா:13 4/1
மீன் வயிறு ஆர் உரு காட்டி விண்ணோன் எய்தி விரை கொடியோய் - தேம்பா:13 4/2
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவல் கோறல் உள்ளினன் நீ - தேம்பா:13 4/3
தேன் வயிறு ஆர் இ பதி நீத்து எசித்து நாட்டை செல்க என்றான் - தேம்பா:13 4/4
அறா நறா பொழில் ஆர் அழும் ஓதையே - தேம்பா:13 34/4
கார் ஆர் ஒலி கடல் ஆர் ஒலி கறை பாய் ஒலி கடிது ஊர் - தேம்பா:14 57/1
கார் ஆர் ஒலி கடல் ஆர் ஒலி கறை பாய் ஒலி கடிது ஊர் - தேம்பா:14 57/1
தேர் ஆர் ஒலி கரி ஆர் ஒலி பரி ஆர் ஒலி சிதறும் - தேம்பா:14 57/2
தேர் ஆர் ஒலி கரி ஆர் ஒலி பரி ஆர் ஒலி சிதறும் - தேம்பா:14 57/2
தேர் ஆர் ஒலி கரி ஆர் ஒலி பரி ஆர் ஒலி சிதறும் - தேம்பா:14 57/2
போரார் ஒலி முரசு ஆர் ஒலி புகைவார் ஒலி புரை செய் - தேம்பா:14 57/3
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர் அறிவார் ஆர் உயிரே - தேம்பா:14 90/4
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர் அறிவார் ஆர் உயிரே - தேம்பா:14 90/4
அடல் வண்ணத்து எசித்து அறியும் அல்லால் இங்கண் ஆர் அறிவார் - தேம்பா:14 92/3
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர்
  ஊன் ஊறு சோதுமத்தாரது ஐந்தும் ஊர் உற்ற பாவம் ஒழிய - தேம்பா:14 129/2,3
மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல் உயர்ந்தோன் - தேம்பா:15 5/2
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான் - தேம்பா:15 5/3
அமிர்தம் பாய்ந்து மது பாய்ந்து ஆர் அன்னம் பாய்ந்த வயல் கடந்து - தேம்பா:15 13/1
ஏறு ஆர் ஒலி போல் பல் பறை ஆர்த்து இறைவன் பணியால் மறை பேழை - தேம்பா:15 16/1
ஈர்த்து ஆர் உரும் ஒத்து ஒலித்து அதிர இடை விட்டு அரணும் தகர்ந்து இடிந்தே - தேம்பா:15 18/2
விண் காவலன் ஆர் மிடல் அஞ்சினராய் - தேம்பா:15 20/1
அஞ்சா மறம் ஆர் பல நாடர் எலாம் - தேம்பா:15 22/2
மன் ஆர் பிரசேயரும் மண்டினரே - தேம்பா:15 33/4
கரம்பின் ஆர் அடியே காண கடல் திரை பிரிந்த ஆறும் - தேம்பா:15 51/2
முற்றிய மா தவம் ஆர் முனிமார் முனிவை - தேம்பா:15 60/3
ஆர் இரு பாலினர் ஆர்த்து இவனை துதைய - தேம்பா:15 68/3
ஆர் ஓர் சாபம் உளன் ஆயினான் எதிர ஆவி வாழ்வன் என மாழ்குவார் - தேம்பா:15 93/4
ஆர் இரண்டு படை வியவ மண்டி விரி படம் மலர்ந்து மிசை ஆடவே - தேம்பா:15 96/4
முடிகள் அற முங்கம் அற அணிகள் அற மள்ளர் அற முனையும் ஒரு சோசுவனொடு ஆர் ஆர் - தேம்பா:15 122/3
முடிகள் அற முங்கம் அற அணிகள் அற மள்ளர் அற முனையும் ஒரு சோசுவனொடு ஆர் ஆர்
  இடிகள் அற வேகு அமரில் எழுது கணையோடு கணை எழுத எதிர்கின்றவருள் உய்ந்தார் - தேம்பா:15 122/3,4
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர் - தேம்பா:15 129/3
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர்
  மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார் - தேம்பா:15 129/3,4
ஆர் முகம் தகும் மறைக்கு அரசன் அன்று தன் - தேம்பா:15 136/3
ஆர் இருள் நெடுமையார் ஆடும் ஊசல் போல் - தேம்பா:15 137/1
மின் நாறினர் புலை நாறினர் விறல் வாளினர் மதம் ஆர்
  கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் எமர் பொருதார் - தேம்பா:15 142/3,4
செரு ஆர் களம் இடை ஆடுக திரள் தீ எழ அலறி - தேம்பா:15 147/2
கண் கனிந்து உவப்ப தெள் ஆர் கதிர் கிழி பொறித்ததே போல் - தேம்பா:15 180/3
காம கடம் ஆர் கரியோ பரியோ கவின் கொள் - தேம்பா:16 20/3
அணி ஆர் திரு மேனி அணிந்தாயோ என்று அடி பணிந்தான் - தேம்பா:16 57/4
சிறந்த திரு புகழ் ஆர் கீதம் கேட்ட செழும் தவத்தோன் - தேம்பா:16 60/1
அணங்கு பேய் உற ஆர் தவத்தோன் அறைந்து - தேம்பா:17 49/2
அணி நிறத்த சினை படத்து ஆர் ஒளி - தேம்பா:18 56/1
பாகு இளம் சுவை பெய் வில் ஆர் பவள வாய் துறையில் வைத்த - தேம்பா:19 15/1
கான் ஆர் மலர் முகை கண் விழித்து நோக்கி கனி நகைத்த - தேம்பா:20 15/1
தேன் ஆர் காவில் நெடு நெறி போய் தீம் சொல் செல் குறைய - தேம்பா:20 15/2
மானார் மனம் என முள் மலிந்த வேய் ஆர் வனம் கடந்து - தேம்பா:20 15/3
பான் ஆர் கதிர் கண்ட வெளியே கண்டு பரிவு அற்றார் - தேம்பா:20 15/4
கமுகும் பூகமும் ஆர் கனி முத்து அணிந்த கா ஒரு-பால் - தேம்பா:20 16/2
பிணி சாயல் வாட்டிய மெய் பிணைவின் மாண்பு ஆர் நூறு அடிகள் - தேம்பா:20 20/3
ஆகத்து ஆர் அருள் மிக்க அதிட்டன் என்பான் அறைகின்றான் - தேம்பா:20 23/4
வில் கலத்து அலர்ந்த இ கா விரும்பி வந்தனர் ஆர் என்றான் - தேம்பா:20 36/4
மின் ஆர் கதிர் தெளித்து ஈங்கு ஓவியமாய் வேந்து எழுதி - தேம்பா:20 56/1
பொன் ஆர் மணி குப்பை போன்று நிழல் உமிழ்ந்து இலங்கும் - தேம்பா:20 56/2
சீர் ஆர் புகழ் மிக்கோன் செய் தவத்தோன் முன் கொண்ட - தேம்பா:20 58/1
தார் ஆர் அணங்கு அளித்த தனயரும் ஈர்_ஐந்து பினர் - தேம்பா:20 58/2
கார் ஆர் பின் குழலாள் களித்து ஈன்ற இருவரினுள் - தேம்பா:20 58/3
ஏர் ஆர் மூதுனன் ஆய் ஆணரன் என்ற இவன் தானே - தேம்பா:20 58/4
எரி ஆர் சுடர் தொழுதது என பகைத்தார் மூதுனரே - தேம்பா:20 60/2
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர் என்று அதிட்டன் கேட்டு இவை வளன் சொன்னான் - தேம்பா:20 66/4
ஆர் முகத்து எனக்கு ஓர் ஐயன் ஆம் நாய்கன் அனைத்துமே உனை அலாது அளித்த - தேம்பா:20 74/1
வெறிபட்டு ஆர் மதுவின் நாட்டில் விளைந்த நோய் கேட்ட தந்தை - தேம்பா:20 107/1
எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன இள_மகன் போதல் என்றான் - தேம்பா:20 107/4
ஆர் நலம் பொறித்த சீய அணையில் ஆணரன் நின்று ஓங்க - தேம்பா:20 112/2
இயல் ஒத்தன கயம் உள் திரி இறகு ஆர் உயிர் இனமும் - தேம்பா:21 25/3
முந்து ஓடிய பெடை மீமிசை முருகு ஆர் துளி முடுக - தேம்பா:21 30/3
அளி ஆர் அலர் அரவே படம் அனை ஆட்டின பலவும் - தேம்பா:21 33/1
துளி ஆர் முகில் உற மீ விசை துற ஒட்டின பலவும் - தேம்பா:21 33/3
நளி ஆர் அலர் விளையாடின நயம் எல்லையும் இலை-ஆல் - தேம்பா:21 33/4
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க - தேம்பா:22 2/3
மண்டு ஆர் அறவோர் மிசை மல்கிய கண் - தேம்பா:22 10/4
ஆர் நல மரத்தின் சாயற்கு ஆங்கு வேறு இலாமையானும் - தேம்பா:22 19/2
ஆர் அகம் துகைத்து இவர் நடந்து எல் ஐம்பது ஆய் - தேம்பா:22 29/3
கொடியொடு குடை பொரும் கொள்கைத்து ஆர் இருள் - தேம்பா:22 32/1
தெள் உண்ட அமுது ஆர் எசித்து இறைஞ்சும் தேவர் யாமே மேல் வயத்தால் - தேம்பா:23 2/1
அய்யம் கொண்டால் ஆர் அறிவு எஞ்சி அரிது உய்வார் - தேம்பா:23 22/2
காய்ந்து ஆர் துன்பம் தீர்ப்ப மகன் தன் கவின் ஒப்ப - தேம்பா:23 24/3
வல தொழில் இருவர் கூற வலியன் ஆர் என்பீர் என்ன - தேம்பா:23 55/3
தேன் வயிறு ஆர் மலர் பூத்த செழும் சோலை பருவம் இல - தேம்பா:23 73/1
கான் வயிறு ஆர் கனி நலமும் கலந்து அன்று களிப்பு எய்தி - தேம்பா:23 73/2
வான் வயிறு ஆர் சுவை அமிர்தம் மண் உலகில் தொக்கது என - தேம்பா:23 73/3
மீன் வயிறு ஆர் உலகு ஒப்ப மேதினி அன்று எழ கண்டோம் - தேம்பா:23 73/4
திடம் கொடு ஆர் புலன் தெளிந்த நாம் அறிகு இலா மனு ஆய் - தேம்பா:23 81/1
தொக்கு எலாம் பரந்து மாக்கள் தொகையில் ஆர் உய்வர் என்பார் - தேம்பா:24 7/4
இடம் மாறி உகண்டன வாசியொடும் எரி ஊறிய வெம் கதம் ஆர் விழியால் - தேம்பா:24 24/2
வளை கள் ஆர் பொழில் வனை அணி கரமித மலை மேல் - தேம்பா:25 32/1
கிளைகள் ஆர் நிழல் கெழும் பலா கனி எலாம் தீம் தேன் - தேம்பா:25 32/2
திளைகள் ஆர் கனி சேர்கில் ஈங்கு எவன் செய்வாய் என்றான் - தேம்பா:25 32/4
ஆர் அற தொகையோன் மைமைக்கு அரியது ஓர் புதல்வன் தோன்ற - தேம்பா:26 5/2
பூரண அருளினால் பொலிந்து இன்பு ஆர் அலை - தேம்பா:26 16/3
சாற்று_அரும் குணத்து ஆர் அருள் தாங்கினான் - தேம்பா:26 32/4
நனைய கொம்பு ஆர் குயில் அன்னம் நயப்ப வளர் தேய் மு மதி மற்று - தேம்பா:26 44/3
அவணி ஆர் தனது அரு மகவு ஒளிப்பதும் உணர்ந்தாள் - தேம்பா:26 57/4
கொம்பில் ஆர் குயில் கூவு இசை பாட மேல் - தேம்பா:26 145/2
புனம் சேர்ந்த ஆர் கனி தருவின் பொலிசை மிக்கோன் பொலிவானே - தேம்பா:26 159/4
தேன் கறி கற்று இமிர் வண்டு ஆர் வனத்தின்-நின்று செழு ஞானம் - தேம்பா:26 160/3
இலகி ஆர் இருள் இற்றது போல் என்றான் - தேம்பா:26 182/4
நிதி அகடு ஆர் கொடை நிவலன் நோன்று தேன் - தேம்பா:27 50/2
புதி அகடு ஆர் அணி பொற்பில் ஈன்ற அ - தேம்பா:27 50/3
மறப்பதும் தவிர்ந்து ஆர் வகுத்தார் என்றான் - தேம்பா:27 83/4
பொன் ஆர் மணி பூண் சாயலில் தேம் பூம் கொம்பு அனையார் திரு முகத்தின் - தேம்பா:27 118/1
முன் ஆர் நிற்பார் என்று எவரும் மொழிந்து பனிக்கும் உளத்து எஞ்ச - தேம்பா:27 118/2
தேன் ஆர் அலர் கா இழந்தே தாம் சிந்தை பனிப்ப நாமும் அழ - தேம்பா:27 120/2
கான் ஆர் முள்ளும் கொல் விலங்கும் கடிது இ உலகில் படர்ந்தனவே - தேம்பா:27 120/4
கான் ஆர் கொடி மேல் பூ அனைய கரத்தில் பொலிந்த திருமகனும் - தேம்பா:27 128/1
தேன் ஆர் இ நாடு இறைஞ்சிய பொய் தேவர் ஒளித்த திறம் கண்டேன் - தேம்பா:27 128/3
ஆர் நலம் புதைத்த மெய் நூல் அருச்சனை கொண்டது அன்றே - தேம்பா:27 145/4
மின் ஆர் வேல் ஊன் உமிழ்ந்து ஒழுகும் வேழ மருப்பும் எதிர்த்து - தேம்பா:28 25/1
பொன் ஆர் மணி பூண் அணி சாயல் பூம் கொம்பு அனையார் போர் - தேம்பா:28 25/3
முன் ஆர் நிற்பார் என்று எண்ணி முரிந்து உள் குழைகிற்பேன் - தேம்பா:28 25/4
பேய் முதிர் குலம் யாதோ அ பேய்கள் செய்தவன் ஆர் செய்த - தேம்பா:28 59/3
பேய் வினை வெருவ கண்டு அ பேய்கள் செய்தவன் ஆர் என்றார் - தேம்பா:28 73/1
மெய் ஆர் நல் நூல் வேதம் நகைத்து விழைவு ஒத்த - தேம்பா:28 118/1
மை ஆர் புன் நூல் பல் கதை எண்ணி வடு மல்க - தேம்பா:28 118/2
பொய் ஆர் மை ஆர் தேவரோடு அந்தோ புதவு எய்தி - தேம்பா:28 118/3
பொய் ஆர் மை ஆர் தேவரோடு அந்தோ புதவு எய்தி - தேம்பா:28 118/3
மொய் ஆர் தீயில் மூழ்கினம் என்று உள் முரிகிற்பார் - தேம்பா:28 118/4
விண்டு ஆர் ஏறு உட்பட்டு என அன்னான் விரி நல் நூல் - தேம்பா:28 122/1
மண்டு ஆர் வேட்கை தீ அற இஃதே வழி என்பார் - தேம்பா:28 122/4
உன்ன உள் ஆர் தீ அற உள்ளத்து உறு தண்ணம் - தேம்பா:28 126/2
பொன் ஆர் உலகு ஒப்ப பசும்பொன் இஞ்சி புகை தவழ - தேம்பா:29 20/1
மின் ஆர் மணம் தேக்கி தொழுத தேவர் வெறுத்து அந்தோ - தேம்பா:29 20/2
கொன் ஆர் முனி வேடத்து ஒருவன் மாயை கொடும் சொல்லால் - தேம்பா:29 20/3
பின் நாள் தொடரார் ஆர் பொறுக்கும் தன்மை பிழை என்பாள் - தேம்பா:29 21/4
கள் ஆர் மலர் மணமோ கனல் ஆர் புகையோ கடுத்து ஒருவன் - தேம்பா:29 49/1
கள் ஆர் மலர் மணமோ கனல் ஆர் புகையோ கடுத்து ஒருவன் - தேம்பா:29 49/1
உள் ஆர் வினை முக மேல் உருவும் தன்மைத்து அவன் உணர்ந்த - தேம்பா:29 49/2
எள் ஆர் வினை இரு கண் படம் மேல் கண்டான் இவன் தாதை - தேம்பா:29 49/3
கொள் ஆர் ஆறு இரு பத்து ஆண்டாய் குன்றா குண்ணன் என்பான் - தேம்பா:29 49/4
செம் சேடு உருவோய் தன் செயிர் ஆர் காண்பார் தெளிந்து என்றான் - தேம்பா:29 51/4
உன் அல்லால் இ உரை செய்து உய்வார் ஆர் உன் அரசன் - தேம்பா:29 68/1
தன் அல்லால் விடை இங்கண் சாற்றுவர் ஆர் சடுதி போய் - தேம்பா:29 68/3
ஆர் அறு நூங்கு அடல் தானை அற்று அற கண் இமையா முன் - தேம்பா:29 74/3
கழீஇயின மணி என கசடு அற்று ஆர் அருள் - தேம்பா:29 125/1
தேன் ஆர் தெளி ஆர் திரு ஆர் மொழியார் - தேம்பா:30 20/1
தேன் ஆர் தெளி ஆர் திரு ஆர் மொழியார் - தேம்பா:30 20/1
தேன் ஆர் தெளி ஆர் திரு ஆர் மொழியார் - தேம்பா:30 20/1
கான் ஆர் வழி போவம் என கடலும் - தேம்பா:30 20/3
வான் ஆர் கனமும் கலி மங்குவன - தேம்பா:30 20/4
அடி காணுளி ஆர் உயிர் கண்டது என - தேம்பா:30 30/1
ஆர் வளர் துயர் கொண்டு இஃது ஆங்கு ஆகி நீடு அகன்று போனார் - தேம்பா:30 35/4
ஆர் நலம் பொலிதல் நோக்கீர் ஆய இ வனப்பும் வாட்டி - தேம்பா:30 63/2
கண் மையின் மற்று யாரும் கண்ட தன் பிழை காண்பார் ஆர்
  நுண்மையின் உற்ற பாவம் நுதலி உள் தானே கண்ட - தேம்பா:30 78/1,2
வீங்கி ஆர் அழல் தொல்லையின் மேய்ந்ததே - தேம்பா:30 92/4
வான் ஆர் குடை கொடி மல்க புடை புடை - தேம்பா:30 152/1
கான் ஆர் துயர் இவர் காப்ப கடி நகர் - தேம்பா:30 152/3
கான் ஆர் மலர் அடி கண்டார் புகுதுக - தேம்பா:30 152/4
மஞ்சு ஆர் வரை என மணி பூம் புகை கோயில் - தேம்பா:31 14/2
நெஞ்சு ஆர் அருளொடு நினைத்தே வேண்டினர்-ஆல் - தேம்பா:31 14/4
கருணாகரனே களி ஆலயனே கவின் ஆர் மகனே - தேம்பா:31 24/1
இறந்தான்-கொல்லோ முதல் ஈறு இல்லோன் தனது ஆர் தயையை - தேம்பா:31 25/1
மெய் ஆர் தவமே திருவின் திருவே ஆம் என்போன் வெம் தீ - தேம்பா:31 26/1
மொய் ஆர் வனமே முடுகி முனி ஆயினனோ என்றாள் - தேம்பா:31 26/2
பொய் ஆர் புரையே துடைப்ப பொன்றல் காதலித்தோன் - தேம்பா:31 26/3
அன்று ஆர் இடர் ஆற இவற்கும் அவட்கும் அறைந்தனர்-ஆல் - தேம்பா:31 33/4
பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள் குலமே - தேம்பா:31 43/1
என் ஆர் உயிரே என் நெஞ்சத்து ஆள் அரசே - தேம்பா:31 43/2
புண் நிறத்து ஆர் புரை போக்கி உள் தே அருள் பொழி நீராடல் முதற்கு ஈந்து - தேம்பா:32 43/2
ஆர் ஒலி பரி ஒலி அதிர் கைம்மா ஒலி - தேம்பா:32 58/2
தேன் முழுகும் பூம் பொழில் வாய் சிலீமுகம் ஆர் சிலேசியம் ஆள் செல்வர் ஈட்டம் - தேம்பா:32 77/4
ஆர் பகை காதை கேண்மோ அரும் தவ என்று சொல்வான் - தேம்பா:32 96/3
தாயின் ஆர் அருள் தாங்கிய தன்மையால் - தேம்பா:34 31/2
தீது ஒருங்கும் மலிபு அறியா திளை அருள் ஆர் நெஞ்சத்தான் - தேம்பா:34 42/1
ஆர் நல தவத்தோர் களிப்புறீஇ நிற்ப அன்பு மிக்கு என் மகள் ஈன்ற - தேம்பா:34 45/3
நின்றார் ஒன்றாய் ஆர் புகழ் மாலை நிறை சொன்னார் - தேம்பா:34 53/4
அல் பிழம்பு அற வில் ஆர் மற்று அனைவரும் பினர் வந்து ஆர்ப்ப - தேம்பா:35 40/2
விண்டு ஆர் பைம் பூ வாகையன் இ ஆய் மெலிவு எய்த - தேம்பா:35 56/1
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம் - தேம்பா:35 56/2
மெய் ஆர் துன்பத்து ஒன்று என உன்-பால் விளைவு உண்டோ - தேம்பா:35 57/2
மை ஆர் பெட்பால் தீ வினை செய்த மனு எல்லாம் - தேம்பா:35 57/3
மின் ஆர் மணி ஆர் முடி சூட்டல் வேண்டும் ஐயா என பணிந்தான் - தேம்பா:36 26/4
மின் ஆர் மணி ஆர் முடி சூட்டல் வேண்டும் ஐயா என பணிந்தான் - தேம்பா:36 26/4
ஆர்த்தன உவப்பில் ஆர் ஒளி மகுடம் அரும் தவற்கு அருள் சுதன் புனைந்தான் - தேம்பா:36 29/4
விண் நின்ற ஆர் ஒளி விஞ்சிய மா முடி சூழ் - தேம்பா:36 49/2
நனை ஆர் கொடியோனை நயந்து அணுகி - தேம்பா:36 55/2
நெஞ்சில் தகவு இற்று இழிவு ஆர் நிகரார் - தேம்பா:36 58/1
கூடு ஆர் முகில் ஆர்த்தன கோடை என - தேம்பா:36 64/1
கூடு ஆர் பறவை குலம் அஞ்சி எழ - தேம்பா:36 64/3
கூடு ஆர் படையால் புவி கூசினதே - தேம்பா:36 64/4
அங்கு ஆர் அரசர் கடல் மீது அவிர - தேம்பா:36 70/2
அன்னார் அவை ஆரணர் ஆர் அவை மெய் - தேம்பா:36 72/1
பொன் ஆர் அடி பொற்புற நண்ணினரே - தேம்பா:36 72/4
மின் ஆர் மன்னர் கோல் ஒளி அஞ்சா விரியா பூ - தேம்பா:36 75/3
சேல் ஆர் முந்நீர் சூழ் புவி ஆண்டே செயிர் மொய்க்கும் - தேம்பா:36 76/3
மின் ஆர் விண்ணும் மண்ணும் ஒருங்கே வினை தீர்ப்ப - தேம்பா:36 78/2
மஞ்சிற்கு எஞ்சாது ஆர் அருள் பெய்த வளம் ஓர்ந்து என் - தேம்பா:36 79/3
கற்றை ஆர் இரதத்து உயிர் என பகல் செய் கதிர் என கடி ஒளி வடிவம் - தேம்பா:36 110/2
முற்றை ஆர் மணி பொன் முத்து அலர் வழங்க முரசு இனம் முகிலினும் முழங்க - தேம்பா:36 110/3
ஆர் விளைவு உற வட கிழக்கு அமைத்தவே - தேம்பா:36 126/4
சாம்பா அணி தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார் என மறைந்தார் - தேம்பா:36 132/4

பார் ஆர் நிடத பதி நளன் சீர் வெண்பாவால் - நள:7/1
பேர் ஆர் புகழேந்தி பேசினான் தார் ஆர் - நள:7/2
பேர் ஆர் புகழேந்தி பேசினான் தார் ஆர்
   செழியனையும் சென்னியையும் சேர திறை கொள் - நள:7/2,3
ஆர் மடந்தை என்றான் அனங்கன் சிலை வளைப்ப - நள:37/3
மை ஆர் வேல் கண்ணாள் வன முலை மேல் ஆர் அழலை - நள:108/3
மை ஆர் வேல் கண்ணாள் வன முலை மேல் ஆர் அழலை - நள:108/3
ஆர் உயிர்க்கும் உண்டோ அரண் - நள:131/4
ஆர் உயிரின் தாயே அறத்தின் பெரும் தவமே - நள:233/1
பண்டை வினை பயனை பாரிடத்தில் ஆர் கடப்பார் - நள:272/1
போர் ஆர் விழியாள் புலர்ந்து - நள:298/4
ஆர் உயிரும் நானும் அழியாமல் ஐயா இ - நள:307/1
எ குலத்தாய் ஆர் மடந்தை யாது உன் ஊர் யாது உன் பேர் - நள:313/1
அடைந்தான் அடைதலுமே ஆர் அழலோன் அஞ்சி - நள:338/3
வண்டு ஆர் வள வயல் சூழ் மள்ளுவ நாட்டு எம் கோமான் - நள:381/1
ஒளி ஆர் வேல் கண்ணாள் மேல் உள்ளம் துரப்ப - நள:385/3
வார் ஆர் முலையாள் அ மன்னவனை காணாமல் - நள:407/3

கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் - பால:1 13/3
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை - பால:4 3/2
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட - பால:6 12/3
ஆர் என்பான் அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம் - பால:8 7/3
அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி - பால:10 30/2
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் - பால:14 67/4
கோவை ஆர் வட கொழும் குவடு ஒடிதர நிவந்த - பால:15 1/1
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும் - பால:16 36/1
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய - பால:16 37/1
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின் அங்கம் எங்கும் - பால:16 37/3
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும் - பால:16 47/2
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் - பால:17 18/4
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச - பால:17 19/1
சந்து ஆர் கொங்கை தாழ் குழலாள்-பால் தளர்வானும் - பால:17 25/4
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் - பால:19 59/3
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் - பால:20 32/2
சேமத்து ஆர் வில் இறுத்தது தேரும்-கால் - பால:21 39/2
தூமத்து ஆர் குழல் தூ மொழி தோகை-பால் - பால:21 39/3
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண - பால:22 28/3
அரும் கலன் அணங்கு அரசி ஆர் அமிழ்து அனைத்தும் - பால:22 38/3
கருள் ஆர் கடலோ கரை காண்பு அரிதால் - பால:23 9/3
கல் ஆர் மலர் சூழ் கழி வார் பொழிலோடு - பால:23 18/1
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம் - பால:23 18/3
இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும் - பால:23 25/2
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா - பால:24 24/2
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி - பால-மிகை:0 10/2
வாழ்வு ஆர் தரு வெண்ணெய் நல்லூர் சடையப்பன் வாழ்த்து பெற - பால-மிகை:0 17/1
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமைய பாடினான் - பால-மிகை:0 22/3
கார் ஆர் காகுத்தன் கதை - பால-மிகை:0 22/4
துறந்து மாண்டனர் ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார் - பால-மிகை:9 23/4
பொரு புனல் கொடி வரின் அவள் வேகம் ஆர் பொறுப்பார் - பால-மிகை:9 47/2
ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் உயர் கேள்வர் - அயோ:3 41/1
வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி - அயோ:3 47/2
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே - அயோ:4 32/1
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே - அயோ:4 32/2
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே - அயோ:4 32/2
இணர் ஆர் தரு தார் அரசன் இடரால் அயர்வான் வினையேன் - அயோ:4 54/3
ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும் - அயோ:4 62/1
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற - அயோ:4 64/1
பூண் ஆர் அணியும் முடியும் பொன் ஆசனமும் குடையும் - அயோ:4 65/1
பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான் - அயோ:4 72/1
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள் - அயோ:4 72/2
மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய் - அயோ:4 80/2
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் - அயோ:4 80/4
வார் ஆர் முலையாரும் மற்றுள்ள மாந்தர்களும் - அயோ:4 92/1
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் - அயோ:4 102/4
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் - அயோ:4 104/4
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள் - அயோ:4 145/4
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் - அயோ:4 152/4
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் - அயோ:6 29/2
அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர் - அயோ:7 14/3
கை ஆர் கல்லை புல் அடகு உண்ண கலம் ஏந்தி - அயோ:11 79/2
வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் என்ன - அயோ:11 80/1
ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம் - அயோ:11 81/3
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ - அயோ:13 17/4
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார் - அயோ:13 37/3
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும் - அயோ:13 64/2
கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன் - அயோ:13 68/2
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் - அயோ:13 68/4
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான் - அயோ:14 58/4
அந்த நல் பெரும் குரவர் ஆர் என - அயோ:14 105/1
மின் ஆர் புரி நூல் மார்பன் விருத்தேசனன் மெய் புதல்வன் - அயோ-மிகை:4 5/2
அங்கணே துயில் அமைய ஆர் இருள் - அயோ-மிகை:14 6/2
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா - ஆரண்:1 40/1
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ - ஆரண்:1 59/2
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை-தாம் - ஆரண்:2 11/2
பொன் ஆர் சடை மாதவ போதுதியால் - ஆரண்:2 15/4
துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரை செற்றும் சுருதி பெரும் கடலின் சொல் பொருள் கற்பித்தும் - ஆரண்:2 26/1
திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் - ஆரண்:2 26/2
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா - ஆரண்:2 26/3
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் - ஆரண்:3 22/3
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் - ஆரண்:3 38/4
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார் - ஆரண்:6 57/1
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குமால் - ஆரண்:6 70/4
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும் - ஆரண்:6 90/2
ஆர்த்து எழுந்தது இறுதியில் ஆர் கலி - ஆரண்:7 25/3
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல் - ஆரண்:7 88/3
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ - ஆரண்:8 2/4
அனிக வெம் சமத்து ஆர் உயிர் போக தான் - ஆரண்:9 26/3
அ புறத்து அண்டத்தோர் ஆர் என்றார் சிலர் - ஆரண்:10 29/4
ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப்போய் - ஆரண்:10 31/2
அந்தம் இல் தவ தொழிலர் ஆர் அவரை ஒப்பார் - ஆரண்:10 53/4
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஐயா - ஆரண்:10 55/3
ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம் - ஆரண்:10 60/2
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி - ஆரண்:10 68/1
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே - ஆரண்:10 82/4
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர்
  பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் - ஆரண்:10 97/3,4
கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க - ஆரண்:10 104/1
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே - ஆரண்:10 104/2
அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான் - ஆரண்:10 111/4
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு - ஆரண்:10 115/1
சந்து ஆர் தடம் தோளோடும் தாழ் தட கைகளோடும் - ஆரண்:10 149/2
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான் - ஆரண்:10 155/4
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண - ஆரண்:10 156/4
ஆணிக்கு அமை பொன் கை மணி சுடர் ஆர் விளக்கம் - ஆரண்:10 158/1
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி - ஆரண்:10 163/3
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ - ஆரண்:11 16/4
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார் - ஆரண்:11 24/3
செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா - ஆரண்:11 31/3
தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன் - ஆரண்:11 35/2
ஆம் வகை ஆயிற்று இல்லை ஆர் விதி விளைவை ஓர்வார் - ஆரண்:11 38/3
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான் - ஆரண்:11 77/3
எண்மை ஆர் உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர் - ஆரண்:12 5/1
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் - ஆரண்:12 17/3
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும் - ஆரண்:12 63/2
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால் - ஆரண்:12 73/2
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை - ஆரண்:12 81/2
உய்யாமல் மலைந்து உமர் ஆர் உயிரை - ஆரண்:13 10/1
எய்ந்து ஆர் கதி தேர் பரி எட்டினொடு எட்டும் எஞ்சி - ஆரண்:13 38/2
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள் - ஆரண்:13 39/3
விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன் மண்ணின் விண்ணோர் - ஆரண்:13 43/1
கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா - ஆரண்:13 71/3
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது என்று அயிர்த்தார் - ஆரண்:13 81/2
கண்டு அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர் கவின் ஆர்
  விண் தலம் துறந்து இறுதியின் விரி கதிர் வெய்யோன் - ஆரண்:13 89/1,2
தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர் - ஆரண்:14 13/2
வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால் - ஆரண்:14 65/1
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய் - ஆரண்:14 67/1
ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான் - ஆரண்:15 18/1
மூண்டால் முன்னே ஆர் உயிரொடும் முடியாதே - ஆரண்:15 26/3
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால் - ஆரண்:15 30/4
பண்பு ஆர் அறிவார் பகராய் பரமேட்டி - ஆரண்:15 45/4
அண்டர் நாதனை இவன் ஆர் என்று உன்னுவாள் - ஆரண்-மிகை:6 1/4
நலம் கொள் சுடர் தொகை பரப்பும் நவமணி பத்தியின் இழைத்த நலம் ஆர் கச்சு - ஆரண்-மிகை:10 3/3
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க - கிட்:1 23/1
எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால் ஈது இசை அன்றோ - கிட்:1 23/3
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி - கிட்:1 34/1
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ - கிட்:2 18/4
புண் உளார் ஆர் உயிர்க்கு அமுதமே போல் உளார் - கிட்:3 3/4
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் - கிட்:3 25/3
அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர் துணைவன் - கிட்:4 18/1
தங்கு சாலம் மூலம் ஆர் தமாலம் ஏலம் மாலை போல் - கிட்:7 1/3
இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல் - கிட்:7 7/2
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி - கிட்:7 28/3
ஆழி கிளர் ஆர் கலிக்கு ஐம்-மடங்கு ஆர்ப்பின் ஓசை - கிட்:7 52/2
ஊற்றம் உற்று உடையான் உனக்கு ஆர் அமர் - கிட்:7 103/1
அருமை உம்பி-தன் ஆர் உயிர் தேவியை - கிட்:7 107/3
ஆதலானும் அவன் எனக்கு ஆர் உயிர் - கிட்:7 108/1
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் - கிட்:7 147/4
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா - கிட்:7 149/4
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே - கிட்:8 4/3
அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று - கிட்:8 7/1
வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய் - கிட்:8 8/1
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின் - கிட்:8 10/1
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் - கிட்:8 20/4
வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை வெகுண்டு - கிட்:10 52/1
அயில் ஏய் விழியார் விளை ஆர் அமுதின் - கிட்:10 53/1
தோற்றுவாள் அல்லள் இ துன்பம் ஆர் இனி - கிட்:10 92/3
வாலி ஆர் உயிர் காலனும் வாங்க வில் - கிட்:11 29/1
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் - கிட்:11 54/2
காட்டினை எனின் எமை கடலின் ஆர் அமிர்து - கிட்:11 112/3
தாங்கும் ஆர் அகில் தண் நறும் சந்தனம் - கிட்:13 16/1
இன்பம் ஆய் ஆர் உயிர்க்கு இனியை ஆயினை இனி - கிட்:13 70/3
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ - கிட்:16 35/3
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா - கிட்:16 41/3
ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆர் உயிர் அம்மா - கிட்:17 3/4
யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து இங்கு இனி யாரை - கிட்:17 7/1
மற்றும் இ உலகத்து உள்ள முனிவர் வானவர்கள் ஆர் இ - கிட்-மிகை:2 3/1
விண்ணுள் வாலி-தன் ஆர் உயிர் விடுக்கும் என்று உலகின் - கிட்-மிகை:3 7/3
அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன் - கிட்-மிகை:7 3/4
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே - சுந்:1 8/4
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர் - சுந்:1 21/2
பொன் ஆர் சிகரத்து இறை ஆறினை போதி என்னா - சுந்:1 45/3
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் - சுந்:1 58/4
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள் - சுந்:1 63/3
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு - சுந்:2 2/2
சகர வேலையின் ஆர் கலி திசைமுகம் தடவும் - சுந்:2 27/2
பாகு ஆர் இஞ்சி பொன் மதில் தாவி பகையாதே - சுந்:2 80/3
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி - சுந்:2 83/2
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ - சுந்:2 97/3
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர் - சுந்:2 166/2
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் - சுந்:2 197/4
பன்னி வாய் புலர்ந்து உணர்வு தேய்ந்து ஆர் உயிர் பதைப்பாள் - சுந்:3 14/4
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் - சுந்:3 15/1
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர் - சுந்:3 29/3
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும் - சுந்:3 125/3
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி - சுந்:3 139/3
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் - சுந்:3 139/4
நெறிந்து ஆர் ஓதி பேதையும் ஆவி நிலை நின்றாள் - சுந்:3 153/4
தருமே தமியேன் எனது ஆர் உயிர் தான் - சுந்:4 3/2
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி - சுந்:4 88/2
சந்து ஆர் தடம் குன்றினில் தன் உயிர் காதலோனும் - சுந்:4 89/3
ஆயானை ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின் - சுந்:4 93/1
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் - சுந்:5 21/4
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால் - சுந்:5 25/4
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் - சுந்:5 67/1
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே - சுந்:6 37/4
கைதானே பொரு படை ஆக தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான் - சுந்:10 33/4
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று - சுந்:10 36/3
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார் - சுந்:10 40/2
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் - சுந்:10 40/3
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் - சுந்:10 41/4
கூட்டி நின் ஆர் உயிர் துணைவன் எம் கோனை நீ - சுந்:10 46/3
ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு - சுந்:12 33/1
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ - சுந்:12 34/4
காட்டினன் அனுமனை கடலின் ஆர் அமுது - சுந்:12 61/3
ஆர் உனை விடுத்தவர் அறிய ஆணையால் - சுந்:12 68/2
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் - சுந்:12 91/4
போத நீதியர் ஆர் உளர் போயினார் - சுந்:12 95/2
விண்ணினை வேலை விளிம்பு ஆர்
  மண்ணினை ஓடி வளைந்தார் - சுந்:13 46/1,2
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா - சுந்:14 14/3
அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக - சுந்:14 39/1
கல் ஆர் சிமய தடம் கைத்தலம் நீண்டு காட்டி - சுந்-மிகை:1 11/2
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து எழுகின்றது என்ன - சுந்-மிகை:1 11/4
தவம் தந்த நெஞ்சின் தனது ஆர் உயிர் தம்பியோடும் - சுந்-மிகை:4 8/1
பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக - சுந்-மிகை:12 4/3
கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் - யுத்1:1 6/4
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் - யுத்1:3 17/4
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் - யுத்1:3 49/4
கிளவி ஆர் பொருள்களான் கிளக்குறாதவன் - யுத்1:3 62/3
பொன் ஆர் ஓடை பொருந்த நிலத்தின் - யுத்1:3 94/2
மோதுற்று ஆர் திரை வேலையில் மூழ்கான் - யுத்1:3 103/1
மீதுற்ற ஆர் சிலை மீது கிடந்தான் - யுத்1:3 103/2
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே - யுத்1:3 109/4
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் - யுத்1:3 115/3
ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சி புக்க - யுத்1:3 129/1
ஆர் உயிர் கொடுத்து காத்தார் எண்_இலா அரசர் அம்மா - யுத்1:4 116/4
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ என்றான் - யுத்1:4 134/4
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் - யுத்1:4 151/4
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த - யுத்1:5 65/3
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என - யுத்1:8 68/3
அது கொடு என் சில ஆர் அமர் மேல் இனி - யுத்1:9 52/1
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க - யுத்1:9 88/2
சீதை சீதை என ஆர் உயிர் தேய - யுத்1:11 9/2
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா - யுத்1:12 48/3
ஆர் இனி ஏக தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார் - யுத்1:14 9/3
பற்றி நூக்கலும் பார்_மகள் பரிவுடன் நார் ஆர்
  நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள் - யுத்1-மிகை:3 16/3,4
சென்று தீயவர் ஆர் உயிர் சிந்தின - யுத்2:15 23/3
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால் - யுத்2:15 42/3
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் - யுத்2:15 87/1
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் - யுத்2:15 87/1
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல் - யுத்2:15 92/3
கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே - யுத்2:15 96/4
பணை ஆர் புயம் உடையானிடை சில இ மொழி பகர்வான் - யுத்2:15 180/4
அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற - யுத்2:15 254/1
தெரிகிலர் அமரரேயும் ஆர் அவன் செய்கை தேர்வார் - யுத்2:16 21/2
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார் - யுத்2:16 25/4
துறப்பது துணியார் தங்கள் ஆர் உயிர் துறந்த போதும் - யுத்2:16 128/2
சங்கத்து ஆர் குரங்கு சாய தாபதர் என்ன தக்கார் - யுத்2:16 201/1
அன்னைமீர் ஐயன்மீர் என் ஆர் உயிர் தங்கைமீரே - யுத்2:17 44/1
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் - யுத்2:17 45/4
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் - யுத்2:17 49/4
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் - யுத்2:18 6/1
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால் - யுத்2:18 14/4
கா ஆர் கரி தேர் பரி காவலின் என்று - யுத்2:18 15/3
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான் - யுத்2:18 33/3
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும் - யுத்2:18 39/2
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய - யுத்2:18 57/3
ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்வாய் - யுத்2:18 59/2
மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெம் - யுத்2:18 60/3
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் - யுத்2:18 63/3
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா - யுத்2:18 66/3
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க - யுத்2:18 245/3
விண்-மேல் நெடிது ஓடினர் ஆர் உயிர் விட்டார் - யுத்2:18 253/1
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரை கூவாயோ - யுத்2:18 270/2
ஆர் கொன்றவர் என்றலுமே அதிகாயன் என்னும் - யுத்2:19 6/1
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் - யுத்2:19 11/2
மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை - யுத்2:19 13/1
தார் ஆர் புரவி கடல் பின் செல தானை வீர - யுத்2:19 26/3
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே - யுத்2:19 88/3
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார் - யுத்2:19 116/3
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான் - யுத்2:19 153/3
ஆனையும் தடம் தேரும் தன் ஆர் உயிர் - யுத்2:19 154/1
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் - யுத்2:19 166/4
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல் - யுத்2:19 195/1
ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் - யுத்2:19 211/4
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல் - யுத்2:19 218/1
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:19 251/4
அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:19 252/4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:19 253/4
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:19 254/4
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:19 255/4
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:19 256/4
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:19 257/4
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:19 258/4
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:19 259/4
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:19 260/4
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் - யுத்2:19 261/4
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் - யுத்2:19 271/1
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தால் என உய்ந்தான் - யுத்2-மிகை:15 26/4
ஆர் இனி தடுக்க வல்லார் என பதைத்து அமரர் எல்லாம் - யுத்2-மிகை:18 26/2
அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய் - யுத்3:20 4/1
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார் - யுத்3:20 8/4
ஒட்டிய போரினில் ஆர் உளர் ஓடார் - யுத்3:20 15/2
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள் - யுத்3:20 62/4
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் - யுத்3:20 66/4
தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை - யுத்3:20 82/1
போழ்வித்தனன் ஆர் உயிர் போயினனால் - யுத்3:20 85/4
ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால் - யுத்3:20 97/2
அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்-மேல் - யுத்3:21 4/2
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா - யுத்3:22 34/1
ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர் - யுத்3:22 37/3
ஆக்கவும் கற்றிலன் அமரில் ஆர் உயிர் - யுத்3:22 38/3
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் - யுத்3:22 181/2
அள்ளி நுங்கலாம் ஆர் இருள் பிழம்பினை அழித்தான் - யுத்3:22 186/2
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் - யுத்3:22 190/4
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி விளைந்தபடி - யுத்3:23 1/2
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர - யுத்3:23 1/3
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் - யுத்3:23 1/4
நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி நெடும் - யுத்3:23 18/1
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால் - யுத்3:23 18/2
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே - யுத்3:23 27/2
மங்கலம் நீங்கினாரை ஆர் உயிர் வாங்கினாரை - யுத்3:23 29/1
அரிகின்ற துன்பத்தாலும் ஆர் உயிர்ப்பு அடங்கி ஒன்றும் - யுத்3:24 17/2
மண்டு அமர் புரிந்தனென் வலியின் ஆர் உயிர் - யுத்3:24 72/2
பாரினில் கிழிய வீசின் ஆர் உளர் பிழைக்கல்-பாலார் - யுத்3:26 4/2
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை - யுத்3:26 91/4
கான் ஆர் நெறியும் மலையும் கழிய - யுத்3:27 15/3
பல் ஆர் படை நின்றது பல் பிறை வெண் - யுத்3:27 29/2
ஆர் படை நின்றது பல் படையே - யுத்3:27 29/4
சேறு ஆர் குருதி கடலில் திடராய் - யுத்3:27 31/3
மின் ஆர் கணை தாள் அற வீச விழுந்து - யுத்3:27 36/1
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா - யுத்3:27 116/3
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து - யுத்3:27 139/3
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார் - யுத்3:27 145/2
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான் - யுத்3:27 149/4
ஆர் உளர் அரக்கர் நிற்பார் அரசு வீற்றிருக்க ஐயா - யுத்3:27 165/4
ஆர் அழியாத குலத்து அந்தணன் அருளின் ஈந்த - யுத்3:28 36/1
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க - யுத்3:29 35/3
கட்டு ஆர் சிலை கரு ஞாயிறு புரைவான் கடையுகநாள் - யுத்3:31 108/2
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர்
  நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன் - யுத்3:31 143/1,2
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் - யுத்3:31 147/1
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் - யுத்3:31 152/1
அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல் - யுத்3:31 178/2
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம் - யுத்3:31 187/2
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும் - யுத்3:31 193/3
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால் - யுத்3-மிகை:20 12/4
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர் என அமலன் சொன்னான் - யுத்3-மிகை:21 3/4
வெறி ஆர் குழல் சீதையை விட்டு அகல - யுத்3-மிகை:28 3/2
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு நின் - யுத்3-மிகை:28 3/3
வண்டு ஆர் குழலார் மலர் மாதினை நீ - யுத்3-மிகை:28 4/1
நிலை அறுந்தவரும் அன்றி நின்றது ஆர் - யுத்3-மிகை:31 36/4
கடு வைத்து ஆர் களன் கை படு கார் முகம் - யுத்3-மிகை:31 43/1
அரக்கன் சேனையும் ஆர் உயிர் வழங்குவான் அமைந்த - யுத்4:32 7/1
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ - யுத்4:32 39/1
கோ ஆர் விண்-வாய் வெண் கொடி திண் பாயொடு கூட - யுத்4:33 8/2
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு ஆர் புகல என்றான் - யுத்4:36 18/3
தொல் ஆர் மிடல் வளை சக்கரம் சூலம் இவை தொடக்கத்து - யுத்4:37 54/3
நீலம் கொண்டு ஆர் கண்டனும் நேமி படையோனும் - யுத்4:37 125/1
சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப தழல் சிந்த - யுத்4:37 132/1
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல் - யுத்4:37 143/1
மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர் - யுத்4:37 159/1
ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான் - யுத்4:37 185/4
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க - யுத்4:38 8/3
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் - யுத்4:38 28/1
அன்னது ஆர் சொல்ல ஈது அறைதியால் என்றான் - யுத்4:40 77/4
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து என்றாள் - யுத்4:41 27/4
சூது ஆர் முலை தோகையை நோக்கி முன் தோன்று சூழல் - யுத்4:41 31/2
பருகும் ஆர் அமிழ்து ஒத்து உளம் களித்தனன் பரிவால் - யுத்4:41 38/4
அரு வினை வந்து எய்திய-போது ஆர் அரசே உன்-தன் - யுத்4-மிகை:38 2/1
அரு வினை வந்து எய்திய போழ்து ஆர் தடுப்பார் ஆர் அதனை அறிவார் வீட்டின் - யுத்4-மிகை:38 3/1
அரு வினை வந்து எய்திய போழ்து ஆர் தடுப்பார் ஆர் அதனை அறிவார் வீட்டின் - யுத்4-மிகை:38 3/1
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால் - யுத்4-மிகை:41 3/2
ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர் - யுத்4-மிகை:41 71/1
தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார் - யுத்4-மிகை:41 96/2
ஆர் இது தெரியகிற்பார் காலத்தின் அளவை அம்மா - யுத்4-மிகை:41 125/4
பொன்றுமாறு அன்றி ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ - யுத்4-மிகை:41 151/4
ஆர் அருளோடு நீட வணங்கினான் அவனும் ஆசி - யுத்4-மிகை:41 177/2
கை ஆர் வெய்ய சிலை கருணாகரற்கு காதல் உடை தோழ - யுத்4-மிகை:41 186/1
மை ஆர் சிருங்கவேபுரம் உடையாய் மிகு கோசலை களிறு - யுத்4-மிகை:41 186/2
மை ஆர் நிறத்தான் வந்தொழிந்தான் மிதிலை வல்லி அவளுடனே - யுத்4-மிகை:41 186/3
ஆர் உனை உரை என அனுமன் கூறுவான் - யுத்4-மிகை:41 187/1
ஆர் இருள் அகலும்-காலை அமலனும் மறையோன் பாதம் - யுத்4-மிகை:41 208/1
அங்கு அதன் பெருமை மண் மேல் ஆர் அறிந்து அறையகிற்பார் - யுத்4-மிகை:42 53/4
ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் அன்று செய்த - யுத்4-மிகை:42 55/2
பரதனை இளைய கோவை சத்துருக்கனனை பண்பு ஆர்
  விரத மா தவனை தாயர் மூவரை மிதிலை பொன்னை - யுத்4-மிகை:42 69/1,2

பொற்பு ஆர் உறந்தை அகம் - முத்தொள்:44/4
கல் ஆர் தோள் கிள்ளி களிறு - முத்தொள்:48/4
அளியானேல் அன்று என்பார் ஆர் - முத்தொள்:58/4
கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா - முத்தொள்:64/2
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக - முத்தொள்:66/1
மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர்
   வரி வளை நின்றன வையையார் கோமான் - முத்தொள்:80/2,3
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் - முத்தொள்:93/1
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் - முத்தொள்:93/2

பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்டவாறும் - சிந்தா:0 24/4
வீணை கிழவன் விருந்து ஆர் கதி சென்றவாறும் - சிந்தா:0 28/4
நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன் - சிந்தா:1 157/1
அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமை தோள் - சிந்தா:1 170/2
மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே - சிந்தா:1 170/4
கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள் - சிந்தா:1 191/2
ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செம் கணனானும் - சிந்தா:1 212/1
கலை ஆர் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ் - சிந்தா:1 216/1
முலை ஆர் தடமும் முனியாது படிந்து - சிந்தா:1 216/2
மலை ஆர் மணி மார்பன் மகிழ்ந்தனனே - சிந்தா:1 216/4
கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செ வாய் விளர்த்து கண் பசலை பூத்த காமம் - சிந்தா:1 231/1
விரும்பு ஆர் முலை கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள் பெய்து இருந்த பொன் செப்பே போல் - சிந்தா:1 231/2
ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும் - சிந்தா:1 288/1
தேன் ஆர் மலர் சோலை செ வரையின் மேல் சிறு பிடிகள் போல துயர் உழந்து தாம் - சிந்தா:1 296/2
கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல் - சிந்தா:1 342/3
பூ பெய் செம்பொன் கோடிகமும் பொன் ஆர் ஆலவட்டமும் - சிந்தா:1 352/1
பைம்பொன் பூமி பல் கதிர் முத்து ஆர் சகடமும் - சிந்தா:1 363/2
காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர்
   பூமகள் பொலிந்த மார்பன் புவி மிசை திலகம் ஒத்தான் - சிந்தா:1 370/3,4
ஆர் அமிர்து அரிதில் பெற்றாம் அதன் பயன் கோடல் தேற்றாம் - சிந்தா:1 377/2
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர் - சிந்தா:2 427/3
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை - சிந்தா:2 481/3
பால் பரந்து அன்ன பட்டு ஆர் பூ அணை பசும்பொன் கட்டில் - சிந்தா:3 541/1
பல் வினை பவள பாய் கால் பசு மணி இழிகை வம்பு ஆர்
   நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலை கண்ணாடி - சிந்தா:3 558/1,2
ஈர் அலங்கல் ஏந்து வேல் ஆர் அலங்கல் மார்பினான் - சிந்தா:3 576/1
ஊட்டி அன்ன உருக்கு அரக்கு ஆர் அடி - சிந்தா:3 642/1
தாம்தாம் தாம் என தாழ்ந்த பொன் மேகலை தாம அரங்கின் மேல் தாது ஆர் முல்லை - சிந்தா:3 680/2
வரி நிற வண்ண மாலை வலம்பட மிலைச்சி வாள் ஆர்
   திரு நிற முகத்திற்கு ஏற்ப செம்பொன் ஓர் ஓலை சேர்த்தி - சிந்தா:3 696/2,3
தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான் - சிந்தா:3 726/4
ஐம் தலை அரவின் சீற்றத்து ஆர் அழல் குளிக்கலுற்றார் - சிந்தா:3 746/4
ஆய்ந்த அம்பினுக்கு ஆர் இரை ஆகிய - சிந்தா:3 759/3
ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன் - சிந்தா:3 828/1
ஊறி தேன் துளித்து ஒண் மது ஆர் மணம் - சிந்தா:4 872/2
மணி ஆர் வளை சேர் முன்கை வலனும் இடனும் போக்கி - சிந்தா:4 925/2
அணி ஆர் கோதை பூம்பந்து ஆடும் அவளை காண்-மின் - சிந்தா:4 925/4
ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல - சிந்தா:4 930/2
தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமல பள்ளி - சிந்தா:4 930/3
நீல துகிலில் கிடந்த நிழல் ஆர் தழல் அம் மணிகள் - சிந்தா:4 931/1
திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இளையாட்கு உடைந்து தேன் ஆர்
   முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கும் மார்பினன் ஐந்நூற்று நால்வர் - சிந்தா:4 985/2,3
குன்றாது கூடுக என கூறி முத்த ஆர் மணல் மேல் - சிந்தா:4 1037/3
கழை முற்று தீம் தேன் கரும்பு ஆர் வயல் ஐந்து மூதூர் - சிந்தா:4 1064/3
போது ஆர் குழலாள் புணர் மென் முலை பாய - சிந்தா:4 1066/2
தாது ஆர் கமழ் தார் மது விண்டு துளிப்ப - சிந்தா:4 1066/3
பொன் ஆர் அரி கிண்கிணி பூசல் இடவே - சிந்தா:4 1067/4
கம்பு ஆர் களி யானை கலக்க மலங்கி - சிந்தா:4 1068/1
மின் ஆர் இள மென் முலை வேய் மருள் மென் தோள் - சிந்தா:4 1073/2
பொன் ஆர் கொடியே புகழின் புகழ் ஞாலம் - சிந்தா:4 1073/3
வாள் ஆர் மணி பூண் அவன் மாதர் அம் பாவை-தன்னை - சிந்தா:4 1074/3
தோள் ஆர் முத்தும் தொல் முலை கோட்டு துயல் முத்தும் - சிந்தா:4 1093/1
வாள் ஆர் உண்கண் வந்து இழி முத்தும் இவை சிந்த - சிந்தா:4 1093/2
ஆர் கலி யாணர் மூதூர் அழுது பின் செல்ல செல்வான் - சிந்தா:4 1116/3
கார் ஆர் பூம் பிண்டி கடவுள் நீ அன்றே - சிந்தா:5 1247/4
வாள் கண் நோக்கு எனும் வை எயிற்று ஆர் அழல் - சிந்தா:5 1292/3
அளித்த காதலொடு ஆடும் என் ஆர் உயிர் - சிந்தா:5 1367/3
பனி ஆர் மலர் மேல் படு வண்டு இனமே - சிந்தா:5 1375/4
வினை ஆர் எரி பூண் முலை கண் குளிர - சிந்தா:5 1380/2
அரிய கொள்கையர் ஆர் அழல் ஐந்தினுள் - சிந்தா:6 1423/1
அல்லியும் புல்லும் உண்டு ஆங்கு ஆர் அழல் ஐந்துள் நின்று - சிந்தா:6 1430/1
ஆயிரத்தெட்டு நேர்ந்த ஆர் அமுது அடிசில் ஊட்டி - சிந்தா:6 1453/2
யாதும் நீ கவல வேண்டா ஆர் அழகு உடைய நம்பி - சிந்தா:6 1456/3
தேவர் பெருமானை தேன் ஆர் மலர் சிதறி - சிந்தா:6 1467/3
வாக்கு அணங்கு ஆர் மணி வீணை வல்லாற்கு அவள் - சிந்தா:6 1473/1
வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடும் தோளி ஓர் - சிந்தா:6 1473/3
அம் கதிர் பொன் கலத்து ஆர் அமிர்து ஏந்தினர் - சிந்தா:6 1477/3
வனம் ஆர் வழையே வரையே திரையே - சிந்தா:6 1519/2
இழுது ஆர் சுடர் வேல் இளையான் அகலத்து - சிந்தா:6 1523/1
நடை மாண் அனமே நலம் ஆர் கிளியே - சிந்தா:6 1526/2
மட்டு ஆர் பூம் பிண்டி வளம் கெழு முக்குடை கீழ் மாலே கண்டீர் - சிந்தா:6 1549/1
அறிவன் அல்லது அங்கு ஆர் சரண் ஆகுவார் - சிந்தா:7 1633/4
வண்டு ஆர் சோலை வார் மணம் நாற புகுகின்றான் - சிந்தா:7 1636/3
காசில் மட்டு ஒழுக பூத்த அழிஞ்சில் கண் ஆர் கவின் கொண்டன - சிந்தா:7 1649/3
மண் ஆர் வேல் கண் துயிலா தோழி மருள்வேனோ - சிந்தா:7 1699/4
ஆர் அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே - சிந்தா:7 1720/1
அழகிதா பறப்பதே போலவும் ஆர் புயல் - சிந்தா:7 1838/2
ஆர் பொன் அடி சூழ் மணி அம் கழல் ஆனை வேந்தன் - சிந்தா:7 1869/2
வண்ண ஆர் குழல் ஏழையர் வாள் நெடும் - சிந்தா:8 1949/3
வார் உடுத்த வெம் முலைய வண்டு ஆர் பூ கோதையை - சிந்தா:8 1970/1
வாள் ஆர் மதி முகத்த வாளோ வடு பிளவோ - சிந்தா:8 1972/1
தாள் ஆர் கழுநீரோ நீலமோ தாமரையோ - சிந்தா:8 1972/2
வான் ஆர் கமழ் மதுவும் சாந்தும் ஏந்தி மது துளித்து வண்டும் சுரும்பும் மூசும் - சிந்தா:9 2065/1
தேன் ஆர் பூங்கோதாய் நினக்கு காமன் சிலை இரண்டும் செவ்வனே கோலி தந்தான் - சிந்தா:9 2065/2
பொன் ஆர் கலையினர் பொன் பூம் சிலம்பினர் - சிந்தா:10 2128/2
மின் ஆர் குழையினர் கோதையர் வீதியுள் - சிந்தா:10 2128/3
தேன் ஆர் மலர் ஈர்த்து ஒழுக சிலம்பில் சிலம்பும் - சிந்தா:10 2137/3
கான் ஆர் மயிலின் கணம் போல் கலுழ்வுற்றது அன்றே - சிந்தா:10 2137/4
ஆர் மத களிற்று வேந்தர்க்கு அரு நகையாக வீழ்ந்தான் - சிந்தா:10 2183/4
கனைக்கும் சுரும்பு ஆர் மாலை கமழ மதுவும் தேனும் - சிந்தா:10 2194/2
இனிதினின் மலர்ந்த ஏர் ஆர் தாமரை காடு போன்றார் - சிந்தா:10 2199/4
ஆர் அழல் எங்ஙனம் கான்றிடும் அங்ஙனம் - சிந்தா:10 2208/2
ஆர் ஒளி அமைந்தன ஆய் பொன் சூட்டின - சிந்தா:10 2229/2
எரிந்து ஆர் அயில் இடை போழ்ந்தமை உணராது அவன் நின்றான் - சிந்தா:10 2265/3
மை ஆர் விசும்பின் மதி வீழ்வது போல வீழ்ந்தான் - சிந்தா:10 2322/4
கூடு ஆர் புலியும் முழை கோளரி ஏறும் அன்ன - சிந்தா:11 2328/1
அம்பு உகை வல் வில் ஆர் கழல் மள்ளர் திறல் ஏத்த - சிந்தா:11 2332/1
அம்பு கை கொண்டால் ஆர் இவற்கு ஈண்டு நிகர் ஆவார் - சிந்தா:11 2332/2
பெய் ஆர் முகிலில் பிறழ் பூம் கொடி மின்னின் மின்னா - சிந்தா:11 2342/1
மட்டு ஆர் அலங்கல் அவன் மக்களும் தானும்-மாதோ - சிந்தா:11 2343/3
ஐ வாய் அரவின் அவிர் ஆர் அழல் போன்று சீறி - சிந்தா:11 2345/1
மை ஆர் அணல மணி நாகம் கலுழன் வாய்பட்டு - சிந்தா:11 2345/3
காய் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர் தம் பதிகள் புக்கார் - சிந்தா:11 2348/3
காது ஆர் குழையும் கடல் சங்கமும் குங்குமமும் - சிந்தா:11 2349/1
போது ஆர் அலங்கல் பொறையும் பொறை என்று நீக்கி - சிந்தா:11 2349/2
தாது ஆர் குவளை தடம் கண் முத்து உருட்டி விம்மா - சிந்தா:11 2349/3
மாது ஆர் மயில் அன்னவர் சண்பக சாம்பல் ஒத்தார் - சிந்தா:11 2349/4
ஆய் பொன் புரிசை அணி ஆர் அகன் கோயில் எல்லாம் - சிந்தா:11 2350/1
முறிந்த கோலம் முகிழ் முலையார் பரவ மொய் ஆர் மணி செப்பில் - சிந்தா:11 2358/1
உருவ நுண் இடை ஒளி மணி வரு முலை உரு ஆர்
   எரி பொன் மேகலை இலக்கணை கடிவினை நொடிவாம் - சிந்தா:12 2385/3,4
வாள் மின் நுண் இடை வருந்தினும் சூட்டு அணிந்து அழகு ஆர்
   ஆணம் ஆகிய அரு விலை வண்ண பட்டு உடு-மின் - சிந்தா:12 2389/3,4
கோலம் ஆர் முரசு இடி உமிழ் தழங்கு என முழங்க - சிந்தா:12 2392/3
ஆர் அகில் புகை வெறியினால் அமைத்து - சிந்தா:12 2422/3
அரும்பு ஆர் மலர் மேல் அணங்கே மழலை அன்னமே - சிந்தா:12 2453/2
சுரும்பு ஆர் சோலை மயிலே குயிலே சுடர் வீசும் - சிந்தா:12 2453/3
தேன் ஆர் காமன் சிலையும் கணையும் திறை கொண்ட - சிந்தா:12 2456/1
வான் ஆர் மதி வாள் முகமும் மட மான் மதர் நோக்கும் - சிந்தா:12 2456/2
கந்து ஆர் கடாத்த களிறும் கொடி தேர்கள் நூறும் - சிந்தா:12 2564/3
கண்கள் துஞ்சா கதிர் முத்தமே காலும் கை ஆர் வளை கழலுமால் - சிந்தா:12 2589/1
உருளும் முத்து ஆர் முகிழ் முலையினாள் உள்ளத்து உவகை தோற்றினாளே - சிந்தா:12 2593/4
தோடு ஆர் புனை கோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளை - சிந்தா:13 2605/1
பீடு ஆர் பெரும் சிறுவர் பயந்தீர் வம்-மின் என புல்லி - சிந்தா:13 2605/2
நாடு ஆர் புகழாளை நாண மொழிகள் பல கூறி - சிந்தா:13 2605/3
ஆர் அழல் முளரி அன்ன அரும் தவம் அரிது தானம் - சிந்தா:13 2632/1
தேன் ஆர் அகிலின் புகை சேர்த்தி வகுத்து நாவி குழம்பு உறீஇ - சிந்தா:13 2692/3
புகை ஆர் வண்ண பட்டு உடுத்து பொன் அம் கலைகள் புறம் சூழ்ந்து - சிந்தா:13 2694/1
நகை ஆர் கவுள கிண்கிணியும் சிலம்பும் நாய் நா சீறடி மேல் - சிந்தா:13 2694/2
குழிய பெரிய கோல் முன்கை மணி ஆர் காந்தள் குவி விரல் மேல் - சிந்தா:13 2696/1
அணி வேல் மன்னன் நலம் பருக அலர்ந்த அம்பு ஆர் மழை கண்ணார் - சிந்தா:13 2699/2
பணி ஆர் பண்ணு பிடி ஊர்ந்து பரூஉ கால் செம் நெல் கதிர் சூடி - சிந்தா:13 2699/3
காழ் ஆர் வெள்ளி மலை மேலும் காவல் மன்னர் கடி நகர்க்கும் - சிந்தா:13 2704/3
எடுத்தனர் எழுந்து தேன் ஆர் எரி மணி வீணை ஆர்த்த - சிந்தா:13 2731/3
கண் ஆர் மறி அறுத்து கையால் உதிரம் தூய் - சிந்தா:13 2780/2
அங்காந்து அழுகின்றது ஆர் கண்ணே நோக்குமே - சிந்தா:13 2781/4
தாமம் ஆர் ஒலியல் ஐம்பால் சயமதி திருவும் ஆர்ந்த - சிந்தா:13 2888/2
மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் மேல் நாள் - சிந்தா:13 2890/1
ஆர் வலம் சூழ்ந்த ஆழி அலை மணி தேரை வல்லான் - சிந்தா:13 2909/1
பரப்பின்-இடை பாய்ந்து குளம் ஆய் பால் ஆர் படா முலையை - சிந்தா:13 2944/3
மல் ஆர் அகன் மார்ப மட்டு ஏந்தி வாய் மடுத்திட்டு - சிந்தா:13 2963/2
சுழல் ஆர் பசும்பொன்னும் வேய்ந்து சொரி கதிர் மென் பஞ்சி ஆர்ந்த - சிந்தா:13 2970/3
நற்பு உடைய தேன் ஆர் நறவு நயம் புல்லார் - சிந்தா:13 2979/3
தூம்பு ஆர் நெடும் கைம்மா தீம் கரும்பு துற்றாவாய் - சிந்தா:13 2980/2
காம்பு ஆர் நடு இருள் கண் காடே போல் ஆயிற்றே - சிந்தா:13 2980/4
சேடு ஆர் பொன் திரு மணி வைர தொத்து அணிந்து உலகு ஓம்பும் - சிந்தா:13 3018/1
தூமம் ஆர் மாலையும் துறக்கின்றான்-அரோ - சிந்தா:13 3027/3
வாள் ஆர் முடி வைர வில் திளைத்து வண்டு அரற்றும் - சிந்தா:13 3037/3
மின் ஆர் மணி பூணவன் மேவி விண்-காறும் நாறும் - சிந்தா:13 3045/2
தீம் பால் நுரை போல் திகழ் வெண் பட்டு உடுத்து வண்டு ஆர்
   தேம் பாய சாந்தம் மெழுகி கலன் தேறல் மாலை - சிந்தா:13 3046/1,2
அடி மலர் பரவ ஏறி ஆர் அமிர்து அரிதின் கொள்வான் - சிந்தா:13 3073/2
கான் ஆர் பிண்டி கமழ் தாமம் கறை ஆர் முகிலின் நிறம் காட்டும் - சிந்தா:13 3090/2
கான் ஆர் பிண்டி கமழ் தாமம் கறை ஆர் முகிலின் நிறம் காட்டும் - சிந்தா:13 3090/2
தேன் ஆர் புகைகள் இவை எல்லாம் திகைப்ப திசைகள் மணம் நாறி - சிந்தா:13 3090/3
எழுது ஆர் மணி குவளை கண் வலையுள் பட்டு இமையார்கள் காமம் அறு சுழியுள் ஆழ்ந்து - சிந்தா:13 3137/3

ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் - புகார்:0/42
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும் - புகார்:1/26
அரும் பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே - புகார்:2/75
ஆர்த்து களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து - புகார்:5/83
அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் - புகார்:5/124
ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ - புகார்:7/170
மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் - புகார்:8/3
மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர் - புகார்:8/120
மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர்
   இளவேனில் வந்ததால் என் ஆம்-கொல் இன்று - புகார்: 8/120,121
ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே - புகார்:10/222
ஆற்று வழிப்பட்டோர் ஆர் என வினவ என் - புகார்:10/224
அறையும் பொறையும் ஆர் இடை மயக்கமும் - மது:11/68
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம் - மது:11/144
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம் - மது:11/144
ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது - மது:11/209
ஆர் இடை உழந்த மாதரை நோக்கி - மது:13/30
அறவுரை கேட்டு ஆங்கு ஆர் இடை கழிந்து - மது:13/35
அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி - மது:13/80
அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும் - மது:13/128
ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி - மது:13/150
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி - மது:13/189
அறியா தேயத்து ஆர் இடை உழந்து - மது:14/19
பாசு ஆர் மேனி பசும் கதிர் ஒளியவும் - மது:14/185
ஆர் அணங்கு ஆக அறம் தலைப்பட்டோர் - மது:15/193
கேட்டனை ஆயின் தோட்டு_ஆர் குழலியொடு - மது:15/198
அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் - மது:18/25
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் - மது:19/35
வரி ஆர் அகல் அல்குல் மாதர் உரை_சான்ற - மது:21/10
மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன் - மது:21/35
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து - மது:21/45
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி - மது:22/130
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் - மது:22/155
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என - மது:23/20
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி_இழாஅய் - மது:23/21
ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும் - வஞ்சி:26/19
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் - வஞ்சி:26/156
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து - வஞ்சி:27/45
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த - வஞ்சி:27/112
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க - வஞ்சி:27/143
தோடு ஆர் போந்தை வேலோன் தன் நிறை - வஞ்சி:27/175
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை - வஞ்சி:28/116
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி - வஞ்சி:28/165
ஆர் புனை சென்னி அரசற்கு அளித்து - வஞ்சி:28/211
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல் - வஞ்சி:29/181
ஆற்றா தன்மையள் ஆர் அஞர் எய்தி - வஞ்சி:30/77

அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் - மணி:3/59
ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி - மணி:5/116
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை - மணி:6/49
ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ - மணி:6/135
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது - மணி:6/148
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா - மணி:6/150
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் - மணி:6/158
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் - மணி:6/160
அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து - மணி:9/56
ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து - மணி:11/48
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் - மணி:11/105
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் - மணி:11/117
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் - மணி:12/114
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய - மணி:13/42
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ - மணி:14/4
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த - மணி:14/8
ஆர் உயிர் முதல்வன்-தன் முன் தோன்றி - மணி:14/33
ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை - மணி:14/59
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை - மணி:14/68
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் - மணி:14/93
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி - மணி:16/115
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் - மணி:16/135
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி - மணி:17/15
ஆர் அணங்கு ஆகிய அரும் தவன்-தன்னால் - மணி:17/53
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப - மணி:18/72
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய - மணி:18/93
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண - மணி:19/17
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை - மணி:19/45
ஆர் புனை தெரியல் இளங்கோன்-தன்னால் - மணி:19/125
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை - மணி:20/13
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய் - மணி:20/124
ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ - மணி:21/136
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் - மணி:21/149
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை - மணி:21/158
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய் - மணி:21/183
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய - மணி:22/9
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் - மணி:22/187
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண - மணி:23/69
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து - மணி:23/139
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு - மணி:25/141
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய - மணி:25/170
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள - மணி:27/233
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல் - மணி:28/121
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் - மணி:28/160
ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் - மணி:28/195
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் - மணி:28/228

பாவை நோக்கத்து ஆர் அணங்கு எய்தி - உஞ்ஞை:35/48
காமம் நுகர்வோர்க்கு ஆர் அணங்கு ஆகிய - உஞ்ஞை:36/103
கை ஆர் கடகத்து கதிர் வாள் கச்சையர் - உஞ்ஞை:37/7
கண் ஆர் பிடிகையும் கட்டு அமை ஊர்தியும் - உஞ்ஞை:37/270
வண்டு ஆர் கோதையை கண்டனன் ஆகி - உஞ்ஞை:40/198
அவி இடப்படின் என் ஆர் உயிர் வைப்பது - உஞ்ஞை:40/287
செரு ஆர் சேனை பெரு வாணிகன் மகள் - உஞ்ஞை:40/344
வளை ஆர் முன்கை வை எயிற்று இன் நகை - உஞ்ஞை:41/24
கலம் கவின் பெற்ற கண் ஆர் களிகை - உஞ்ஞை:41/82
கொங்கு ஆர் கோங்கின் கொய் மலர் அன்ன - உஞ்ஞை:42/206
கனவில் கண்ட கண் ஆர் விழு பொருள் - உஞ்ஞை:43/104
ஒள் வரி சிலையும் உடு ஆர் பகழியும் - உஞ்ஞை:45/58
ஆர் உயிர் அன்ன அரும்_பெறல் மட மகள் - உஞ்ஞை:46/71
அரும் படையாளர் ஆர் உயிர் ஓம்பி - உஞ்ஞை:46/137
மை ஆர் கண்ணியை ஒய்யான் ஆகி - உஞ்ஞை:46/204
ஆர் உயிர்க்கு அபயம் கோமான் கொடுப்ப - உஞ்ஞை:47/66
ஒரு கோல் ஓச்சிய திரு ஆர் மார்ப நின் - உஞ்ஞை:49/66
அருமை எய்திய வரில் அமை ஆர் இடை - உஞ்ஞை:50/48
கொங்கு ஆர் கோடலொடு கொய்யல் குழைஇ - உஞ்ஞை:51/51
ஆற்றினது அளவும் ஆர் இருள் எல்லையும் - உஞ்ஞை:52/4
கச்சு ஆர் வன முலை கண் மணி கொடும் பூண் - உஞ்ஞை:52/20
எல்லை ஆர் இருள் நல் வினை முன்னர் - உஞ்ஞை:53/156
ஆர் உயிர் வௌவ அதன் தாள் முதல் பொருந்தி - உஞ்ஞை:55/128
அல்லல் உறீஇ ஆர் உயிர் உண்கு என - உஞ்ஞை:56/39
அரிமான் அன்னோற்கு ஆர் உயிர் கொடீஇய - உஞ்ஞை:56/122
அறியாது வருந்திய ஆர் உயிர் துணைவியை - உஞ்ஞை:56/138
பொறி ஆர் தட கையில் போற்றுபு தழீஇ - உஞ்ஞை:56/139
பூண் ஆர் ஆகத்து பொங்கு இள வன முலை - உஞ்ஞை:57/29
ஆர் அணங்கு ஆகிய அணி முளை அகல்வாய் - இலாவாண:3/19
மண் ஆர் மணி பூண் மாதரை இரீஇய பின் - இலாவாண:3/156
கண் ஆர் குருசிலை கவின்பெற ஏற்றி - இலாவாண:3/157
மண் ஆர் மணி பூண் மன்னனொடு மாதரை - இலாவாண:4/154
ஆர் அணங்கு ஆகிய பேர் அணிகலங்களும் - இலாவாண:5/145
அடிசில் அயினி ஆர்_பதம் அயின்று - இலாவாண:5/185
ஆர் அணங்கு ஆகிய அறிவர் தானத்து - இலாவாண:6/37
வாடா தாரினர் சேடு ஆர் கச்சையர் - இலாவாண:6/123
ஆர் அணங்கு ஆகிய அணி கிளர் வனப்பின் - இலாவாண:6/158
அழி சுவர் மண்டபத்து அக-வயின் ஆர் இருள் - இலாவாண:8/111
ஆணி வையம் ஆர் இருள் மறைய - இலாவாண:9/14
காரிய முடிவின் ஆர் இருள் மறையா - இலாவாண:10/30
யாப்பு அமை காதலோடு ஆர் உயிர் அன்ன - இலாவாண:10/53
கட்டளை அமைந்த கண் ஆர் வனப்பினோர் - இலாவாண:10/85
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் - இலாவாண:14/67
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் - இலாவாண:15/1
கண் ஆர் கனம் குழை கதுமென கண்டே - இலாவாண:16/12
மண் ஆர் மார்பன் மாதரை சூட்டிய - இலாவாண:16/13
அரு மனை வரைப்பகம் ஆர் அழல் உறீஇய - இலாவாண:17/79
ஆர் உயிர் கிழத்தி அகன்றனள் இவண் இலள் - இலாவாண:18/34
வண்டு ஆர் கோதை வாசவதத்தை - இலாவாண:18/55
நங்காய் நல்லா கொங்கு ஆர் கோதாய் - இலாவாண:18/81
ஆர் அளை செறிந்த அரும் சின நாகத்து - இலாவாண:19/10
அடைதற்கு ஆகா ஆர் அழல் செம் கொடி - இலாவாண:19/203
ஊர் கடல் வரைப்பின் ஆர் உயிர் நடுக்குறீஇ - இலாவாண:20/27
செண் ஆர் வடிவின் கண் ஆர் கத்தியர் - மகத:1/115
செண் ஆர் வடிவின் கண் ஆர் கத்தியர் - மகத:1/115
உற்றவன் ஆர் உயிர் உய்தல் வேண்டி - மகத:4/65
கண் ஆர் மாடம் நண்ணுவனள் இழிந்து - மகத:8/36
அரி ஆர் தடம் கண் அதிநாகரிகி - மகத:9/152
ஆர் உயிர் அன்ன என் அற்பு வார் கொளீஇ - மகத:10/21
போர் ஆர் குருசில் போதரவு உண்டெனின் - மகத:10/47
ஆர் அணங்கு ஆகிய அகல் விசும்பு உகக்கும் - மகத:12/2
ஆனா காதலொடு ஆர் உயிர் அன்ன - மகத:12/46
ஆர் இருள் போர்வையாக யாவரும் - மகத:13/92
ஆர் இருள் மறைஇ அரும் சினம் அழித்தோர் - மகத:19/23
வன்பு ஆர் மன்னன் வரினும் நன்று என - மகத:19/97
கண் ஆர் தகைய கவுள் இழி கடாத்தன - மகத:19/166
மண் ஆர் நுதலின மாசு_இல் மருப்பின - மகத:19/167
பொன் ஆர் முற்றம் புகுந்து உடன் துவன்ற - மகத:19/182
வண்டு ஆர் தெரியல் மறவர் மயங்கி - மகத:20/39
சுற்று ஆர் கருவில் துணி என தோன்றி - மகத:20/49
அலை கடல் ஞாலத்து ஆக்கையொடு ஆர் உயிர் - மகத:20/170
ஆர் அஞர் உழக்கல் அறிவு எனப்படாது - மகத:21/53
தேன் ஆர் காந்தள் திரு முகை அன்ன - மகத:22/90
கண் ஆர் கடகமொடு கை புனைந்து இயற்றிய - மகத:22/233
ஆர் மேல் போம்-கொல் அஞ்சு தகவு உடைத்து என - மகத:24/44
ஆர் அரண் நகரம் ஆண்டனன் ஒழுகும் - மகத:24/61
தேன் ஆர் தாமரை திருந்து மலர் சேவடி - மகத:24/93
அளப்ப_அரும் கடும் திறல் ஆருணி ஆர் உயிர் - மகத:24/133
திரு ஆர் மார்பின் எம் பெருமான் உதயணன் - மகத:24/202
ஆர் எரி கொளீஇ அஞ்சினேம் ஆகி - மகத:25/110
காழ் ஆர் எஃகம் முதல் கை-வயின் திரீஇயர் - மகத:26/66
வீறு ஆர் தோன்றலொடு விளங்கு மணி பொலிந்தன - மகத:26/69
சாந்து ஆர் மார்பின் சாயனும் சாயா - மகத:26/78
வண்டு ஆர் தெரியல் வருடகாரனின் - மகத:27/2
ஆர் குரல் முரசம் ஓவாது அதிர - வத்தவ:2/41
பலி ஆர் நறு மலர் பற்பல தூஉய் - வத்தவ:3/102
தார் ஆர் மார்பன் தாங்கா உவகையன் - வத்தவ:3/140
கடி ஆர் மார்பம் கலந்து உண்டாடிய - வத்தவ:5/10
வண்டு ஆர் தாதின் வெண் தாமரை பூ - வத்தவ:5/75
தேன் ஆர் தாமரை சேவடி வீழ்தலின் - வத்தவ:5/131
திரு ஆர் மார்பன் தெரிந்து அவற்கு உரைக்கும் - வத்தவ:6/54
கூர் எரி கொளுவ ஆர் அஞர் எய்தி - வத்தவ:7/58
தேன் ஆர் படலை திரு வளர் மார்பன் - வத்தவ:7/65
போர் ஆர் குருசில் புடைபெயர்ந்து உராஅய் - வத்தவ:7/84
அரி ஆர் தடம் கண் அவந்திகை அவன் தனக்கு - வத்தவ:8/13
பண்பு ஆர் சாயல் பதுமாபதி-தன் - வத்தவ:9/15
அத்தறுவாயில் ஆர் உயிர் வழங்கிய - வத்தவ:9/55
ஓர் இருபதின்மரை ஆர் அமர் கடந்து - வத்தவ:11/43
அரி ஆர் மேகலை ஆர்ப்பொடு துளங்கவும் - வத்தவ:12/125
கண் ஆர் மாதர் மதி முகம் காணில் - வத்தவ:12/246
மான்_ஆர்_நோக்கி மனத்தொடு நகையா - வத்தவ:13/213
தேன் ஆர் மார்ப தெரியின் யானே - வத்தவ:15/28
வண்டு ஆர் தெரியல் வாள் முகம் சுடர - வத்தவ:15/73
அஞ்சு தரு முது காட்டு அஞ்சு ஆர் அழலின் - வத்தவ:17/25
ஊன் ஆர் மகளிர் உள் வயிற்று இயன்ற - வத்தவ:17/28
அ வாய் கொண்ட ஆர் இரை அமிழ்தம் - நரவாண:1/69
ஆர் அரண் அமைத்து வாள் நடு நீள் மதில் - நரவாண:2/3
ஆர் உயிர் கொளினும் அது எமக்கு அரிது என - நரவாண:4/25
வண்டு ஆர் சோலையும் வளம் கெழு மலையும் - நரவாண:4/145
மை ஆர் யானை மன்னரொடு மயங்கி - நரவாண:6/71
ஆக்கம் சான்ற ஆர் உயிர் ஓகையும் - நரவாண:6/77
ஆர் இயல் அமை நெறி அரசன்-தன் உரை - நரவாண:6/87
ஒழிந்த மூவர் உரு ஆர் குமரருள் - நரவாண:6/115
காழ் ஆர் வன முலை கணிகையர் சேரி - நரவாண:8/118
மின் ஆர் மணி முடி மன்னனும் இழிந்து - நரவாண:8/18
கச்சு ஆர் வன முலை விச்சாதரியே - நரவாண:8/55

வாசம் ஆர் முலைகள் மார்பில் ஆட மது மாலை தாழ் குழலின் வண்டு எழுந்து - கலிங்:66/1
ஆர் காப்பார் எங்களை நீ அறிந்தருளி காப்பது அல்லால் அடைய பாழாம் - கலிங்:213/1

அருந்த வானவர்க்கு ஆர் அமுது அன்புடன் அளிப்போன் - வில்லி:1 8/2
அம்புராசியின் ஆர் அமுதுடன் அவதரித்தோன் - வில்லி:1 10/4
அன்ன காலையில் இவள்-தனது ஆர் உயிர் துணையாய் - வில்லி:1 24/1
மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர்
  உகப்புற இவனோடு அவனி ஆளுக என்று ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து - வில்லி:1 94/2,3
அம் கையால் மலைந்து ஆர் உயிர் கொள்ளவே - வில்லி:1 120/4
அந்தி ஆர் அழல் என பரிதியின் ஒளி அடைந்த பின் அணி மாட - வில்லி:2 37/1
ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர் - வில்லி:2 44/2
மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர் - வில்லி:2 58/3
வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ - வில்லி:2 62/3
அஞ்சுதரு தீ வினையின் ஆர் அமுதும் நஞ்சு ஆம் - வில்லி:2 99/3
மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை - வில்லி:3 35/1
மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால் - வில்லி:3 89/2
வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம் உண்ட கோ - வில்லி:4 52/1
திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலி தாயர் கடல் கடைந்து - வில்லி:5 34/1
முருந்து ஆர் பவள துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார் - வில்லி:5 34/4
பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே பேர் உலகில் - வில்லி:5 39/1
வினை-கண் புகுந்தால் எதிர் நின்று வேறு ஆர் இவனை வெல்கிற்பார் - வில்லி:5 44/2
மூள் ஆர் அழல் உற்பவித்தாள் இவள் முன் பவத்தில் - வில்லி:5 73/1
வாள் ஆர் தடம் கண் அவட்கு ஆரணவாணர்க்கு என்றும் - வில்லி:5 73/3
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற - வில்லி:5 96/2
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான் - வில்லி:7 4/4
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி முக்கோலினர் ஆகி - வில்லி:7 11/3
பயன் ஆர் புனல் நதி ஏழும் அ நகரூடு படிந்தான் - வில்லி:7 14/4
தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து - வில்லி:7 42/2
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு - வில்லி:7 53/3
அடவி ஆர் அழல் அவியவும் அவிந்திலது ஐயோ - வில்லி:7 60/2
விதன வல் இருள் விடிந்திலது ஆர் இருள் விடிந்தும் - வில்லி:7 61/4
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையை தழீஇக்கொண்டு - வில்லி:7 78/2
ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில் - வில்லி:8 16/2
ஆடையில் வெண்சாமரத்தில் ஆலவட்டத்தினில் உயிர்ப்பில் அழகு ஆர் நெற்றி - வில்லி:8 17/3
அனைய போதில் அ விபின சாலங்களின் ஆர் தருக்களின் நீண்ட - வில்லி:9 21/1
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் - வில்லி:10 28/2
இன்று ஆர் அமரின் இவன் கையால் இறந்தோன் உடலம் ஒன்றியதும் - வில்லி:10 30/1
ஆர் அமுது அனைய கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற - வில்லி:10 73/3
செண்டு தரித்தோன் திருப்பவளத்து ஆர் அமுதம் - வில்லி:10 80/3
ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்கு - வில்லி:10 96/3
அன்னியன் அல்லன் மற்று இவன் பெருமை அரசரில் ஆர் அறியாதார் - வில்லி:10 120/4
சகுனியை அன்றி வேறு ஆர் தரவல்லார் தரணி என்றான் - வில்லி:11 48/4
மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார் - வில்லி:11 49/2
காவி ஆர் தொடை காவலன் ஏவல் நாம் மறுப்பது கடன் அன்றே - வில்லி:11 73/4
மண்ணில் ஆர் வெளா வடிவம் எய்தினார் - வில்லி:11 145/4
காதில் ஆர் என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர் - வில்லி:11 170/2
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய - வில்லி:11 218/3
மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ - வில்லி:11 232/3
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற அதற்கு ஒன்றும் - வில்லி:11 236/1
மல் ஆர் தடம் தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் வாள் வேந்தீர் - வில்லி:11 236/3
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் - வில்லி:11 253/4
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே - வில்லி:12 41/4
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர்
  வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா - வில்லி:12 103/3,4
முருந்து ஆர் நகை அர_மாதரின் முதன்மை பெயர் புனையும் - வில்லி:12 149/3
செருத்து ஆர் குழலுடையாள் அரி திரு ஊருவின் வந்தாள் - வில்லி:12 149/4
மின் ஆர் இடை மின் நேர் இழை மென் கொம்பை அலாதார் - வில்லி:12 151/2
அ காலையில் விசயன்-தனது இடர் ஆர் இருள் அகல - வில்லி:12 165/1
மின் ஆர் கணை தூவி வெகுண்டனனே - வில்லி:13 61/4
கட்டு ஆர் முது கார்முக வீரனும் முன் - வில்லி:13 71/1
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு - வில்லி:13 74/2
அடா இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும் என்னா - வில்லி:13 89/2
ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார் - வில்லி:13 113/3
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் - வில்லி:14 2/2
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா என்றான் - வில்லி:14 25/3
என்னை நீ புகல் ஆர் அடா என்பது இங்கு எவனோ - வில்லி:14 27/2
சொன்னவாறு நன்று உனக்கு இது ஆர் சொற்றவர் என்றான் - வில்லி:14 33/4
அருக்கனின் மு மடி ஆர் ஒளி வீசும் - வில்லி:14 56/1
உண்டியால் வளர்ந்து ஆர் அழல் கோளகையூடு உறும்படி ஓம - வில்லி:16 13/3
ஆர் உயிர் பொன்றும் காலை அமுதமும் விடமாம் என்று - வில்லி:16 32/1
மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார் - வில்லி:16 49/2
தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே - வில்லி:18 15/4
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று - வில்லி:18 20/3
ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும் - வில்லி:19 28/1
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான் - வில்லி:20 2/4
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர் - வில்லி:20 7/2
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் - வில்லி:20 9/4
அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல் - வில்லி:21 1/1
ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி - வில்லி:21 7/2
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் - வில்லி:21 9/4
ஐ என இவனும் தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புடைய - வில்லி:21 51/1
புந்தியில் ஒன்றும் கொள்ளேல் ஆர் இருள் பொழுதில் இன்று - வில்லி:21 56/3
கையில் ஆர் அழகு ஏற கவின் செயும் - வில்லி:21 86/2
துன்று கங்குலில் சோரர்-தம் ஆர் உயிர் - வில்லி:21 100/2
மூது ஆர் அழல் பாலை வனமும் தடம் சாரல் முது குன்றமும் - வில்லி:22 2/1
கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம் - வில்லி:22 2/4
அஞ்சல் அஞ்சல் நீ பகைவரை ஆர் உயிர் அடுதல் - வில்லி:22 36/1
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் - வில்லி:22 37/4
விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால் - வில்லி:26 5/4
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக - வில்லி:27 5/3
கார் ஆர் குழல் களைந்து காலில் தளை பூட்டி - வில்லி:27 33/2
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே - வில்லி:27 42/4
தொல்லை நாயகன் வந்தனன் என்றலும் சுரும்பு ஆர்
  மல்லல் மாலையான் ஏவலால் மா நகர் மாக்கள் - வில்லி:27 69/1,2
அளைந்த ஆர் இருள் கடல் பொறாது ஒரு புடை அண்டம் - வில்லி:27 96/1
மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான் - வில்லி:27 127/3
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை வளைந்து கொன்றார் - வில்லி:27 169/2
அடியவர் மனத்தில் உள்ள ஆர் இருள் கங்குல் தீர்க்கும் - வில்லி:27 180/1
ஆர் என்று அறிய தகாத எனை அரசும் ஆக்கி முடி சூட்டி - வில்லி:27 219/1
துளி ஆர் மதுவின் வலம்புரி தார் துரியோதனன்-தான் சொல்லியதும் - வில்லி:27 226/1
ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கொருவர் உரைத்தனவும் - வில்லி:27 226/2
அரியின் புதல்வன்-தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது ஆர் அறியாதார் - வில்லி:27 229/4
வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே - வில்லி:27 243/4
அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர் உயிர் துணை என கருதி - வில்லி:27 251/2
தானை மன்னரும் வந்தனர் இந்த மண்தலத்தில் ஆர் வாராதார் - வில்லி:28 6/4
பந்தமது உணர்ந்து நேரே பார்க்குங்கால் பகை யார் நண்பு ஆர் - வில்லி:29 4/4
ஆர் அழிந்தன உருள் அழிந்தன அச்சு அழிந்தன வச்சிர - வில்லி:29 45/1
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு - வில்லி:29 71/3
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ - வில்லி:30 26/4
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன் நான் என உரைத்தனன் அரோ - வில்லி:30 32/3
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் - வில்லி:31 2/2
சொல் ஆர் கேள்வி கங்கை_மகன் துரோணன் முதலாம் அதிரதரும் - வில்லி:31 4/1
எல் ஆர் இரத கய துரங்கம் ஏல் ஆளுடனே காலாளும் - வில்லி:31 4/2
வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம் துளைத்த வாளி வழி - வில்லி:31 10/1
கொந்து ஆர் தொடை வீர குமாரருமே - வில்லி:32 21/4
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர் - வில்லி:32 25/4
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர் பகலோன் அன்ன பகதத்தன் - வில்லி:32 30/3
தார் ஆர் ஓடை திலக நுதல் சயிலம் பதினாயிரம் சூழ - வில்லி:32 32/1
வீறு ஆர் கற்பின் மின் அனையாளை விறல் மைந்தர் - வில்லி:32 41/1
ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி ஆண்மைக்கு எலாம் - வில்லி:33 11/3
அவன் ஆர் உயிர் கவர்வேன் என அம்பு ஒன்று தொடுத்தான் - வில்லி:33 14/3
வை ஆர் அயில் கணை தோமரம் வாள் கப்பணம் முதலாம் - வில்லி:33 22/1
இவ்வாறு முனைந்து ஆர் உயிர் இரு சேனையும் மடிய - வில்லி:33 23/1
எதிர் இனி நானும் நீயும் அல்லது இங்கு இலக்கு வேறு ஆர் - வில்லி:36 14/4
நா தந்திலனே எண்ணுதற்கு நாம் ஆர் புகல தே மாலை - வில்லி:37 35/2
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும் - வில்லி:37 37/3
சேயின் முனிவர் கேள்வி தெள் ஆர் அமுதம் நுகர்வான் - வில்லி:38 45/4
மீன் ஆர் கொடியோன்-தன்னை வென்ற வேத கொடியோய் - வில்லி:38 51/3
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்-தோறும் கோத்து - வில்லி:38 52/3
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு விறல் ஆர் சேனை வேந்தனுடன் - வில்லி:39 35/2
துப்பு ஆர் வெம் சிலை தட கை துரோணன் முதல் அனைவோரும் - வில்லி:40 5/3
தூசு ஆர் உரக கொடி நெடும் தேர் துரியோதனனும் தம்பியரும் - வில்லி:40 74/2
தந்து அபிமன் ஆர் உயிரை - வில்லி:41 55/2
பூண் ஆர் கடக கையொடு புகர் வாளமும் மண் மேல் - வில்லி:41 113/3
ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே - வில்லி:41 131/4
பொன் ஆர் வெம் கதையாலும் அல்லது அபிமனை அமரில் பொர வல்லார் யார் - வில்லி:41 143/2
அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான் - வில்லி:41 144/2
ஆர் இனி செகுக்க வல்லார் ஐவருக்கு உரிய கோவே - வில்லி:41 160/4
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் - வில்லி:41 170/4
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் - வில்லி:41 170/4
ஆர் அதர் விடாயை வந்து ஆற்றுகின்றதால் - வில்லி:41 205/4
ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான் - வில்லி:41 237/4
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்கு தானமும் தகுவன வழங்கி - வில்லி:42 2/2
வேலை ஆர் அரவ பல பணை முழங்க வெம் முரண் சேனையோடு எழுந்தான் - வில்லி:42 2/4
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு - வில்லி:42 50/1
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே - வில்லி:42 50/2
வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார் - வில்லி:42 62/4
மின் ஆர் வடி வேலாய் இவை விதியின் செயல் அன்றோ - வில்லி:42 65/3
ஆதபத்திரம் அழிந்தன இவன்-தனுடன் ஆர் சரத்தொடு சரம் தொட இயைந்தவரே - வில்லி:42 81/4
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி - வில்லி:42 82/1
அம்பில் அழிந்து தம் ஆர் உயிர் உய்ந்தார் - வில்லி:42 93/2
வாயு_புத்திரன் வாளியால் ஆர் உயிர் மடிய - வில்லி:42 120/2
அயத்து இரதம் இட பசும் பொன் ஆவது போல் அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக - வில்லி:42 165/1
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் - வில்லி:42 209/4
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர்
  தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை - வில்லி:44 19/2,3
பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே - வில்லி:44 63/2
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்-தாமும் - வில்லி:44 64/3
செம் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவி பட சிந்தனை தெளிவுற்று - வில்லி:45 8/1
வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய் - வில்லி:45 9/2
அத்திர சாபம் வல்லான் இவனொடு ஆர் அமர் செய்கிற்பார் - வில்லி:45 50/4
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும் - வில்லி:45 57/3
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே - வில்லி:45 108/4
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து - வில்லி:45 137/3
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து - வில்லி:45 137/3
இன்றோ அழலின் உற்பவித்தாள் இருள் ஆர் அளகம் முடித்திடும் நாள் - வில்லி:45 138/2
அடுத்தார் விரைவில் அகல் வானத்து அழகு ஆர் காதல் அரம்பையரே - வில்லி:45 141/4
உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் வீமன் கை - வில்லி:45 142/1
கொடி ஆர் மடங்கல் என கூத்தாடி நின்று ஆர்த்தான் - வில்லி:45 161/4
பொன் ஆர் முரசம் முதல் போர் வெம் பணையாலும் - வில்லி:45 168/1
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே - வில்லி:45 172/4
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் - வில்லி:45 206/1
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா - வில்லி:45 206/3
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார் - வில்லி:45 228/3
ஆர் கயல் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினை கேட்டு ஆழியானை - வில்லி:45 263/2
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து பொரு தேரில் புகுந்தனன் வழா - வில்லி:46 7/3
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே - வில்லி:46 8/2
செயகந்தன் செயவன்மன் செயசேனன் சேனாவிந்து செய்த்திரதன் திறல் ஆர் விந்து - வில்லி:46 78/1
மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை - வில்லி:46 96/1
கோண் ஆர் சிலை கை நெடு நாக கொடி கொள் வேந்தை - வில்லி:46 109/2
ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார் அறுகால் மொய்க்கும் - வில்லி:46 141/1
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு - வில்லி:46 171/1
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் - வில்லி:46 175/3
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் - வில்லி:46 182/3
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் - வில்லி:46 188/3
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே - வில்லி:46 191/4
துப்பு ஆர் செம் கொடிகள் என உதயகிரி மிசை படர்ந்து தோற்றம் செய்ய - வில்லி:46 242/2

நவி ஆர் சுவர்க்கபதி நயினார் பத துணையை நடு நாவில் வைத்தவர்களே - சீறா:6/4
பெருகு சூல் முதிர்ந்து ஈன்று ஆர் அமுது உறைந்து பிடர் குனிதர குலை சேந்து - சீறா:56/2
வந்தவர் நினைத்த பொருளும் ஆர் அமிர்தும் வகைவகை தருதலான் மணியும் - சீறா:85/3
நிரைத்த பைம் கதிர் ஆர் மரகத மணியால் நீள் நிலா கருப்புர தகட்டால் - சீறா:86/1
அடு செழும் பாகும் தேனும் ஆர் அமிர்து மனத்தொடு மனத்தொடும் திருந்தி - சீறா:90/1
ஆண்டகை இவன் ஆர் நம் மனை-தனை வந்து அடுப்பனோ தகாது என எண்ணி - சீறா:279/2
கூன் கட வளை ஆர் வெண் பால் குரை கடல் அமிர்தும் சோதி - சீறா:607/3
கோலம் ஆர் புலி வந்ததும் முகம்மதை யாம் கூட்டி வந்துறு பவம் என்ன - சீறா:692/3
வண்டு ஆர் பொழில் ஆர் வரையூடு அருவி - சீறா:707/1
வண்டு ஆர் பொழில் ஆர் வரையூடு அருவி - சீறா:707/1
இந்து ஆர் எழில் வள்ளல் இறங்கினரே - சீறா:717/4
கோலம் ஆர் பொருப்பு திண் தோள் குரிசில்-தன் கதிர்கள் தாக்கி - சீறா:924/2
குருகு ஆர் கழனிகள் வாவிகள் குளிர் சோலை கடந்தே - சீறா:981/1
கடு வார் விழி கொடி ஆர் இடை கதிஜா எனும் மயிலார் - சீறா:986/3
நட்பினை பகைத்து செய்த நன்றியை கொன்று நஞ்சு ஆர்
  மண் படு கலமே அன்ன மனத்து அபூஜகிலும் போனான் - சீறா:1040/3,4
சிந்தையுள் நினைவும் வேதம் தெளிந்தவன் உரையும் தேன் ஆர்
  கொந்து அலர் மரவ மாலை குவைலிது மகிழ்வும் கூறிட்டு - சீறா:1064/2,3
மனத்துக்கு இசைந்தபடி நல் மொழிகள் சில தெரிந்து சாற்றி வீறு ஆர்
  செம்மல் இளம் களிறு அனைய முகம்மதை என் மருகர் என செவ்விதாக்கி - சீறா:1086/2,3
தெரிசிக்க நம் போல் மிக்க செனனம் ஆர் பெறுவர் என்பார் - சீறா:1157/4
வழுத்துவீர் இவர் ஆர் என மற்றவர் - சீறா:1186/1
நறை ஆர் கூந்தல் கதீஜாவை நண்ணி உலுவும் வணக்கமும் முன் - சீறா:1334/3
கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து - சீறா:1585/2
பிறந்து ஆர் எழில் நம் நபி குரிசில் பிந்தாதிருந்தார் எழுந்தாரே - சீறா:1590/4
அல் ஆர் குபிரை கடிது அகற்றி அழியா தொழுகை முறை படித்து - சீறா:1594/3
ஆர் அமுது அனைய சொல் அரிய வாய் திறந்து - சீறா:1622/1
கொதி ஆர் வெவ் விட அரவின் வாய் தேரை என அறிவு குலைந்து மேனாள் - சீறா:1664/2
ஆர் அமுதமான சில நல் மொழி அறைந்தார் - சீறா:1767/4
இரு மனத்தொடும் வர வரம் படைத்தவர் எழில் ஆர்
  இரு செவி கொடுத்து ஏவலின்படிக்கு இசைந்திருப்பார் - சீறா:2233/3,4
அருந்தும் ஆர் அமுத கலிமா உரைக்கு அடங்காது - சீறா:2236/1
அரு மறை மாறி நின்றோர் ஆர் உயிர் இழந்தார் என்ன - சீறா:2365/2
அருந்திட உடலம் வீழ்த்தி ஆர் உயிர் பறித்து நுங்கள் - சீறா:2390/3
ஆர் அமுது அனைய வேதத்து அரு மொழி அகத்துள் தேக்கி - சீறா:2396/1
உணர்வு எழும் தீன் நிலைக்கு உரியர் ஆர் உயிர் - சீறா:2414/2
எங்கள்-தம் குலத்தினுக்கு இனிய ஆர் உயிர் - சீறா:2417/3
ஒல்லையின் எதிர்ந்தானெனில் தொடர்பவர் ஆர் உயிர் செகுத்திட வளைந்திருந்தார் - சீறா:2535/3
முகில் ஆர் கவிகை முகம்மதும் அ கானம் கடந்து முரம் படர்ந்த - சீறா:2555/3
அம்மல் ஓதி வெண் நூலினில் பிறங்கிட அழகு ஆர்
  கொம்மை வெம் முலை தாழ்ந்து அணி வயிற்றிடை குழைய - சீறா:2682/1,2
கற்ற வல்லோர்கள் யாவரும் விரும்பி கருத்து உறும்படி முடித்து உவந்து ஆர்
  வெற்றியும் புகழும் தழைத்து இனிது ஓங்கி வீறுபெற்று இருக்கும் அ நாளில் - சீறா:2876/3,4
கூர்த்த வள் உகிர் கால் நீண்ட வால் வரி ஆர் கொடிப்புலி கொடிய வெம் பசியால் - சீறா:2879/3
கொற்ற வெண் கவிகையும் கோலம் ஆர் துகில் - சீறா:3003/1
நானம் ஆர் புய மாந்தர்கள் நாசியும் அமட்டி - சீறா:3141/2
பேரிகை திமிலை குடப்பறை தடாரி பீலி ஆர் திண்டிமம் முரசு ஓர் - சீறா:3162/1
முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர்
  சித்திர படம் மேல் விரித்து அணி அலர்கள் செறிதர மாலைகள் நாற்றி - சீறா:3167/2,3
கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர்
  இடு கொடை கவிப்ப குழாத்தொடும் அலி-தம் இரு புடையினும் செறிந்தனரால் - சீறா:3168/3,4
ஆர் எழிலவர் என்று எண்ணியிருந்தனம் இவரை நோக்கின் - சீறா:3185/2
குலிகம் ஆர் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப வந்து - சீறா:3199/1
முறைமுறை எடுத்து தேன் ஆர் முகிழ் நனை இருந்த செவ்வி - சீறா:3227/3
ஆர் பனீ லமுறத் என்பவரும் ஆண்டு உற - சீறா:3309/2
மோது பேரலை மடுக்களும் சுனைகளும் முருகு ஆர்
  தாது உகுத்த வெள் அருவியும் மலை அடி சார்பும் - சீறா:3454/2,3
கோலம் ஆர் கதிர் வாளினில் கூறுசெய்தனரால் - சீறா:3507/4
விடு கை அம்பினும் கதையினும் மழுவினும் விடம் ஆர்
  நெடிய வேலினும் சக்கரத்தினும் உடல் நெரிய - சீறா:3547/1,2
மா இரு விசும்பும் புவனமும் புகழ் ஆர் மன்னவர் இபுனு மஸ்வூது - சீறா:3566/3
பன்னுவது என்-கொல் என்பார் பழி முடித்தவர் ஆர் என்பார் - சீறா:3719/2
கோலம் ஆர் குரகதத்தொடும் கூட்டமிட்டனனால் - சீறா:3785/4
கவளம் ஆர் கட கரியினும் மதத்து எழும் காபிர் - சீறா:3796/2
நெடும் துளை பெரு வாய் காளத்து ஒலி திசை நிமிர்ந்த வார் ஆர்
  கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை - சீறா:3846/1,2
தலைகள் இழந்தார் குடர்கள் இழந்தார் தடம் ஆர் தோள் - சீறா:3918/3
மாண் ஆர் வயவரொடும் சுற்றூர் மற்ற வேந்தரொடும் சற்றும் - சீறா:4031/2
குனி ஆர் சிலை கை வேந்தரொடும் சென்று கோளார் குறும்பு அடக்கி - சீறா:4033/3
கால முகில் ஆர் இடி என்ன கணிப்பின் எறுழ் வாச்சியம் கதற - சீறா:4034/2
கொந்து ஆர் அரசே என போற்றி எழுந்து கோரல் மேல் கொண்டு - சீறா:4040/3
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும் - சீறா:4046/2
மின் ஆர் வேலீர் இ நாளும் வேவுபார்க்க இங்கு வந்தான் - சீறா:4050/1
கொன் ஆர் வாளால் இங்கு இவனை கோறல் செய்-மின் என சொன்னார் - சீறா:4050/2
வடிவு ஆர் சோலை சூழ்ந்து இருந்த மதீனா நகரில் வந்தனரால் - சீறா:4051/4
அன்ன திங்களில் தேதி ஓர் ஐந்தினில் அழகு ஆர்
  மின்னு பூண் அணி பாத்திமா வயிற்றினில் விளங்கி - சீறா:4160/2,3
மஞ்சு ஆர் வெளி வழியே கொடுவந்தார் சிபுரீலே - சீறா:4333/4
கொந்து ஆர் தரு எனும் நம் நபி குளிர் வாள் முகம் நோக்கி - சீறா:4343/2
மட்டு ஆர் தொடை புயத்து ஆரிது மகளார் சுவைறாவை - சீறா:4354/1
அபுசகல் போன பின்னர் ஆர் உளர் தலைவர் என்ன - சீறா:4384/1
ஆர் உளர் என்ன எண்ணி இருந்தனன் எதிரின் வந்து - சீறா:4388/2
நன்றி அஃது உறைவு இடமோ நடு இடமோ ஈறு இடமோ நலன் ஆர் போதம் - சீறா:4523/1
அன்னவர் தாம் முகம்மதை பார்த்து ஐயா என் செய்தியை கேள் யான் ஆர் என்னில் - சீறா:4684/1
செம் தளிர் அடியும் பொற்பு ஆர் செயினபு நங்கை கண்டார் - சீறா:4700/4
கந்தம் ஆர் மரவ மாலை கமழ் புயத்து அனசு சென்று - சீறா:4704/3
சலம் தரும் இவன் ஆர் என்ன முகைறத்து என்று அவர்கள் சாற்ற - சீறா:4859/2
ஏறு கோளரி இவன் ஆர் என்று ஓதிட - சீறா:4946/2
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் - சீறா:5022/4

எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் பண்டு தந்தது போதாதோ மேல் - திருப்:21/5
உங்கள் சங்கரர்தாமாய் நாம் ஆர் அண்ட பந்திகள்தாமாய் வானாய் - திருப்:21/13
பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை - திருப்:26/5
தனி மலர் அஞ்சு ஆர் புங்கத்து அமர் ஆடி - திருப்:26/10
கோடு ஆர் செம்பொன் தோளா நின் சொல் கோடாது என் கைக்கு அருள்தாராய் - திருப்:37/4
சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே - திருப்:37/7
காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன் - திருப்:46/2
சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம் சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே - திருப்:46/7
கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே - திருப்:61/6
கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கந்தா செந்தில் பெருமாளே - திருப்:61/8
தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி - திருப்:68/3
திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம் சடா பஞ்சத்து உறு தோகை - திருப்:74/7
மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும் - திருப்:76/5
குன்றும் கரடு ஆர் மரம் அதும் வீசி - திருப்:95/6
வரி ஆர் கரும் கண் மட மாதர் மகவு ஆசை தொந்தம் அதுவாகி - திருப்:98/1
கொங்கு ஆர் பைம் தேன் உண்டே வண்டு ஆர் குன்றாள் கொங்கைக்கு இனியோனே - திருப்:102/5
கொங்கு ஆர் பைம் தேன் உண்டே வண்டு ஆர் குன்றாள் கொங்கைக்கு இனியோனே - திருப்:102/5
கங்காளம் சேர் மொய்ம்பு ஆர் அன்பார் கன்றே உம்பர்க்கு ஒரு குருநாதா - திருப்:102/7
சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே - திருப்:112/3
சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே - திருப்:112/3
போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே - திருப்:112/5
சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே - திருப்:114/8
இக்கு ஆர் சரத்து மதனுக்கு இளைத்து வெகுவாக கலம்ப வகை பாடி புகழ்ந்து பல - திருப்:115/4
மட்டு ஆர் மலர் கமலம் உற்ற சன திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய மருமகன் ஆகி - திருப்:115/21
அவசமுறஅவசமுற ஆர் ஓமல் தரவும் மிக மெலிவு ஆனாள் - திருப்:116/6
அடியவர்பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா - திருப்:135/10
அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா தாழ்வார் - திருப்:135/11
வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா நாள் ஆர் - திருப்:135/13
வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா நாள் ஆர்
  வனச மேல் வரு தேவா மூவா மயில் வாழ்வே - திருப்:135/13,14
வந்தவர் ஆர் என அழைத்து கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்தி கண் பட - திருப்:155/5
பெரியதோர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை - திருப்:178/1
வாரணம்தனை நேரான மா முலை மீது அணிந்திடு பூண் ஆரம் ஆர் ஒளி - திருப்:197/1
வடிவு ஆர் குறத்தி தன் பொன் அடி மீது நித்தமும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே - திருப்:209/3
கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே - திருப்:216/4
நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே - திருப்:223/4
காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே - திருப்:223/7
கொந்து ஆர் குரா அடியினும் அடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறி பல - திருப்:268/1
கொத்து ஆர் பல் கால் அற்று ஏக பாழ் குப்பாயத்தில் செயல் மாறி - திருப்:341/1
ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் தெருவூடே - திருப்:357/2
மரகத வித நேர் முத்து ஆர் நகை குறமகள் அதி பார பூண் முலை - திருப்:360/9
நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே - திருப்:391/8
அரு மா மதனை பிரியாத சரம் கயல் ஆர் நயன கொடியார்தம் - திருப்:393/1
அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து அணையா வலி கெட்டு உடல் தாழ - திருப்:393/2
அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து அணையா வலி கெட்டு உடல் தாழ - திருப்:393/2
காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர் - திருப்:412/3
சீயத்தொடெ ஏகாசர் சடை கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர் - திருப்:412/14
கீத விநோதம் மெச்சு குரலாலே கீறும் மை ஆர் முடித்த குழலாலே - திருப்:414/1
அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்தாக்கமும் மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ - திருப்:415/9
சரிர ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய - திருப்:427/6
சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே - திருப்:441/4
மந்தரம் என் குவடு ஆர் தனங்களில் ஆரம் அழுந்திடவே மணம் பெறு - திருப்:456/1
அசைத்து கொந்தள ஓலைகள் ஆர் பணி மினுக்கி சந்தன வாசனை சேறுடன் - திருப்:459/7
கந்தரர் தேமலும் மார் பரம்ப நல் சந்தன சேறு உடன் ஆர் கவின்பெறு - திருப்:468/5
சிந்துரம் மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகாமணி மோக வஞ்சியர் - திருப்:468/13
உன் செவிக்கு ஏறலைகொல் பெண்கள் மெல் பார்வையைகொல் உன் சொலை தாழ்வு செய்து மிஞ்சுவார் ஆர்
  உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர் துணைவர் உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய் - திருப்:472/3,4
உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர் துணைவர் உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய் - திருப்:472/4
வரிய பாளிதம் உந்து உடையார் இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல் - திருப்:474/5
பூச்சி புழுவோடு அடை ஆர் தசையுற மேவி - திருப்:480/2
அண்டர்களோடு அடல் ஆர் தக்கன் சந்திர சூரியர் வீழ சென்று - திருப்:491/11
சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை மோந்து பயோதரம் அது அணையாக - திருப்:501/1
ஏடு ஆர் குழல் சுருபி ஞானாதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா - திருப்:505/7
முத்து வார் அணி பொன் குவடு ஆர் முலை விலைமாதர் - திருப்:514/2
திகழ் கடப்பம் புட்பமது ஆர் புயம் மறைத்து உரு கொண்ட அற்புதமாகிய - திருப்:541/13
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா - திருப்:546/11
செம்பொன் ஆர் திகழ் சித்ர கோபுரம் மஞ்சு இராப்பகல் மெத்த சூழ்தரு - திருப்:547/15
இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய - திருப்:548/13
விராவு வயல் ஆர் புரி சிராமலை பிரான்மலை விராலிமலை மீதில் உறை பெருமாளே - திருப்:570/8
கார் போல் தவழ் ஓதி நிழல்தனில் ஆர் வாள் கடை ஈடு கனம் கொடு - திருப்:578/3
மன்று ஆடி தந்த மைந்தா மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே - திருப்:585/5
பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே - திருப்:586/2
செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப அணிவோனே - திருப்:586/7
கொந்து ஆர் அரும்பு நின் தாள் மறந்து குன்றாமல் உன்தன் அருள்தாராய் - திருப்:587/4
சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி - திருப்:592/8
மு சாலி சாலி தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சி புய வேளே - திருப்:595/7
தேம் ஆர் தே மா காமீ பாகீ தேசா தேசத்தவர் ஓதும் - திருப்:599/7
முதிரும் மாரவார நட்பொடு இலகு ஆர் அ ஆரம் எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே - திருப்:647/1
கயல் உலாம் விசோனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா - திருப்:647/6
மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன் கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி - திருப்:667/5
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு - திருப்:673/11
கொந்து ஆர் பைம் தார் திண் குய குற மின் தாள் சிந்தா சிந்தையில் மயல் - திருப்:674/11
சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு ஆர் துடி நீப இடையாலே - திருப்:680/3
பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே - திருப்:680/6
வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இருபாலும் உற வீறு - திருப்:680/7
கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார் - திருப்:681/1
பார்ப்பாய் அலையோ அடியாரொடு சேர்ப்பாய் அலையோ உனது ஆர் அருள் - திருப்:681/5
வேட்டார் மகவான் மகளானவள் ஏட்டு ஆர் திரு மா மணவா பொனின் - திருப்:681/15
மரு மல்லி ஆர் குழலின் மட மாதர் மருள் உள்ளி நாய் அடியன் அலையாமல் - திருப்:685/1
பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார் - திருப்:692/3
வரிசையில் முற்றிய வாகு ஆர் ஆம் இயல் மட மாதர் - திருப்:697/2
என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு - திருப்:697/11
திரு தேர் சூழ் மதிள் ஏர் ஆர் தூபிகள் அடுக்கார் மாளிகையே நீள் ஏர் உள - திருப்:710/15
உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள் உகப்பு ஆர் வால சந்த்ர நுதல் நூலாம் - திருப்:711/1
உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள் உகப்பு ஆர் வால சந்த்ர நுதல் நூலாம் - திருப்:711/1
உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள் உகப்பு ஆர் வால சந்த்ர நுதல் நூலாம் - திருப்:711/1
எருக்கு ஆர் தாளி தும்பை மரு சேர் போது கங்கையினை சூடு ஆதி நம்பர் புதல்வோனே - திருப்:711/5
அகி சேர் அல்குலார் தொடை வாழையின் அழகு ஆர் கழல் ஆர்தர ஏய்தரு - திருப்:721/5
வெம் கயத்து உரி ஆர் போர்வையர் மிகு வாழ்வே - திருப்:729/12
அச்சாய் இறுக்கு ஆணி காட்டி கடைந்த செப்பு ஆர் முலை கோடு நீட்டி சரங்களை - திருப்:732/1
வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள் ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன் - திருப்:732/5
பாரம் ஆர் தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி - திருப்:735/5
ஆர் அ தன பார துகில் மூடி பலர் காண கையில் யாழ் வைத்து இசை கூர குழல் உடை சோர - திருப்:741/1
ஆலம் என விட்டு வீசு கலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நினைவாலே - திருப்:743/3
போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் - திருப்:759/2
போல் தாய் நாளும் கை பொருள் உடையவர் மேல் தாள் ஆர் தம் பற்றிடு ப்ரமையது - திருப்:759/3
திரையில் பொன் கிரி ஆடவும் வாசுகி புனைவித்து தலைநாள் அமுது ஆர் சுவை - திருப்:761/13
ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆர் கணை மோதிரம் ஏய் பல - திருப்:767/3
மை ஆர் அ கிரியே பொடியாய் விட பொய் சூர் பதியே கெட வானவர் - திருப்:767/9
ஆர் தரு மேனிய தேன் இயல் கொன்றையோடு - திருப்:775/6
போமாறு இனி வேறு எது ஓது எனவே ஆர் அருளால் அவர் ஈதரு - திருப்:775/9
கார் ஆர் தரு காழியில் மேவிய தம்பிரானே - திருப்:775/16
பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ் - திருப்:808/3
தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக மாதர்கள் - திருப்:809/1
புழுகு ஆர் பனிர் மூசிய வாசனை உர கால் அணி கோல மென் மாலைய - திருப்:809/11
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் - திருப்:820/1
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய - திருப்:822/13
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா - திருப்:822/14
கன தனமும் மார்பும் உறல் இச்சையால் அயர்த்து கழு நீர் ஆர் - திருப்:823/2
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று - திருப்:828/1
முக்கணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோள் ஆர்
  மொய்த்த மண துழாயோன் மாயோன் மருகோனே - திருப்:834/9,10
அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர் - திருப்:836/1
வளைத்து உகுப்ப மை ஆர் குழல் தோளொடும் அலை மோத - திருப்:846/2
அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் அருள்வாயே - திருப்:852/8
கொந்து ஆர் மை குழல் இந்து ஆர் சர்க்கரை என்றே செப்பிய மொழி மாதர் - திருப்:857/1
கொந்து ஆர் மை குழல் இந்து ஆர் சர்க்கரை என்றே செப்பிய மொழி மாதர் - திருப்:857/1
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இ தரை மலை போலே - திருப்:857/2
பஞ்சு சேர் நிர்த்த பத மாதர் பங்கம் ஆர் தொக்கில் படியாமல் - திருப்:866/1
திருவின் மா மரம் ஆர் பழன பதி அயிலும் சோறவை ஆளும் துறை பதி - திருப்:886/13
சுரர்தம் ஆர் அமுதோ குயிலோ மொழி இதழ் கோவை - திருப்:887/2
இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு - திருப்:891/3
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர் - திருப்:904/4
துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர் பெருமாளே - திருப்:914/16
எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது - திருப்:926/7
தங்க செங்கோலை அசை சேவக கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில் - திருப்:944/15
கனத்த செந்தமிழால் நினையே தின நினைக்கவும் தருவாய் உனது ஆர் அருள் - திருப்:945/9
அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பொடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி - திருப்:962/5
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா - திருப்:963/7
எண் புனம் மேவி இருந்தவள் மோக பெண் திருவாளை மணந்து இயல் ஆர் சொற்கு - திருப்:972/15
ஏடு கொத்து ஆர் அலர் வார் குழல் ஆட பட்டு ஆடை நிலாவிய ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர் - திருப்:975/1
மெய் தேவர் துதித்திட தரு பொற்பு ஆர் கமல பதத்தினை மெய்ப்பாக வழுத்திட க்ருபைபுரிவாயே - திருப்:977/4
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம் - திருப்:977/7
பாகு ஒத்த சொல் பாகத்தாளை பாரித்து ஆர் நல் குமரேசா - திருப்:988/7
பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல - திருப்:989/3
வாகு தோளில் அணைத்தும் மாகம் ஆர் பொழில் உற்ற வாகை மா நகர் பற்று பெருமாளே - திருப்:990/8
மீது இருக்கு நா மாதோடு சேய் இதழ் மீது இருக்கும் ஏர் ஆர் மா புலோமசை - திருப்:994/9
ஆதி சத்தி சாமா தேவி பார்வதி நீலி துத்தி ஆர் நீள் நாக பூஷணி - திருப்:994/13
நாடு அறியும்படி கூப்பிடு நாவலர்தம் களை ஆர் பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில் - திருப்:1000/3
நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே - திருப்:1009/8
கற்பு ஆர் மெய்ப்பாட்டை தவறிய சொல் பாகை காட்டி புழுகொடு - திருப்:1018/1
மாயா மானே கோனே மான் ஆர் வாழ்வே கோழி கொடியோனே - திருப்:1038/6
தேனே தேன் நீள் கான் ஆறாய் வீழ் தேசு ஆர் சாரல் கிரியோனே - திருப்:1038/7
தார் ஆர் ஆர் தோள் ஈராறானே சார் வானோர் நல் பெருவாழ்வே - திருப்:1040/3
தார் ஆர் ஆர் தோள் ஈராறானே சார் வானோர் நல் பெருவாழ்வே - திருப்:1040/3
சீர் ஆர் மாதோடே வாழ்வார் நீள் சே ஊர்வார் பொன் சடை ஈசர் - திருப்:1040/7
போதாகாரா பாராய் சீர் ஆர் போது ஆர் பாதத்து அருள்தாராய் - திருப்:1041/4
போதாகாரா பாராய் சீர் ஆர் போது ஆர் பாதத்து அருள்தாராய் - திருப்:1041/4
தீது ஆர் தீயார் தீயூடே முள் சேரா சேதித்திடுவோர்தம் - திருப்:1041/7
வாராய் பேதாய் கேளாய் நீ தாய் மான் ஆர் மோகத்துடன் ஆசை - திருப்:1042/1
ஆள்வாய் நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார் தாம் - திருப்:1042/4
இலவில் ஊறு தேன் ஊறல் பருகி ஆர் அவா மீறி இளகி ஏறு பாடீர தன பாரம் - திருப்:1051/3
தவிடின் ஆர் பதம் எனினும் ஏற்பவர் தாழாது ஈயேன் வாழாதே சாவது சால - திருப்:1059/3
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி - திருப்:1061/7
மறலி போல் சில நயன வேல் கொடு மாயா தோயா வேய் ஆர் தோளார் மறை ஓதும் - திருப்:1063/1
குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா கூர் வேலாலே அசுரேசர் - திருப்:1063/7
கடின போகத்த புளக வாருற்ற களபம் ஆர் செப்பு முலை மீதே - திருப்:1084/2
செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட - திருப்:1102/3
தாதகி சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன நீடு - திருப்:1104/5
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே - திருப்:1109/6
பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காக போய் முட்டி கிரி சாடி - திருப்:1116/5
உற்று ஓதுற்றே பற்றா நிற்பார் அ காலத்துக்கு உறவு ஆர் தான் - திருப்:1117/4
அழகு இளம் குறமானார் தேன் ஆர் மணவாளா - திருப்:1133/14
மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் வந்து கூட - திருப்:1140/6
நிறத்த நூபுர பாதாரவிந்தமும் உடுத்த பீலியும் வார் ஆர் தனங்களும் - திருப்:1151/9
தேன் இரதத்தே முழுகி பாகு நிகர்த்து ஆர் அமுத தேறல் என கூறும் மொழி செயலாலே - திருப்:1160/2
தேன் ஆர் மொழீ வளி நாயகி நாயக வான் நாடு உளோர் தொழு மா மயில்வாகன - திருப்:1162/5
பூசல் வந்து இரு தோடு ஆர் காதொடு மோதிடும் கயல் மானார் மானம் இல் - திருப்:1181/1
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை - திருப்:1192/9
பெருக்க வெற்றி கூர் திரு கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன் - திருப்:1207/7
வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும் உனது ஆர் பத்மம் முகம் ஆறு - திருப்:1216/3
வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும் உனது ஆர் பத்மம் முகம் ஆறு - திருப்:1216/3
நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க நான் ஆர் மகிழ்ந்து உனை ஓத - திருப்:1221/3
நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க நான் ஆர் மகிழ்ந்து உனை ஓத - திருப்:1221/3
நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க நான் ஆர் மகிழ்ந்து உனை ஓத - திருப்:1221/3
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர் - திருப்:1221/4
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர் - திருப்:1221/4
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர் - திருப்:1221/4
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர் - திருப்:1221/4
கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி கொண்டு கோகில மொழி கூறும் - திருப்:1228/5
கொடி கோட்டு மல்லி குரவ ஆர் கொள் தொல்லை மறை வாழ்த்து செய்ய கழல் தாராய் - திருப்:1230/4
மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம் - திருப்:1232/3
மெச்சவே புடைத்த முத்தம் ஆர் தனத்தி மிக்க வாள் படைத்த விழியாலே - திருப்:1256/7
ஆர் அமுது உண்டு அணை மீதில் இருந்து அநுராகம் விளைந்திட விளையாடி - திருப்:1262/3
முற்று மதி ஆர் முகத்துற்ற வேல் உறப்பட்டு முகில் போல் மனத்து இருள் மூடி - திருப்:1273/2
ஆர் அமுதமான சர்க்கரை தேனே ஆன அநுபூதியை தருவாயே - திருப்:1293/2
ஆர் அமுதமான தந்தி மணவாளா ஆறு முகம் ஆறிரண்டு விழியோனே - திருப்:1309/3
கரு தாய் முலை ஆர் அமுதத்தினில் இனிதாகி - திருப்:1314/4

வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு - நாலாயி:2/3
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர் - நாலாயி:22/1
சுருப்பு ஆர் குழலி யசோதை முன் சொன்ன - நாலாயி:43/1
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று - நாலாயி:48/1
கான் ஆர் நறும் துழாய் கைசெய்த கண்ணியும் - நாலாயி:50/1
வான் ஆர் செழும் சோலை கற்பகத்தின் வாசிகையும் - நாலாயி:50/2
தேன் ஆர் மலர் மேல் திருமங்கை போத்தந்தாள் - நாலாயி:50/3
முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன் முன்ன முகத்து அணி ஆர் மொய் குழல்கள் அலைய - நாலாயி:68/3
கொத்து ஆர் கரும் குழல் கோபால கோளரி - நாலாயி:124/3
பார் ஆர் தொல் புகழான் புதுவை_மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன - நாலாயி:151/3
வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல் - நாலாயி:171/2
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் - நாலாயி:226/1
கொய் ஆர் பூம் துகில் பற்றி தனி நின்று குற்றம் பலபல செய்தாய் - நாலாயி:226/2
கரும்பு ஆர் நீள் வயல் காய் கதிர் செந்நெலை கற்று ஆநிரை மண்டி தின்ன - நாலாயி:228/1
சுரும்பு ஆர் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும் - நாலாயி:228/3
சுருட்டு ஆர் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி - நாலாயி:229/2
முத்து ஆர் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ_ஏழு சென்ற பின் வந்தாய் - நாலாயி:232/2
கார் ஆர் மேனி நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி - நாலாயி:233/1
கடி ஆர் பொழில் அணி வேங்கடவா கரும் போர் ஏறே நீ உகக்கும் - நாலாயி:247/1
திண் ஆர் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன் - நாலாயி:252/1
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன - நாலாயி:296/3
கார் ஆர் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு - நாலாயி:316/1
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தை கண்டார் உளர் - நாலாயி:330/4
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் - நாலாயி:368/1
செம்பொன் ஆர் மதில் சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர் - நாலாயி:368/2
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்னம் - நாலாயி:373/2
நின்னுளேனாய் பெற்ற நன்மை இ உலகினில் ஆர் பெறுவார் - நாலாயி:465/2
செந்தாமரை கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப - நாலாயி:491/7
சுந்தரனை சுரும்பு ஆர் குழல் கோதை தொகுத்து உரைத்த - நாலாயி:596/3
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே - நாலாயி:616/4
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட சுனையில் - நாலாயி:678/3
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் - நாலாயி:683/3
அணியின் ஆர் செம்பொன் ஆய அரு வரை அனைய கோயில் - நாலாயி:892/3
ஆர் உளர் களைகண் அம்மா அரங்க மாநகருளானே - நாலாயி:900/4
கையின் ஆர் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல் - நாலாயி:933/1
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி - நாலாயி:946/3
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய் - நாலாயி:994/2
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என் - நாலாயி:995/2
தந்தான் சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:995/4
வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய - நாலாயி:996/3
கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை - நாலாயி:997/2
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் - நாலாயி:1005/3
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா - நாலாயி:1028/3
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா - நாலாயி:1031/3
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என் - நாலாயி:1032/3
புண் ஆர் ஆக்கை தன்னுள் புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் - நாலாயி:1033/2
விண் ஆர் நீள் சிகர விரை ஆர் திருவேங்கடவா - நாலாயி:1033/3
விண் ஆர் நீள் சிகர விரை ஆர் திருவேங்கடவா - நாலாயி:1033/3
திண் ஆர் மாடங்கள் சூழ் திருமங்கையர்_கோன் கலியன் - நாலாயி:1037/3
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே - நாலாயி:1037/4
கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன் - நாலாயி:1038/1
நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு - நாலாயி:1040/1
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய - நாலாயி:1040/3
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய - நாலாயி:1042/3
மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய - நாலாயி:1043/3
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை - நாலாயி:1047/2
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை - நாலாயி:1047/3
கவரி மா கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை - நாலாயி:1053/3
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி - நாலாயி:1062/3
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து - நாலாயி:1079/2
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் - நாலாயி:1080/1
பார் ஆர் உலகும் பனி மால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு - நாலாயி:1083/1
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1083/4
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனை புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன் - நாலாயி:1084/1
நீண்ட அத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை - நாலாயி:1089/3
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே - நாலாயி:1099/4
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை - நாலாயி:1141/2
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு - நாலாயி:1141/3
செந்நெல் ஆர் கவரி குலை வீசு தண் திருவயிந்திரபுரமே - நாலாயி:1154/4
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர்
  வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி - நாலாயி:1155/2,3
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் - நாலாயி:1163/2
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திருச்சித்ரகூடத்து உறை செங்கண்மாலுக்கு - நாலாயி:1167/1
கார் ஆர் புயல் கை கலிகன்றி குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் - நாலாயி:1167/3
பார் ஆர் உலகம் அளந்தான் அடி கீழ் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே - நாலாயி:1167/4
ஊன் முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர் சேவடி அணைவீர் உழு சே ஓட - நாலாயி:1179/2
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும் - நாலாயி:1179/3
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1179/4
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1181/4
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்து கவந்தனொடும் படை ஆர் திண் கை - நாலாயி:1183/1
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1183/4
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும் - நாலாயி:1188/3
கொலை புண் தலை குன்றம் ஒன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்
  இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால் - நாலாயி:1220/1,2
சிறை ஆர் உவண புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் - நாலாயி:1221/1
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் - நாலாயி:1221/2
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி கழுநீரில் மூழ்கி செழு நீர் தடத்து - நாலாயி:1223/3
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா - நாலாயி:1225/1
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும் - நாலாயி:1227/1
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில் - நாலாயி:1239/2
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர்
  சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் - நாலாயி:1243/2,3
கார் ஆர் திண் சிலை இறுத்த தனி காளை கருதும் இடம் - நாலாயி:1255/2
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில் குல மயில் நடம் ஆட - நாலாயி:1260/3
வாளை ஆர் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க - நாலாயி:1265/1
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில்_வண்ணன் உறை கோயில் - நாலாயி:1265/2
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் - நாலாயி:1281/2
மந்தம் ஆர் பொழில்கள்-தோறும் மட மயில் ஆலும் நாங்கை - நாலாயி:1306/3
கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே - நாலாயி:1306/4
கண் ஆர் கடல் போல் திருமேனி கரியாய் - நாலாயி:1308/1
திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள் - நாலாயி:1308/3
கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே - நாலாயி:1309/1
கான் ஆர் கரி கொம்பு அது ஒசித்த களிறே - நாலாயி:1311/1
தேன் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் - நாலாயி:1311/3
வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே - நாலாயி:1312/1
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் - நாலாயி:1312/2
சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் - நாலாயி:1312/3
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள் - நாலாயி:1314/3
சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் - நாலாயி:1315/3
பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா - நாலாயி:1316/1
நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் - நாலாயி:1316/2
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை - நாலாயி:1337/1
கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய்த - நாலாயி:1337/2
சீர் ஆர் இன் சொல் மாலை கற்று திரிவார் உலகத்தில் - நாலாயி:1337/3
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட - நாலாயி:1348/3
கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும் - நாலாயி:1350/3
பூ ஆர் கழனி எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே - நாலாயி:1350/4
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் - நாலாயி:1351/2
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் கவின் ஆர் கூடம் மாளிகைகள் - நாலாயி:1351/3
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் கவின் ஆர் கூடம் மாளிகைகள் - நாலாயி:1351/3
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே - நாலாயி:1351/4
மை ஆர் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் - நாலாயி:1352/1
நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம் - நாலாயி:1352/2
செய் ஆர் ஆரல் இரை கருதி செம் கால் நாரை சென்று அணையும் - நாலாயி:1352/3
புடை ஆர் கழனி எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே - நாலாயி:1354/4
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி - நாலாயி:1355/1
கற்றார் பரவும் மங்கையர்_கோன் கார் ஆர் புயல் கை கலிகன்றி - நாலாயி:1357/3
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு - நாலாயி:1371/2
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே - நாலாயி:1378/4
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே - நாலாயி:1380/4
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே - நாலாயி:1382/4
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிரி - நாலாயி:1386/3
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே - நாலாயி:1386/4
மருவாளால் என் குடங்கால் வாள் நெடும் கண் துயில் மறந்தாள் வண்டு ஆர் கொண்டல் - நாலாயி:1388/2
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இ உலகு ஏழ் உண்டு - நாலாயி:1399/3
ஆர் அழலால் உண்டானை கண்டது தென் அரங்கத்தே - நாலாயி:1402/4
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர்
  கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த - நாலாயி:1404/2,3
வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும் - நாலாயி:1429/1
கண்ணி ஆர் குறும் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான் - நாலாயி:1434/2
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள் - நாலாயி:1435/1
செம்பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும் - நாலாயி:1435/3
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட மார்வர் தகை சேர் - நாலாயி:1440/2
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் ஆர் புறவு சேர் - நாலாயி:1443/3
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர்
  பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர் - நாலாயி:1445/1,2
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர்
  மண்ணில் இது போல நகர் இல்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய் - நாலாயி:1445/2,3
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு - நாலாயி:1452/3
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில் - நாலாயி:1454/1
போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம் - நாலாயி:1466/1
தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை - நாலாயி:1467/1
ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் - நாலாயி:1467/3
தார் ஆர் மலர் கமல தடம் சூழ்ந்த தண் புறவில் - நாலாயி:1477/1
சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானை - நாலாயி:1477/2
கார் ஆர் புயல் தட கை கலியன் ஒலி மாலை - நாலாயி:1477/3
கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை - நாலாயி:1480/1
சொல் ஆர் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர் - நாலாயி:1484/3
கறை ஆர் நெடு வேல் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் - நாலாயி:1487/3
முனை ஆர் சீயம் ஆகி அவுணன் முரண் மார்வம் - நாலாயி:1489/1
சினை ஆர் தேமாம் செம் தளிர் கோதி குயில் கூவும் - நாலாயி:1489/3
நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய நறையூரே - நாலாயி:1489/4
உறி ஆர் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு - நாலாயி:1491/1
வெறி ஆர் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஊர் - நாலாயி:1491/2
பொறி ஆர் மஞ்ஞை பூம் பொழில்-தோறும் நடம் ஆட - நாலாயி:1491/3
தனி வாய் மழுவின் படை ஆண்ட தார் ஆர் தோளான் வார் புறவில் - நாலாயி:1509/2
தெள் ஆர் கடல்வாய் விட வாய சின வாள் அரவில் துயில் அமர்ந்து - நாலாயி:1510/1
புள் ஆர் புறவில் பூம் காவி பொலன் கொள் மாதர் கண் காட்ட - நாலாயி:1510/3
நள் ஆர் கமலம் முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே - நாலாயி:1510/4
வில் ஆர் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து - நாலாயி:1512/1
கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல் - நாலாயி:1512/2
சொல் ஆர் சுருதி முறை ஓதி சோமு செய்யும் தொழிலினோர் - நாலாயி:1512/3
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து - நாலாயி:1515/1
கந்து ஆர் களிற்று கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் - நாலாயி:1515/2
சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை - நாலாயி:1521/2
கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கை கார் அரக்கன் - நாலாயி:1522/1
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால் - நாலாயி:1538/3
கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள் - நாலாயி:1541/1
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி - நாலாயி:1548/3
கல் ஆர் கடும் கானம் திரிந்த களிறே - நாலாயி:1552/2
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் - நாலாயி:1557/1
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி - நாலாயி:1571/2
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற - நாலாயி:1572/2
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்றென்றும் வண்டு ஆர் நீலம் - நாலாயி:1584/2
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1588/4
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1589/4
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1591/4
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1592/4
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1593/4
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1595/4
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே - நாலாயி:1596/4
கோ ஆனார் மடிய கொலை ஆர் மழு கொண்டருளும் - நாலாயி:1599/1
கரு ஆர் கற்பகத்தை கண்டுகொண்டு களித்தேனே - நாலாயி:1604/4
அலை ஆர் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற - நாலாயி:1605/3
கலை ஆர் சொற்பொருளை கண்டுகொண்டு களித்தேனே - நாலாயி:1605/4
வார் ஆர் வன முலையாள் மலர் மங்கை நாயகனை - நாலாயி:1606/2
கார் ஆர் கரு முகிலை கண்டுகொண்டு களித்தேனே - நாலாயி:1606/4
பந்து ஆர் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே - நாலாயி:1609/1
நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோள் உடையாய் அடியேனை - நாலாயி:1610/1
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அ காவலை பிழைத்து - நாலாயி:1615/2
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1621/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே - நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே - நாலாயி:1625/4
வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒரு-பால் - நாலாயி:1631/1
தேன் ஆர் பொழில் தழுவும் சிறுபுலியூர் சலசயனத்து - நாலாயி:1631/3
மை ஆர் வரி நீல மலர் கண்ணார் மனம் விட்டிட்டு - நாலாயி:1635/1
சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர் சலசயனத்து - நாலாயி:1637/1
ஏர் ஆர் முகில்_வண்ணன்-தனை இமையோர் பெருமானை - நாலாயி:1637/2
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை - நாலாயி:1637/3
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற - நாலாயி:1644/3
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால் - நாலாயி:1653/2
நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் - நாலாயி:1653/3
கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ - நாலாயி:1653/4
ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி - நாலாயி:1682/1
பார் ஆர் உலகம் பரவ பெரும் கடலுள் - நாலாயி:1682/2
தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ - நாலாயி:1682/4
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை வடி கண் மடந்தை மா நோக்கம் - நாலாயி:1698/3
இருந்தார் தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்து புக்கு ஒளிப்ப - நாலாயி:1699/3
இலை ஆர் மலர் பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு - நாலாயி:1704/1
கொலை ஆர் வேழம் நடுக்குற்று குலைய அதனுக்கு அருள்புரிந்தான் - நாலாயி:1704/2
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மா கழுதையும் - நாலாயி:1705/2
மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து - நாலாயி:1705/3
மருவு ஆர் புயல் கை கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் - நாலாயி:1707/3
கான் ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1718/4
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் - நாலாயி:1719/2
பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின் - நாலாயி:1720/1
ஏர் ஆர் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை - நாலாயி:1720/2
கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும் - நாலாயி:1720/3
கார் ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1720/4
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை - நாலாயி:1723/2
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1723/4
தேன் ஆர் இன் சொல் தமிழ் மாலை செப்ப பாவம் நில்லாவே - நாலாயி:1727/4
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று - நாலாயி:1730/3
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தை கிடந்து உகந்த - நாலாயி:1732/3
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே - நாலாயி:1733/4
கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும் - நாலாயி:1736/1
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல் திசையுள் - நாலாயி:1736/2
வண்டு ஆர் பூ மா மலர் மங்கை மண நோக்கம் - நாலாயி:1738/1
பெண் ஆனாள் பேர் இளம் கொங்கையின் ஆர் அழல் போல் - நாலாயி:1741/1
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன் - நாலாயி:1748/2
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே - நாலாயி:1753/4
கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும் - நாலாயி:1778/1
பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன் - நாலாயி:1778/3
கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா ஆடல் - நாலாயி:1784/1
புனை ஆர் மணி மாட புல்லாணி கைதொழுதேன் - நாலாயி:1784/3
துங்க ஆர் அரவ திரை வந்து உலவ தொடு கடலுள் - நாலாயி:1799/1
பொங்கு ஆர் அரவில் துயிலும் புனிதர் ஊர் போலும் - நாலாயி:1799/2
கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே - நாலாயி:1799/4
நார் ஆர் இண்டை நாள்மலர் கொண்டு நம் தமர்காள் - நாலாயி:1805/1
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல் - நாலாயி:1807/2
கலை ஆர் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை - நாலாயி:1807/3
நிலை ஆர் பாடல் பாட பாவம் நில்லாவே - நாலாயி:1807/4
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி என கருதினாயேல் - நாலாயி:1808/2
உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு - நாலாயி:1813/1
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும் - நாலாயி:1813/3
மூவரில் முன் முதல்வன் முழங்கு ஆர் கடலுள் கிடந்து - நாலாயி:1828/1
புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள் - நாலாயி:1829/1
வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை - நாலாயி:1836/1
பாலை ஆர் அமுதத்தினை பைம் துழாய் - நாலாயி:1850/2
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் - நாலாயி:1851/3
வானை ஆர் அமுதம் தந்த வள்ளலை - நாலாயி:1853/1
திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு - நாலாயி:1880/1
கார் ஆர் புயல் கை கலிகன்றி மங்கையர்_கோன் - நாலாயி:1897/1
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கி புக பொன் மிடறு அத்தனை-போது - நாலாயி:1898/3
சுவர் ஆர் கதவின் புறமே வந்து நின்றீர் - நாலாயி:1923/3
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ - நாலாயி:1923/4
ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி ஆற்றலை ஆற்றல் மிகுத்து - நாலாயி:1934/1
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே - நாலாயி:1934/4
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு - நாலாயி:1940/3
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே - நாலாயி:1940/4
உரை ஆர் தொல் புகழ் உத்தமனை வர - நாலாயி:1943/3
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர - நாலாயி:1945/3
மல் ஆர் தோள் வடவேங்கடவனை வர - நாலாயி:1946/3
கொங்கு ஆர் சோலை குடந்தை கிடந்த மால் - நாலாயி:1949/3
பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை - நாலாயி:1950/3
சுரும்பு ஆர் பொழில் மங்கையர்_கோன் - நாலாயி:1951/2
மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி - நாலாயி:1961/3
வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி - நாலாயி:1975/2
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தார் தம்மையே - நாலாயி:1975/4
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காண் ஏடீ - நாலாயி:1995/2
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு - நாலாயி:1995/3
தோடு ஆர் நறும் துழாய் மார்வனை ஆர்வத்தால் - நாலாயி:2015/3
மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும் - நாலாயி:2016/1
கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட - நாலாயி:2016/2
கள் ஆர் துழாயும் கணவலரும் கூவிளையும் - நாலாயி:2017/1
முள் ஆர் முளரியும் ஆம்பலும் முன் கண்ட-கால் - நாலாயி:2017/2
கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும் - நாலாயி:2018/1
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று - நாலாயி:2018/3
வெறி ஆர் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த - நாலாயி:2019/1
உறி ஆர் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட - நாலாயி:2019/2
தூங்கு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து - நாலாயி:2024/1
உரு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து - நாலாயி:2025/1
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா - நாலாயி:2029/1
பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும் - நாலாயி:2050/1
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் - நாலாயி:2063/2
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை - நாலாயி:2065/2
பொங்கு ஆர் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று - நாலாயி:2068/1
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழி கையால் நீ - நாலாயி:2117/3
உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி-தோறு ஊழி - நாலாயி:2149/1
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை உணர்வார் ஆர் - நாலாயி:2149/2
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை உணர்வார் ஆர்
  விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேத - நாலாயி:2149/2,3
இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம் - நாலாயி:2159/1
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் - நாலாயி:2165/1
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்-தனக்கு - நாலாயி:2170/1
ஆர் ஓத வல்லார் அவர் - நாலாயி:2192/4
மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன் - நாலாயி:2198/1
அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும் - நாலாயி:2205/1
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என் - நாலாயி:2224/3
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த - நாலாயி:2233/2
பூ ஆர் அடி நிமிர்த்த-போது - நாலாயி:2252/4
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு - நாலாயி:2286/4
வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும் - நாலாயி:2303/1
கடி ஆர் மலர் தூவி காணும் படியானை - நாலாயி:2303/2
விரும்பி விண் மண் அளந்த அம் சிறைய வண்டு ஆர்
  சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும் - நாலாயி:2304/1,2
இருள் ஆர் திருமேனி இன் பவள செ வாய் - நாலாயி:2310/3
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி - நாலாயி:2343/3
விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி - நாலாயி:2360/3
ஆர் படு வான் நேமி அரவு_அணையான் சேவடிக்கே - நாலாயி:2361/3
கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய் - நாலாயி:2366/1
செவியின் ஆர் கேள்வியராய் சேர்ந்தார் புவியினார் - நாலாயி:2366/2
நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால் - நாலாயி:2374/1
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து - நாலாயி:2384/2
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான் - நாலாயி:2432/1
அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு - நாலாயி:2440/1
ஆவது ஈது அன்று என்பார் ஆர் - நாலாயி:2453/4
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து - நாலாயி:2459/4
சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள் - நாலாயி:2468/2
இனி வளை காப்பவர் ஆர் எனை ஊழிகள் ஈர்வனவே - நாலாயி:2490/4
கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம் வேட்டை கொண்டாட்டு - நாலாயி:2499/1
அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் புள் ஊரும் கள்வர் - நாலாயி:2499/2
வம்பு ஆர் வினா சொல்லவோ எம்மை வைத்தது இ வான் புனத்தே - நாலாயி:2499/4
அருள் ஆர் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் - நாலாயி:2510/1
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்-பால் - நாலாயி:2510/2
இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த - நாலாயி:2541/1
இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய் - நாலாயி:2553/1
சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் - நாலாயி:2577/3
யாம் ஆர் வணக்கம் ஆர் ஏ பாவம் நல் நெஞ்சே - நாலாயி:2594/3
யாம் ஆர் வணக்கம் ஆர் ஏ பாவம் நல் நெஞ்சே - நாலாயி:2594/3
அளக்கிற்பார் பாரின் மேல் ஆர் - நாலாயி:2608/4
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே சீர் ஆர்
  மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் - நாலாயி:2609/2,3
ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே மற்றொருவர்க்கு - நாலாயி:2626/3
ஆர் ஆகி எ இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கை - நாலாயி:2663/3
கார் ஆர் வரை கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை - நாலாயி:2673/1
கார் ஆர் வரை கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை - நாலாயி:2673/1
சீர் ஆர் சுடர் சுட்டி செங்கலுழி பேர் ஆற்று - நாலாயி:2673/2
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று - நாலாயி:2674/3
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி - நாலாயி:2675/4
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு - நாலாயி:2675/5
ஏர் ஆர் முயல் விட்டு காக்கை பின் போவதே - நாலாயி:2676/2
ஏர் ஆர் இள முலையீர் என்தனக்கு உற்றது தான் - நாலாயி:2676/3
கார் ஆர் குழல் எடுத்து கட்டி கதிர் முலையை - நாலாயி:2677/1
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் - நாலாயி:2677/4
நீர் ஆர் கமலம் போல் செங்கண்மால் என்று ஒருவன் - நாலாயி:2677/5
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே - நாலாயி:2677/7
ஏர் ஆர் இள முலையார் அன்னையரும் எல்லாரும் - நாலாயி:2678/2
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் - நாலாயி:2678/4
ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை - நாலாயி:2679/2
சீர் ஆர் செழும் புழுதி காப்பிட்டு செம் குறிஞ்சி - நாலாயி:2679/3
தார் ஆர் நறு மாலை சாத்தற்கு தான் பின்னும் - நாலாயி:2680/1
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி - நாலாயி:2682/1
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா - நாலாயி:2682/2
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும் - நாலாயி:2683/1
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திரு துழாய - நாலாயி:2683/2
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா - நாலாயி:2684/1
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூறுகெனோ - நாலாயி:2684/4
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம் துவர் வாய் - நாலாயி:2685/3
வார் ஆர் வன முலையாள் மத்து ஆர பற்றிக்கொண்டு - நாலாயி:2685/4
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய் - நாலாயி:2685/5
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை - நாலாயி:2685/6
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு - நாலாயி:2685/7
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை - நாலாயி:2685/8
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம் - நாலாயி:2685/9
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைம் நீட்டி - நாலாயி:2685/11
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே - நாலாயி:2686/1
நீர் ஆர் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி - நாலாயி:2688/1
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு - நாலாயி:2688/4
வார் ஆர் வன முலையால் வைதேவி காரணமா - நாலாயி:2690/2
ஏர் ஆர் தடம் தோள் இராவணனை ஈரைந்து - நாலாயி:2690/3
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண்மால் - நாலாயி:2690/4
போர் ஆர் நெடு வேலோன் பொன்_பெயரோன் ஆகத்தை - நாலாயி:2691/1
சீர் ஆர் திருமார்பின் மேல் கட்டி செம் குருதி - நாலாயி:2692/1
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக - நாலாயி:2693/5
நீர் ஆர் மலர் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால் - நாலாயி:2694/3
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு - நாலாயி:2694/5
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூம் துழாய் - நாலாயி:2696/2
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா - நாலாயி:2697/1
சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி - நாலாயி:2700/1
கார் ஆர் கடல்_வண்ணன் பின் போன நெஞ்சமும் - நாலாயி:2700/6
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார் - நாலாயி:2704/1
வார் ஆர் வன முலை வாசவதத்தை என்று - நாலாயி:2704/4
தார் ஆர் தடம் தோள் தளை காலன் பின் போனாள் - நாலாயி:2705/2
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் - நாலாயி:2706/2
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே - நாலாயி:2706/3
கார் ஆர் மணி நிற கண்ணனூர் விண்ணகரம் - நாலாயி:2707/1
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர் - நாலாயி:2707/2
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை - நாலாயி:2707/3
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை - நாலாயி:2707/4
வார் ஆர் பூம் பெண்ணை மடல் - நாலாயி:2710/2
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த - நாலாயி:2770/2
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ்_உலகும் போய் கடந்து அங்கு - நாலாயி:2771/1
கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமல பதங்கள் நெஞ்சில் - நாலாயி:2792/1
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே - நாலாயி:2809/4
அடை ஆர் கமலத்து அலர்_மகள் கேள்வன் கை ஆழி என்னும் - நாலாயி:2823/1
புடை ஆர் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று - நாலாயி:2823/3
சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை - நாலாயி:2834/1
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே - நாலாயி:2857/4
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வ - நாலாயி:2858/1
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அ எழில் மறையில் - நாலாயி:2864/3
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் - நாலாயி:2947/3
செடி ஆர் ஆக்கை அடியாரை சேர்தல் தீர்க்கும் திருமாலை - நாலாயி:2949/3
வடிவு ஆர் மாதவனாரே - நாலாயி:2963/4
தண் ஆர் வேங்கட - நாலாயி:2978/3
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர்
  மா பாவம் விட அரற்கு பிச்சை பெய் - நாலாயி:3021/2,3
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன் - நாலாயி:3026/3
எனது ஆவி யார் யான் ஆர் தந்த நீ கொண்டாக்கினையே - நாலாயி:3034/4
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே - நாலாயி:3035/4
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி - நாலாயி:3039/3
கார் ஆர் கரு முகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு - நாலாயி:3057/2
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் - நாலாயி:3070/3
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம் - நாலாயி:3072/3
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே - நாலாயி:3094/4
காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை என் காணுமாறு - நாலாயி:3095/1
கை ஆர் சக்கர கண்ணபிரானே - நாலாயி:3101/2
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல் - நாலாயி:3101/3
கொந்து ஆர் காயாவின் கொழு மலர் திரு நிறத்த - நாலாயி:3136/3
புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன் - நாலாயி:3190/2
இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே - நாலாயி:3190/4
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை - நாலாயி:3191/2
ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடை - நாலாயி:3204/1
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே - நாலாயி:3210/3
மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையை பாடினால் - நாலாயி:3212/3
ஆழ்ந்து ஆர் கடல்_பள்ளி_அண்ணல் அடியவர் ஆ-மினோ - நாலாயி:3236/4
வண்டு ஆர் பூம் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல் - நாலாயி:3321/2
அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே - நாலாயி:3324/4
கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று - நாலாயி:3341/1
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்
  ஐயோ கண்ணபிரான் அறையோ இனி போனாலே - நாலாயி:3341/3,4
அம்மான் ஆழிப்பிரான் அவன் எ இடத்தான் யான் ஆர்
  எ மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் - நாலாயி:3347/1,2
ஆவார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் - நாலாயி:3349/1
தேவு ஆர் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் - நாலாயி:3349/3
கான் ஆர் ஏனமுமாய் கற்கி ஆம் இன்னம் கார்_வண்ணனே - நாலாயி:3350/4
ஆர் வண்ணத்தால் உரைப்பார் அடி கீழ் புகுவார் பொலிந்தே - நாலாயி:3351/4
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் - நாலாயி:3353/3
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே - நாலாயி:3374/4
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே - நாலாயி:3377/4
ஆர் என்னை ஆராய்வார் அன்னையரும் தோழியரும் - நாலாயி:3378/1
இ நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இ இடத்தே - நாலாயி:3379/4
காப்பார் ஆர் இ இடத்து கங்கு இருளின் நுண் துளியாய் - நாலாயி:3380/1
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர் திருக்குடந்தை - நாலாயி:3418/3
ஏர் ஆர் கோலம் திகழ கிடந்தாய் கண்டேன் எம்மானே - நாலாயி:3418/4
கன் ஆர் மதிள் சூழ் குடந்தை கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள் - நாலாயி:3420/3
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும் - நாலாயி:3429/2
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் - நாலாயி:3429/3
நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கு ஆர் பிறர் நாயகரே - நாலாயி:3493/4
சீர் ஆர் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயன் ஆனாய் - நாலாயி:3539/2
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன்-பால் - நாலாயி:3539/3
சேறு ஆர் சுனை தாமரை செம் தீ மலரும் திருவேங்கடத்தானே - நாலாயி:3551/3
பூ ஆர் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே - நாலாயி:3553/4
திணர் ஆர் மேகம் என களிறு சேரும் திருவேங்கடத்தானே - நாலாயி:3554/3
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே - நாலாயி:3554/4
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே - நாலாயி:3556/3
நொடி ஆர் பொழுதும் உன பாதம் காண நோலாது ஆற்றேனே - நாலாயி:3556/4
நீல் ஆர் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் - நாலாயி:3557/2
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் - நாலாயி:3565/3
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே - நாலாயி:3576/3
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த - நாலாயி:3675/1
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்-மின் - நாலாயி:3698/2
ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே - நாலாயி:3698/4
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு - நாலாயி:3699/3
என்றே என்னை உன் ஏர் ஆர் கோல திருந்து அடி கீழ் - நாலாயி:3700/1
வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன் - நாலாயி:3703/2
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப - நாலாயி:3767/2
கரவு ஆர் தடம்-தொறும் தாமரை கயம் தீவிகை நின்று அலரும் - நாலாயி:3767/3
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே - நாலாயி:3767/4
அடைவதும் அணி ஆர் மலர் மங்கை தோள் - நாலாயி:3808/1
மை ஆர் கரும்_கண்ணி கமல மலர் மேல் - நாலாயி:3814/1
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும் - நாலாயி:3823/1
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன் - நாலாயி:3824/2
கொங்கு ஆர் பூம் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் - நாலாயி:3847/3
நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் - நாலாயி:3861/3
வண்டு ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் - நாலாயி:3863/3
கொந்து ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் - நாலாயி:3867/3
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இ பத்தும் வல்லார் - நாலாயி:3868/3
நீர் ஆர் முகில்_வண்ணன் - நாலாயி:3942/2
பேர் ஆர் ஓதுவார் - நாலாயி:3942/3
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய் தன்னை தான் பாடி - நாலாயி:3961/3
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் - நாலாயி:3978/3

உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை - 1.திருமலை:3 8/1
பொன் அணி மணி ஆர் யோக புரவி மேல் கொண்டு போந்தார் - 1.திருமலை:5 19/4
கொத்து_ஆர்_மலர்_குழலாள் ஒரு கூறாய் அடியவர்-பால் - 1.திருமலை:5 74/1
மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில் - 1.திருமலை:5 110/2
மின் ஆர் செம் சடை அண்ணல் விரும்பு திரு புகலூரை - 1.திருமலை:5 117/1
வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு - 1.திருமலை:5 127/1
ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை - 1.திருமலை:5 148/2
மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன - 1.திருமலை:5 171/2
ஆர் என் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்படியோ இது-தான் - 1.திருமலை:5 177/2
என்று இன்னனவே பலவும் புகலும் இருள் ஆர் அளக சுருள் ஓதியையும் - 1.திருமலை:5 178/1
காலன் ஆர் உயிர் மாள கறுத்தன - 1.திருமலை:5 192/2
கோலம் ஆர் ஓடு-தன்னை குறி இடத்து அகல போக்கி - 2.தில்லை:2 19/2
சீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர்-தம்-பால் - 2.தில்லை:2 19/3
சீலம் ஆர் பூசை செய்த திருத்தொண்டர்-தம்மை நோக்கி - 2.தில்லை:4 25/4
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம் - 2.தில்லை:6 8/1
பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால் - 2.தில்லை:6 8/3
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர் - 2.தில்லை:6 9/4
நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார் - 3.இலை:1 56/4
அ நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் - 3.இலை:2 40/1
மாகம் ஆர் திருக்காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள - 3.இலை:3 105/1
ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் - 3.இலை:3 113/1
ஆர் தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில் - 3.இலை:4 22/4
செந்நெல் ஆர் வயல் கட்ட செந்தாமரை - 3.இலை:6 2/1
அ தகைமை ஆர்_ஓசை அமர்_ஓசைகளின் அமைத்தார் - 3.இலை:7 24/4
சந்து ஆர் முலை மேலன தாழ் குழை வாள் முக பொன் - 4.மும்மை:1 6/3
அங்கண் அமரும் திரு முருகர் அழகு ஆர் புகலி பிள்ளையார் - 4.மும்மை:2 13/1
ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி - 4.மும்மை:4 7/4
ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து - 4.மும்மை:5 62/3
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் - 4.மும்மை:5 83/4
ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் - 4.மும்மை:5 128/4
இந்த நிலைமை அறிந்தார் ஆர் ஈறு_இலாதார் தமக்கு அன்பு - 4.மும்மை:6 59/3
மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார் - 5.திருநின்ற:1 22/3
நீர் ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் - 5.திருநின்ற:1 42/3
சீர் ஆர் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் - 5.திருநின்ற:1 42/4
செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் - 5.திருநின்ற:1 71/3
ஆலம் ஆர் மணி_மிடற்றார் அணி மலர் சேவடி நினைந்து - 5.திருநின்ற:1 213/2
ஆர் தரு சோலை சூழ் தரு சாந்தை அயவந்தி - 5.திருநின்ற:1 240/2
மின் ஆர் செம் சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும் - 5.திருநின்ற:1 245/2
பொன் ஆர் மேனி மணி வெற்பை பூ நீர் மிழலையினில் போற்றி - 5.திருநின்ற:1 254/2
சீர் ஆர் பதியின்-நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கரசர் - 5.திருநின்ற:1 278/1
ஆரா அன்பில் ஆர் அமுதம் உண்ண எய்தாவாறே போல் - 5.திருநின்ற:1 278/2
மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி - 5.திருநின்ற:1 304/3
அணி ஆர் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் - 5.திருநின்ற:1 314/4
அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை - 5.திருநின்ற:1 350/1
முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா - 5.திருநின்ற:1 381/1
செந்நெல் ஆர் வயல் தீம் கரும்பின் அயல் - 5.திருநின்ற:2 1/2
மை ஆர் தடம் கண் பரவையார் மணவாளன்-தன் மலர் கழல்கள் - 5.திருநின்ற:3 5/1
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா - 5.திருநின்ற:4 65/4
நன்மை பெருகும் நமிநந்திஅடிகள் நயம் ஆர் திரு வீதி - 5.திருநின்ற:7 32/2
சுரும்பு ஆர் கமல மலர் துணை பாதம் தொழுது எழுந்து - 6.வம்பறா:1 132/2
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் - 6.வம்பறா:1 147/4
சிந்தை ஆர் அமுது ஆகிய செம் சடை - 6.வம்பறா:1 190/3
அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் - 6.வம்பறா:1 311/1
அந்தம்_இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று - 6.வம்பறா:1 372/3
பானல் ஆர் மணிகண்டரை பாடினார் பரவி - 6.வம்பறா:1 382/4
கண்ணாரும் அரு மணியை காரோணத்து ஆர் அமுதை - 6.வம்பறா:1 410/1
ஆடும் ஆதியை ஆவடுதுறையுள் ஆர் அமுதை - 6.வம்பறா:1 420/3
கோது_இலா ஆர் அமுதை கோமள கொம்புடன் கூட கும்பிட்டு ஏத்தி - 6.வம்பறா:1 464/1
பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது - 6.வம்பறா:1 473/2
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற - 6.வம்பறா:1 473/3
ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவ திருவை நோக்கி - 6.வம்பறா:1 760/1
பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே - 6.வம்பறா:1 827/1
ஆர் அருள் பெற்று போற்றி அங்கு-நின்று அரிது நீங்கி - 6.வம்பறா:1 868/3
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் - 6.வம்பறா:1 917/4
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞானசம்பந்தர் - 6.வம்பறா:1 957/1
பொன் ஆர் மேனி புரி சடையான் அன்றே என்று போற்றினார் - 6.வம்பறா:1 982/4
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் - 6.வம்பறா:1 1023/4
ஆர் திருவருளில் பூரித்து அடங்கிய அமுத கும்ப - 6.வம்பறா:1 1103/3
சுந்தர ஆர் அணங்கின் உடன் தோணியில் வீற்றிருந்தாரை - 6.வம்பறா:1 1154/3
அம்மை திரு முலை பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு - 6.வம்பறா:1 1167/2
காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர்
   மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார் - 6.வம்பறா:1 1183/3,4
சீலம் ஆர் திருவருளினால் மணத்தின் மேல் செல்வார் - 6.வம்பறா:1 1196/4
பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திரு ஆர் காதில் - 6.வம்பறா:1 1214/3
நாகம் ஆர் பண பேர் அல்குல் நல் தவ கொழுந்து அன்னாரை - 6.வம்பறா:1 1237/2
மாகம் ஆர் சோதி மல்க மன்னி வீற்றிருந்த வெள்ளை - 6.வம்பறா:1 1237/3
ஆர் திரு மெய் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர் - 6.வம்பறா:1 1250/3
தேன் ஆர் கோதை சிங்கடியார்-தமையும் அவர் பின் திரு உயிர்த்த - 6.வம்பறா:2 38/2
மான் ஆர் நோக்கின் வன பகையார்-தமையும் கொணர்ந்து வன் தொண்டர் - 6.வம்பறா:2 38/3
அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய - 6.வம்பறா:2 49/3
அ நிலை நிகழ்ந்த ஆர் அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்து - 6.வம்பறா:2 91/1
அடல் ஆர் சூல படையார்-தமை பாடி அடி வணங்கி - 6.வம்பறா:2 152/3
உள் நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதே - 6.வம்பறா:2 161/3
மின் ஆர் செம் சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கி - 6.வம்பறா:2 166/2
பண் ஆர் மொழி சங்கிலியாரை நோக்கி பயந்தாரொடும் கிளைஞர் - 6.வம்பறா:2 218/1
கண் ஆர் நுதலார் திருவருளால் ஆகி கன்னிமாடத்து - 6.வம்பறா:2 218/3
தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று - 6.வம்பறா:2 218/4
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே - 6.வம்பறா:2 230/2
என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை - 6.வம்பறா:2 230/3
பொன் ஆர் இதழி முடியார்-பால் பெறுவேன் என்று போய் புக்கார் - 6.வம்பறா:2 230/4
பூ ஆர் தண் புனல் பொய்கை முனைப்பாடி புரவலனார் - 6.வம்பறா:2 260/4
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் - 6.வம்பறா:2 296/4
தண் நிலவு ஆர் சடையார் தாம் தந்த ஆகம பொருளை - 6.வம்பறா:3 23/1
பூ ஆர் சடில திரு முடியார் மகிழ்ந்த செல்வ பூங்கோயில் - 6.வம்பறா:4 3/1
வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள் - 6.வம்பறா:4 9/1
அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார் - 6.வம்பறா:4 9/2
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான்_மறை குலத்தில் உள்ளார் - 7.வார்கொண்ட:2 3/2
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்-தம் திருத்தொண்டு ஏற்ற - 7.வார்கொண்ட:2 3/3
வண்டு ஆர் பூம் தாரார் இ மனைக்கு உள்ளாரோ என்ன - 7.வார்கொண்ட:3 36/4
நீர் ஆர் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது - 7.வார்கொண்ட:3 42/1
சீர் ஆர் தவத்து சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி - 7.வார்கொண்ட:3 42/2
தண் ஆர் இதழி முடியார்-தம் அடியார் தலைப்பட்டால் தேட - 7.வார்கொண்ட:3 47/3
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆர் சிலம்பின் ஒலி அளித்தார் - 7.வார்கொண்ட:4 24/4
தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் - 7.வார்கொண்ட:4 41/3
பொன் ஆர் மௌலி சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி - 7.வார்கொண்ட:4 46/1
மின் ஆர் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர் - 7.வார்கொண்ட:4 46/3
மின் ஆர் மணி பூண் மன்னவனார் வேண்டுவாரை உடன்கொண்டு - 7.வார்கொண்ட:4 50/2
கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி - 7.வார்கொண்ட:4 50/3
புரசை களிற்று சேரலன் ஆர் புடைசூழ்ந்து அவரோடு அமுது செய - 7.வார்கொண்ட:4 73/3
அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து - 8.பொய்:3 3/2
மை ஆர் கூந்தல் மனையாரை பார்த்து மனத்துள் கருதுவார் - 8.பொய்:5 7/4
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் - 10.கடல்:4 2/4
மின் ஆர் செம் சடையார்க்கு மெய் அடிமை தொழில் செய்து - 10.கடல்:4 6/3
பந்தம் ஆர் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும் - 10.கடல்:5 9/2
அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்து ஆகி - 10.கடல்:5 12/1
கரும்பு ஆர் கழனி திருநாவலூரில் சைவ கலை மறையோர் - 12.மன்னிய:5 12/2
சுரும்பு ஆர் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல்உறுகின்றோம் - 12.மன்னிய:5 12/4
பொன் ஆர் கிழியும் மணி பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார் - 13.வெள்ளானை:1 16/4

காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர் - திருமந்:29/1
அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச - திருமந்:93/3
ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை - திருமந்:95/1
ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும் - திருமந்:95/2
அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர்
  ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்து அடக்கி - திருமந்:133/2,3
அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில் - திருமந்:277/3
எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை - திருமந்:289/3
அ புரம் எய்தமை ஆர் அறிவாரே - திருமந்:343/4
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர் - திருமந்:451/2
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே - திருமந்:485/4
கட்டுவித்து ஆர் மதில் கல் ஒன்று வாங்கிடில் - திருமந்:516/1
மலை ஆர் சிரத்திடை வான் நீர் அருவி - திருமந்:589/1
சிலை ஆர் பொதுவில் திருநடம் ஆடும் - திருமந்:589/3
கண் ஆர் அமுதினை கண்டு அறிவார் இல்லை - திருமந்:603/2
ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன - திருமந்:636/2
ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே - திருமந்:745/4
ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில் - திருமந்:832/1
மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின் - திருமந்:840/1
தொடி ஆர் தட கை சுகோதய சுந்தரி - திருமந்:1151/1
வடிவு ஆர் திரிபுரையாம் மங்கை சங்கை - திருமந்:1151/2
செடி ஆர் வினை கெட சேர்வரை என்று என்று - திருமந்:1151/3
அம்மையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை - திருமந்:1254/2
பரிந்து அருள் கொங்கைகள் முத்து ஆர் பவளம் - திருமந்:1376/3
குணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது - திருமந்:1423/3
கழல் ஆர் கமல திருவடி என்னும் - திருமந்:1600/1
கழல் ஆர் திருவடி கண்டருளாமே - திருமந்:1695/4
ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட - திருமந்:1749/1
அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே - திருமந்:1798/4
ஆர் அண்டத்தக்கார் அரியத்தக்காரே - திருமந்:1991/4
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே - திருமந்:1998/4
அடங்கியே அற்றது ஆர் அறிவாரே - திருமந்:2128/4
நீறு ஆர் பரஞ்சிவம் ஆதேயம் ஆகுமே - திருமந்:2263/4
சங்கு ஆர் வளையும் சிலம்பும் சரேலென - திருமந்:2356/3
சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும் - திருமந்:2465/3
அளவும் பெருமையும் ஆர் அறிவாரே - திருமந்:2480/4
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே - திருமந்:2538/4
அருநிலம் என்பதை ஆர் அறிவாரே - திருமந்:2572/4
அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்ல - திருமந்:2626/2
நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால் - திருமந்:2629/3
தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்து - திருமந்:2793/2
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே - திருமந்:2834/4
காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி - திருமந்:2893/1
அன்னையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை - திருமந்:2965/2
இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில் - திருமந்:2983/2

பொற்பு ஆர் அறிவார் புலியூர் புனிதன் பொதியில் வெற்பில் - திருக்கோ:8/3
தேவரில் பெற்ற நம் செல்வ கடி வடிவு ஆர் திருவே - திருக்கோ:14/1
பூம் கனை ஆர் புனல் தென் புலியூர் புரிந்து அம்பலத்துள் - திருக்கோ:19/1
காவி நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமல - திருக்கோ:41/1
ஆளா ஒழிந்தது என் ஆருயிர் ஆர் அமிழ்தே அணங்கே - திருக்கோ:47/2
நாள் ஆர் மலர் பொழில்-வாய் எழில் ஆயம் நணுகுகவே - திருக்கோ:47/4
கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே - திருக்கோ:52/4
ஒக்கின்ற ஆர் அணங்கே இணங்கு ஆகும் உனக்கு அவளே - திருக்கோ:68/4
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின் - திருக்கோ:70/3
சுருள் ஆர் கரும் குழல் வெள் நகை செ வாய் துடியிடையீர் - திருக்கோ:73/3
ஆர் வாய்தரின் அறிவார் பின்னை செய்க அறிந்தனவே - திருக்கோ:80/4
பொன் ஆர் சடையோன் புலியூர் புகழார் என புரி நோய் - திருக்கோ:89/1
ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே - திருக்கோ:91/4
யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் எறி திரை நீர் - திருக்கோ:93/1
சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால் - திருக்கோ:93/3
மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா - திருக்கோ:96/2
ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி மஞ்சு ஆர் சிலம்பா - திருக்கோ:103/2
பெருகுதலை சென்று நின்றோன் பெருந்துறை பிள்ளை கள் ஆர்
  முருகு தலைச்சென்ற கூழை முடியா முலை பொடியா - திருக்கோ:104/2,3
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் - திருக்கோ:112/3
துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே - திருக்கோ:112/4
குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே - திருக்கோ:119/4
வடம் ஆர் முலை மடவாய் வந்து வைகிற்று இ வார் பொழிற்கே - திருக்கோ:120/4
எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில் - திருக்கோ:124/2
மெல் நனை ஆய் மறியே பறியேல் வெறி ஆர் மலர்கள் - திருக்கோ:125/3
அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் அணி ஆர்
  துறு கான் மலர் தொத்து தோகை தொல் ஆயம் மெல்ல புகுக - திருக்கோ:126/1,2
படை ஆர் கரும்_கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண் - திருக்கோ:136/1
விடை ஆர் மருப்பு திருத்திவிட்டார் வியன் தென் புலியூர் - திருக்கோ:136/3
வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து-நின்றும் வரு தேன் - திருக்கோ:139/1
மணி ஆர் பொழில்காள் மறத்திர் கண்டீர் மன்னும் அம்பலத்தோன் - திருக்கோ:145/2
அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால் - திருக்கோ:145/3
முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய் - திருக்கோ:157/3
கான குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா - திருக்கோ:159/2
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண் - திருக்கோ:161/2
கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து - திருக்கோ:161/3
தோடு ஆர் மது மலர் நாகத்தை நூக்கும் நம் சூழ் பொழிற்கே - திருக்கோ:161/4
நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர்
  நாகம் மலி பொழில்-வாய் எழில் வாய்த்த நின் நாயகமே - திருக்கோ:171/3,4
இன் நறவு ஆர் பொழில் தில்லை நகர் இறை சீர் விழவில் - திருக்கோ:175/1
அலர் ஆர் கழல் வழிபாடுசெய்தாற்கு அளவில் ஒளிகள் - திருக்கோ:180/2
எல் ஆர் மதியே இது நின்னை யான் இன்று இரக்கின்றதே - திருக்கோ:192/4
பொற்பு ஆர் திரு நாண் பொருப்பர் விருப்பு புகுந்து நுந்த - திருக்கோ:208/2
கற்பு ஆர் கடும் கால் கலக்கி பறித்து எறிய கழிக - திருக்கோ:208/3
பொன் ஆர் மணி மகிழ் பூ விழ யாம் விழை பொங்கு இருளே - திருக்கோ:210/4
பொன் ஆர் அணி மணி மாளிகை தென் புலியூர் புகழ்வார் - திருக்கோ:217/3
மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு - திருக்கோ:218/2
விண்ணும் செலவு அறியா வெறி ஆர் கழல் வீழ் சடை தீ - திருக்கோ:256/1
மை ஆர் கதலி வனத்து வருக்கை பழம் விழு தேன் - திருக்கோ:262/1
மொய் ஆர் வளர் இள வேங்கை பொன் மாலையின் முன்னினவே - திருக்கோ:262/4
அடுத்தன தாம் வரின் பொல்லாது இரவின் நின் ஆர் அருளே - திருக்கோ:267/4
மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை தொழார்கள் அல்லால் - திருக்கோ:271/3
கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல் - திருக்கோ:276/3
குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இ கூர் மறையே - திருக்கோ:288/4
ஆர் அளவு இல்லா அளவு சென்றார் அம்பலத்துள் நின்ற - திருக்கோ:308/2
கருப்பு இனம் மேவும் பொழில் தில்லை மன்னன்-கண் ஆர் அருளால் - திருக்கோ:319/1
களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம் - திருக்கோ:324/2
பிறப்பின் துனைந்து பெருகுக தேர் பிறங்கும் ஒளி ஆர்
  நிற பொன் புரிசை மறுகினின் துன்னி மட நடை புள் - திருக்கோ:328/2,3
நெறி ஆர் அரும் சுரம் செல்லல் உற்றார் நமர் நீண்டு இருவர் - திருக்கோ:333/2
எரி ஆர் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எவர்க்கும் - திருக்கோ:340/3
புற்று அங்கு உதர்ந்து நல் நாகொடும் பொன் ஆர் மணி புலம்ப - திருக்கோ:346/3
பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர புலம்பாய் நலம் பாய் - திருக்கோ:355/3
சிவன் செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர நின் சே இழையார் - திருக்கோ:358/3
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல் - திருக்கோ:361/3
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என் - திருக்கோ:378/2
பஞ்சு ஆர் அமளி பிரிதல் உண்டோ எம் பயோதரமே - திருக்கோ:378/4
பந்து ஆர் விரலியை பாய் புனல் ஆட்டி மன் பாவி எற்கு - திருக்கோ:391/2
கொந்து ஆர் தடம் தோள் விடம் கால் அயில் படை கொற்றவரே - திருக்கோ:391/4

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி - திருவா:1/15
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி - திருவா:1/22
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே - திருவா:1/63
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே - திருவா:1/69
ஊற்று ஆன உண் ஆர் அமுதே உடையானே - திருவா:1/83
திரு ஆர் பெருந்துறை செல்வன் ஆகி - திருவா:2/54
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் - திருவா:2/55
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும் - திருவா:2/72
மரு_ஆர்_குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் - திருவா:2/80
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி - திருவா:3/68
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க - திருவா:3/101
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி - திருவா:4/93
சே ஆர் வெல் கொடி சிவனே போற்றி - திருவா:4/95
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி - திருவா:4/96
சீர் ஆர் திருவையாறா போற்றி - திருவா:4/148
கண் ஆர் அமுத கடலே போற்றி - திருவா:4/150
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி - திருவா:4/159
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி - திருவா:4/190
மெய்-தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் - திருவா:5 1/1
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே - திருவா:5 19/2
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற - திருவா:5 29/3
வினை என் போல் உடையார் பிறர் ஆர் உடையான் அடி_நாயேனை - திருவா:5 37/1
மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும் - திருவா:5 52/3
ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே - திருவா:5 55/4
முடை ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆக முடித்தாயே - திருவா:5 56/4
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி - திருவா:5 67/2
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் - திருவா:5 84/3
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு - திருவா:5 88/2
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு - திருவா:5 88/2
அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால் - திருவா:5 89/2
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையை பொடி ஆக்கி - திருவா:5 89/3
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே - திருவா:5 89/4
வழி நின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே - திருவா:6 5/4
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை ஆர் நறவம் - திருவா:6 36/2
ஆர் அடியான் என்னின் உத்தரகோசமங்கைக்கு அரசின் - திருவா:6 48/3
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் - திருவா:7 1/6
பேசும்போது எப்போது இ போது ஆர் அமளிக்கே - திருவா:7 2/2
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய் - திருவா:7 2/8
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய் - திருவா:7 2/8
போது ஆர் புனை முடியும் எல்லா பொருள் முடிவே - திருவா:7 10/2
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் - திருவா:7 10/7
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் - திருவா:7 10/7
மொய் ஆர் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன - திருவா:7 11/1
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல் - திருவா:7 11/3
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா - திருவா:7 11/5
காது ஆர் குழை ஆட பைம் பூண் கலன் ஆட - திருவா:7 14/1
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் - திருவா:7 15/6
அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை - திருவா:7 17/6
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப - திருவா:7 18/3
தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள்-தாம் அகல - திருவா:7 18/4
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடி - திருவா:7 18/7
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான் - திருவா:8 3/4
தீட்டு ஆர் மதில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் - திருவா:8 6/2
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை - திருவா:8 10/3
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட - திருவா:8 10/5
செப்பு_ஆர் முலை_பங்கன் தென்னன் பெருந்துறையான் - திருவா:8 11/1
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே - திருவா:8 11/4
கை ஆர் வளை சிலம்ப காது ஆர் குழை ஆட - திருவா:8 13/1
கை ஆர் வளை சிலம்ப காது ஆர் குழை ஆட - திருவா:8 13/1
மை ஆர் குழல் புரள தேன் பாய வண்டு ஒலிப்ப - திருவா:8 13/2
தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர் - திருவா:8 16/4
தெளி வந்த தேறலை சீர் ஆர் பெருந்துறையில் - திருவா:8 18/3
என்னுடை ஆர் அமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமவான் மகட்கு - திருவா:9 13/2
நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார் - திருவா:10 2/1
நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார் - திருவா:10 2/1
நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார் - திருவா:10 2/1
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் - திருவா:10 2/3
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ - திருவா:10 2/4
மரு ஆர் மலர் குழல் மாதினொடும் வந்தருளி - திருவா:10 14/2
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ - திருவா:10 17/4
திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவி - திருவா:11 2/1
பூ ஆர் அடிச்சுவடு என் தலை மேல் பொறித்தலுமே - திருவா:11 7/3
பொன் ஆர் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் பாடி - திருவா:11 9/2
ஆர் பாடும் சாரா வகை அருளி ஆண்டுகொண்ட - திருவா:11 13/2
அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற - திருவா:11 20/3
கான் ஆர் புலி தோல் உடை தலை ஊண் காடு பதி - திருவா:12 12/1
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடி - திருவா:12 12/2
அம்பரம் ஆம் புள்ளி தோல் ஆலாலம் ஆர் அமுதம் - திருவா:12 19/1
இணை ஆர் திருவடி என் தலை மேல் வைத்தலுமே - திருவா:13 1/1
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற - திருவா:13 1/3
சீர் ஆர் திருவடி என் தலை மேல் வைத்த பிரான் - திருவா:13 10/2
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி - திருவா:13 10/3
போர் ஆர் புறம் பாடி பூவல்லி கொய்யாமோ - திருவா:13 10/4
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா - திருவா:13 14/3
பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே - திருவா:13 17/2
சீர் ஆர் திருவடி திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே - திருவா:13 18/1
பூ ஆர் கழல் பரவி பூவல்லி கொய்யாமோ - திருவா:13 20/4
துன்று ஆர் குழலினீர் தோள்_நோக்கம் ஆடாமோ - திருவா:15 2/4
சீர் ஆர் பவளம் கால் முத்தம் கயிறு ஆக - திருவா:16 1/1
போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ - திருவா:16 1/6
புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன்_ஊசல் ஆடாமோ - திருவா:16 4/6
கோண் ஆர் பிறை சென்னி கூத்தன் குணம் பரவி - திருவா:16 5/5
பூண் ஆர் வன முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ - திருவா:16 5/6
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வர கூவாய் - திருவா:18 9/4
ஏர் ஆர் இளம் கிளியே எங்கள் பெருந்துறை கோன் - திருவா:19 1/1
சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன் - திருவா:19 1/2
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே - திருவா:20 8/4
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே - திருவா:20 10/4
உன் நின்று இவன் ஆர் என்னாரோ பொன்னம்பல கூத்து உகந்தானே - திருவா:21 2/4
அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர் இங்கு - திருவா:21 8/1
மருள் ஆர் மனத்தோடு உனை பிரிந்து வருந்துவேனை வா என்று உன் - திருவா:21 8/3
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ - திருவா:21 8/4
ஆர் உறவு எனக்கு இங்கு யார் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதி - திருவா:22 8/4
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் - திருவா:23 9/2
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு - திருவா:24 10/1
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே ஓ - திருவா:25 2/3
எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே ஓ - திருவா:25 5/3
செடி ஆர் ஆக்கை திறம் அற வீசி சிவபுர நகர் புக்கு - திருவா:25 9/1
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர - திருவா:25 9/2
தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை - திருவா:27 1/3
ஆண்டுகொண்ட என் ஆர் அமுதை அள்ளூறு உள்ளத்து அடியார் முன் - திருவா:27 3/2
வேண்டும்தனையும் வாய்விட்டு அலறி விரை ஆர் மலர் தூவி - திருவா:27 3/3
ஏது ஆம் மணியே என்றுஎன்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாத - திருவா:27 9/3
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் - திருவா:27 10/1
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை - திருவா:28 8/3
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே - திருவா:29 6/2
முடை ஆர் பிணத்தின் முடிவு இன்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் - திருவா:32 2/2
அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த - திருவா:32 3/1
இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே - திருவா:32 3/2
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று இங்கு எனை கண்டார் - திருவா:32 3/3
சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே - திருவா:32 7/4
திணி ஆர் மூங்கில் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன் - திருவா:32 8/2
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய் அருள் அளிய - திருவா:32 8/3
சீர் ஆர் அருளால் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவலோகா - திருவா:32 9/3
கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர - திருவா:33 9/1
நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு - திருவா:34 2/1
ஊன் ஆர் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான் - திருவா:34 2/2
தேன் ஆர் சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் - திருவா:34 2/3
தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர் - திருவா:34 5/3
சேற்று ஆர் வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும் - திருவா:34 8/3
பரு வரை மங்கை-தன் பங்கரை பாண்டியற்கு ஆர் அமுது ஆம் - திருவா:36 1/1
ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகனே - திருவா:36 10/3
அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே - திருவா:37 3/1
உண் ஆர்ந்த ஆர் அமுதே உடையானே அடியேனை - திருவா:38 2/2
ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆஆ என்று - திருவா:38 3/2
எச்சத்து ஆர் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோ என் - திருவா:38 4/3
சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி - திருவா:41 2/2
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே - திருவா:42 10/4
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே - திருவா:44 1/3
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே - திருவா:44 1/3
பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்க பெருமான் சிறியோமை - திருவா:45 1/1
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக - திருவா:45 3/2
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக - திருவா:45 3/2
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக - திருவா:45 3/2
பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே - திருவா:45 4/4
அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே - திருவா:45 5/3
திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று சிவன் தாள் வணங்கி நாம் - திருவா:45 6/3
மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர் - திருவா:45 10/2
அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே - திருவா:45 10/4
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ - திருவா:47 1/3
என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து - திருவா:47 2/4
ஆரா_அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர்
  திருத்தன் பெருந்துறையான் என் சிந்தை மேய - திருவா:47 7/2,3
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே - திருவா:47 11/3
சென்று இறைஞ்சி ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை - திருவா:48 4/3
என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து உடன் இன்புறும் ஆகாதே - திருவா:49 4/1
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 1/4
அறியும்வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 2/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 3/4
அண்ணல் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 4/4
அஞ்சேல் என்று அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 5/4
அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 6/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 7/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 8/4
அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 9/4
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 10/4
அடிகள் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 11/4
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே - திருவா:51 12/4

கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலை கதிர் சிந்த - தேவா-சம்:6/3
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும் - தேவா-சம்:53/1
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் - தேவா-சம்:55/3
வெண் தலைமாலை விரவி பூண்ட மெய் உடையார் விறல் ஆர் அரக்கன் - தேவா-சம்:83/1
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம் - தேவா-சம்:87/1
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணுபுரம் அதுவே - தேவா-சம்:90/4
வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான் - தேவா-சம்:91/2
கண் ஆர் சலம் மூடி கடல் ஓங்க உயர்ந்தான் ஊர் - தேவா-சம்:92/2
தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை - தேவா-சம்:92/3
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே - தேவா-சம்:92/4
விளவு ஆர் கனி பட நூறிய கடல்_வண்ணனும் வேத - தேவா-சம்:105/1
சடை ஆர் புனல் உடையான் ஒரு சரி கோவணம் உடையான் - தேவா-சம்:108/1
படை ஆர் மழு உடையான் பல பூத படை உடையான் - தேவா-சம்:108/2
விடை ஆர் கொடி உடையான் இடம் வீழிமிழலையே - தேவா-சம்:108/4
ஆறு ஆர் சுவை ஏழ் ஓசையொடு எட்டு திசை தானாய் - தேவா-சம்:109/3
கொத்து ஆர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு - தேவா-சம்:119/3
தழை ஆர் வடவிடவீ-தனில் தவமே புரி சைவன் - தேவா-சம்:120/1
இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம் - தேவா-சம்:120/2
நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர்
  அரசார் வர அணி பொன் கலன் அவை கொண்டு பல் நாளும் - தேவா-சம்:122/2,3
அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் - தேவா-சம்:123/1
அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர்
  கறை ஆர் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில் - தேவா-சம்:123/1,2
கறை ஆர் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில் - தேவா-சம்:123/2
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு - தேவா-சம்:124/1
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் - தேவா-சம்:127/2
மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர்
  கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி - தேவா-சம்:128/2,3
கடை ஆர்தர அகில் ஆர் கழை முத்தம் நிரை சிந்தி - தேவா-சம்:133/3
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே - தேவா-சம்:133/4
மான் ஆர் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம் - தேவா-சம்:136/1
பொருவார் எனக்கு எதிர் ஆர் என பொருப்பை எடுத்தான் தன் - தேவா-சம்:137/1
விடை ஆர் கொடி உடைய அணல் வீந்தார் வெளை எலும்பும் - தேவா-சம்:157/1
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து - தேவா-சம்:158/1
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் - தேவா-சம்:159/1
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ - தேவா-சம்:159/3
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே - தேவா-சம்:159/4
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே - தேவா-சம்:164/4
கறை ஆர் மிடறு உடையான் கமழ் கொன்றை சடைமுடி மேல் - தேவா-சம்:165/1
பொறை ஆர் தரு கங்கை புனல் உடையான் புளமங்கை - தேவா-சம்:165/2
துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே - தேவா-சம்:165/4
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து எம் - தேவா-சம்:166/1
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே - தேவா-சம்:166/4
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரி கரை மேல் - தேவா-சம்:167/2
முடி ஆர் தரு சடை மேல் முளை இள வெண் மதி சூடி - தேவா-சம்:169/1
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும் - தேவா-சம்:169/3
இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால் - தேவா-சம்:170/1
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர்
  கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் - தேவா-சம்:176/2,3
பொழில் ஆர்தரு குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில் - தேவா-சம்:177/1
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடி மேல் - தேவா-சம்:178/1
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் - தேவா-சம்:178/3
கொடி ஆர் நெடு மாட குன்றளூரின் கரை கோல - தேவா-சம்:184/1
இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை - தேவா-சம்:184/2
வீரன் மலி அழகு ஆர் பொழில் மிடையும் திருநின்றியூரன் - தேவா-சம்:190/3
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம் - தேவா-சம்:192/3
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா - தேவா-சம்:243/1
குயில் ஆர் சோலை கோலக்காவையே - தேவா-சம்:243/3
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம் - தேவா-சம்:244/3
நிழல் ஆர் சோலை நீல வண்டு இனம் - தேவா-சம்:245/1
குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான் - தேவா-சம்:245/2
எறி ஆர் கடல் சூழ் இலங்கை கோன்-தனை - தேவா-சம்:246/1
முறை ஆர் தட கை அடர்த்த மூர்த்தி தன் - தேவா-சம்:246/2
குறி ஆர் பண் செய் கோலக்காவையே - தேவா-சம்:246/3
பூ ஆர் கொன்றை புரி புன் சடை ஈசா - தேவா-சம்:250/1
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே - தேவா-சம்:250/4
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம் - தேவா-சம்:253/3
கார் ஆர் வயல் சூழ் காழி கோன்-தனை - தேவா-சம்:260/1
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன - தேவா-சம்:260/2
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே - தேவா-சம்:260/4
மரு ஆர் குழலி மாது ஓர்பாகமாய் - தேவா-சம்:261/1
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:261/2
கரு ஆர் கண்டத்து ஈசன் கழல்களை - தேவா-சம்:261/3
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகமாய் - தேவா-சம்:262/1
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:262/2
ஏர் ஆர் புரி புன் சடை எம் ஈசனை - தேவா-சம்:262/3
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னி - தேவா-சம்:263/1
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:263/2
நரை ஆர் விடை ஒன்று ஊரும் நம்பனை - தேவா-சம்:263/3
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:264/2
எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை - தேவா-சம்:264/3
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே - தேவா-சம்:265/2
இலை ஆர் மலர் கொண்டு எல்லி நண்பகல் - தேவா-சம்:265/3
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னி - தேவா-சம்:266/1
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:266/2
கறை ஆர் கண்டத்து ஈசன் கழல்களை - தேவா-சம்:266/3
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும் - தேவா-சம்:267/1
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:267/2
கை ஆர் சூலம் ஏந்து கடவுளை - தேவா-சம்:267/3
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து - தேவா-சம்:268/1
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:268/2
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை - தேவா-சம்:268/3
கார் ஆர் வண்ணன் கனகம் அனையானும் - தேவா-சம்:269/1
நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை - தேவா-சம்:269/3
மாசு ஆர் உடம்பர் மண்டை தேரரும் - தேவா-சம்:270/1
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய - தேவா-சம்:270/3
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன் - தேவா-சம்:271/1
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானை - தேவா-சம்:271/2
வெம் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை - தேவா-சம்:272/1
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலை - தேவா-சம்:273/1
திரு கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர் - தேவா-சம்:279/2
பவழ வண்ண பரிசு ஆர் திருமேனி - தேவா-சம்:287/1
தேர் கொள் வீதி விழவு ஆர் திருப்புன்கூர் - தேவா-சம்:289/2
வண்டு பாட மலர் ஆர் திருப்புன்கூர் - தேவா-சம்:292/3
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம் - தேவா-சம்:302/3
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே - தேவா-சம்:302/4
மன்றில் வாச மணம் ஆர் நறையூரில் - தேவா-சம்:311/3
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே - தேவா-சம்:316/4
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம் - தேவா-சம்:317/2
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே - தேவா-சம்:317/4
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி - தேவா-சம்:319/1
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே - தேவா-சம்:319/4
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க - தேவா-சம்:320/1
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து - தேவா-சம்:320/2
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே - தேவா-சம்:320/4
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன் - தேவா-சம்:321/1
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன் - தேவா-சம்:321/2
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய தேன் - தேவா-சம்:321/3
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே - தேவா-சம்:321/4
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற - தேவா-சம்:323/2
குடை ஆர் புனல் மல்கு குரங்கணில் முட்டம் - தேவா-சம்:328/3
காலன்-தனை ஆர் உயிர் வவ்விய காலன் - தேவா-சம்:329/2
தோடு ஆர் குழையான் நல பாலனம் நோக்கி - தேவா-சம்:330/2
இறை ஆர் வளையாளை ஒருபாகத்து அடக்கி - தேவா-சம்:331/1
கறை ஆர் மிடற்றான் கரி கீறிய கையான் - தேவா-சம்:331/2
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து - தேவா-சம்:331/3
மாடு ஆர் மலர் கொன்றை வளர் சடை வைத்து - தேவா-சம்:333/1
தோடு ஆர் குழை தான் ஒரு காதில் இலங்க - தேவா-சம்:333/2
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து அமர்வானே - தேவா-சம்:333/4
மை ஆர் நிற மேனி அரக்கர்-தம் கோனை - தேவா-சம்:334/1
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம் - தேவா-சம்:334/3
வெறி ஆர் மலர் தாமரையானொடு மாலும் - தேவா-சம்:335/1
அறியாது அசைந்து ஏத்த ஓர் ஆர் அழல் ஆகும் - தேவா-சம்:335/2
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன் - தேவா-சம்:337/1
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம் - தேவா-சம்:337/2
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக - தேவா-சம்:337/3
பூ ஆர் குழலார் அகில் கொண்டு புகைப்ப - தேவா-சம்:345/1
ஏ ஆர் சிலையான் தன் இடைமருது ஈதோ - தேவா-சம்:345/4
எறி ஆர் மழுவாளன் இடைமருது ஈதோ - தேவா-சம்:347/4
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன் - தேவா-சம்:348/1
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின் மேல் - தேவா-சம்:348/2
சடை ஆர் சதுரன் முதிரா மதி சூடி - தேவா-சம்:350/1
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை விமலன் - தேவா-சம்:350/2
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை - தேவா-சம்:350/3
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே - தேவா-சம்:350/4
நீறு ஆர் திருமேனியர் ஊனம் இலார்-பால் - தேவா-சம்:354/1
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான் - தேவா-சம்:354/2
வேறு ஆர் அகிலும் மிகு சந்தனம் உந்தி - தேவா-சம்:354/3
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே - தேவா-சம்:354/4
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட - தேவா-சம்:355/1
படி ஆர் பரமன் பரமேட்டி-தன் சீரை - தேவா-சம்:355/2
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும் - தேவா-சம்:355/3
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி - தேவா-சம்:356/2
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை - தேவா-சம்:358/3
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல் - தேவா-சம்:359/1
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் - தேவா-சம்:359/3
மடல் ஆர் குழலாளொடு மன்னும் - தேவா-சம்:360/2
கடல் ஆர் புடை சூழ் தரு காழி - தேவா-சம்:360/3
திரை ஆர் புனல் சூடிய செல்வன் - தேவா-சம்:361/1
கரை ஆர் புனல் சூழ்தரு காழி - தேவா-சம்:361/3
நிரை ஆர் மலர் தூவு-மின் நின்றே - தேவா-சம்:361/4
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை - தேவா-சம்:362/1
துடி ஆர் இடையாளொடு துன்னும் - தேவா-சம்:362/2
கடி ஆர் பொழில் சூழ்தரு காழி - தேவா-சம்:362/3
ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன் - தேவா-சம்:363/1
அளி ஆர் குழல் மங்கையொடு அன்பாய் - தேவா-சம்:363/2
களி ஆர் பொழில் சூழ்தரு காழி - தேவா-சம்:363/3
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன் - தேவா-சம்:364/1
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன் - தேவா-சம்:364/1
கனி ஆர் பொழில் சூழ்தரு காழி - தேவா-சம்:364/3
திரு ஆர் சிலையால் எயில் எய்து - தேவா-சம்:366/1
உரு ஆர் உமையோடு உடன் ஆனான் - தேவா-சம்:366/2
கரு ஆர் பொழில் சூழ்தரு காழி - தேவா-சம்:366/3
கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி - தேவா-சம்:369/3
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி - தேவா-சம்:370/2
அரை ஆர் விரி கோவண ஆடை - தேவா-சம்:371/1
நரை ஆர் விடை ஊர்தி நயந்தான் - தேவா-சம்:371/2
விரை ஆர் பொழில் வீழிமிழலை - தேவா-சம்:371/3
சடை ஆர் பிறையான் சரி பூத - தேவா-சம்:376/1
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க - தேவா-சம்:377/1
நெறி ஆர் குழலாளொடு நின்றான் - தேவா-சம்:377/2
வெறி ஆர் பொழில் வீழிமிழலை - தேவா-சம்:377/3
விளை ஆர் வயல் வீழிமிழலை - தேவா-சம்:378/3
அருள் செய்தவன் ஆர் அழல் ஆகி - தேவா-சம்:379/2
குளிர் ஆர் சடையான் அடி கூற - தேவா-சம்:381/2
மிளிர் ஆர் பொழில் வீழிமிழலை - தேவா-சம்:381/3
கலை ஆர் மதியோடு உர நீரும் - தேவா-சம்:382/1
நிலை ஆர் சடையார் இடம் ஆகும் - தேவா-சம்:382/2
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே - தேவா-சம்:382/4
கலை ஆர் கலி காழியர் மன்னன் - தேவா-சம்:392/1
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றை - தேவா-சம்:392/3
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு - தேவா-சம்:396/1
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட - தேவா-சம்:397/1
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம் - தேவா-சம்:397/2
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர் - தேவா-சம்:398/2
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும் - தேவா-சம்:398/3
விடையான் விறல் ஆர் கரியின் தோல் - தேவா-சம்:399/2
பார் ஆர் விடையான் பனையூர் மேல் - தேவா-சம்:403/1
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் - தேவா-சம்:403/2
தணி ஆர் மதி செஞ்சடையான்-தன் - தேவா-சம்:408/1
வண்டு ஆர் மயிலாடுதுறையே - தேவா-சம்:409/4
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க - தேவா-சம்:415/1
பொறி வளர் ஆர் அழல் உண்ண பொங்கிய பூதபுராணர் - தேவா-சம்:420/2
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி - தேவா-சம்:447/2
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே - தேவா-சம்:447/4
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரை மேல் - தேவா-சம்:452/3
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் - தேவா-சம்:453/3
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம் - தேவா-சம்:454/1
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தி தண் அரிசில் புடை சூழ்ந்த - தேவா-சம்:454/3
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே - தேவா-சம்:454/4
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதி கழுமல ஊரன் கலந்து - தேவா-சம்:458/1
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய - தேவா-சம்:458/2
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் - தேவா-சம்:458/3
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவி - தேவா-சம்:460/3
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி - தேவா-சம்:462/3
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார் - தேவா-சம்:465/2
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி - தேவா-சம்:465/3
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே - தேவா-சம்:466/4
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர் - தேவா-சம்:470/2
மண் ஆர் முழவு அதிர முதிரா மதி சூடி - தேவா-சம்:496/2
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள் - தேவா-சம்:496/3
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள் - தேவா-சம்:498/3
கல் ஆர் வரை அரக்கன் தடம் தோள் கவின் வாட - தேவா-சம்:500/1
பல் ஆர் பகு வாய நகு வெண் தலை சூடி - தேவா-சம்:500/3
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள் - தேவா-சம்:501/3
வெடி ஆர் தலை ஏந்தி ஆடும் வீரட்டானத்தே - தேவா-சம்:501/4
பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர்
  சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே - தேவா-சம்:518/3,4
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் - தேவா-சம்:534/2
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே - தேவா-சம்:535/3
சீலம் மிக்க தொல் புகழ் ஆர் சிரபுர_கோன் நலத்தான் - தேவா-சம்:558/2
குழை ஆர் காதீர் கொடு மழுவாள் படை - தேவா-சம்:584/1
தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை - தேவா-சம்:586/1
தொடை ஆர் மா மலர் கொண்டு இருபோது உம்மை - தேவா-சம்:592/1
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு - தேவா-சம்:592/3
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற - தேவா-சம்:593/3
நீலம் ஆர் கண்ட நின்னையே - தேவா-சம்:594/4
திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று - தேவா-சம்:596/3
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர் - தேவா-சம்:601/1
சீர் ஆர் சிந்தை செல செய்தார் - தேவா-சம்:601/2
யார் ஆர் ஆதி முதல்வரே - தேவா-சம்:601/4
பல் ஆர் வெண் தலை செல்வர் எம் பாற்றுறை - தேவா-சம்:602/3
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர் - தேவா-சம்:603/1
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் - தேவா-சம்:603/3
பண்ணின் ஆர் மறை பாடலன் ஆடலன் - தேவா-சம்:627/1
விண்ணின் ஆர் மதில் எய்த முக்கண்ணினான் - தேவா-சம்:627/2
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை - தேவா-சம்:628/1
அண்டன் ஆர் அழல் போல் ஒளிர் - தேவா-சம்:629/2
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன் நல்ல - தேவா-சம்:644/1
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் - தேவா-சம்:644/3
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே - தேவா-சம்:646/4
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள் - தேவா-சம்:660/3
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் - தேவா-சம்:662/1
செய்யின் ஆர் அகன் கழனி செங்காட்டங்குடி அதனுள் - தேவா-சம்:662/3
கையின் ஆர் கூர் எரியான் கணபதீச்சுரத்தானே - தேவா-சம்:662/4
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா - தேவா-சம்:678/1
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே - தேவா-சம்:678/2
பெயல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி பெய் பலிக்கு என்று அயலே - தேவா-சம்:679/1
கயல் ஆர் தடம் கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே - தேவா-சம்:679/2
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே - தேவா-சம்:679/4
நகல் ஆர் தலையும் வெண் பிறையும் நளிர் சடை மாட்டு அயலே - தேவா-சம்:680/1
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய - தேவா-சம்:685/3
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே - தேவா-சம்:687/2
கட்டு ஆர் துழாயன் தாமரையான் என்று இவர் காண்பு அரிய - தேவா-சம்:688/1
கடை ஆர் கொடி நல் மாட வீதி கழுமல ஊர் கவுணி - தேவா-சம்:689/1
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன் நல்ல - தேவா-சம்:689/2
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு - தேவா-சம்:689/3
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல் - தேவா-சம்:690/1
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல் - தேவா-சம்:690/1
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம் - தேவா-சம்:690/2
திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே - தேவா-சம்:690/4
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த - தேவா-சம்:691/3
போர் ஆர் மதமா உரிவை போர்த்து பொடி அணி மேனியனாய் - தேவா-சம்:692/1
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர் - தேவா-சம்:692/2
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து - தேவா-சம்:692/3
சீர் ஆர் வாரி சேர நின்ற தென் திருப்பூவணமே - தேவா-சம்:692/4
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி காதில் ஓர் வார் குழையன் - தேவா-சம்:693/1
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன் இடம் ஆம் - தேவா-சம்:693/2
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே - தேவா-சம்:693/4
கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த - தேவா-சம்:694/1
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம் - தேவா-சம்:694/2
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே - தேவா-சம்:694/4
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து - தேவா-சம்:698/3
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென் திருப்பூவணமே - தேவா-சம்:698/4
அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா - தேவா-சம்:699/1
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென் திருப்பூவணமே - தேவா-சம்:699/4
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென் திருப்பூவணத்து - தேவா-சம்:700/1
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் - தேவா-சம்:700/2
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே - தேவா-சம்:700/4
அடையார்-தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த - தேவா-சம்:701/1
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம் - தேவா-சம்:701/2
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ - தேவா-சம்:701/3
படை ஆர் புரிசை பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:701/4
மண் ஆர் சோலை கோல வண்டு வைகலும் தேன் அருந்தி - தேவா-சம்:702/3
பண் ஆர் செய்யும் பட்டினத்து பல்லவனீச்சுரமே - தேவா-சம்:702/4
மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல் - தேவா-சம்:703/1
தார் ஆர் கொன்றை பொன் தயங்க சாத்திய மார்பு அகலம் - தேவா-சம்:704/1
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் - தேவா-சம்:704/2
போர் ஆர் வேல் கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால் - தேவா-சம்:704/3
பை சேர் அரவு ஆர் அல்குலார் சேர் பல்லவனீச்சுரமே - தேவா-சம்:705/4
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த - தேவா-சம்:716/1
குலம் ஆர் கயிலை குன்று அது உடையர் கொல்லை எருது ஏறி - தேவா-சம்:716/2
நலம் ஆர் வெள்ளை நாளிகேரம் விரியா நறும் பாளை - தேவா-சம்:716/3
சலம் ஆர் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே - தேவா-சம்:716/4
அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின் - தேவா-சம்:718/2
மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் - தேவா-சம்:718/3
தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல் - தேவா-சம்:719/3
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் - தேவா-சம்:721/3
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓட பொன்ற புறம் தாளால் - தேவா-சம்:723/2
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே - தேவா-சம்:723/4
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை - தேவா-சம்:725/2
ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் - தேவா-சம்:727/3
ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் - தேவா-சம்:727/3
கடி ஆர் கொன்றை சுரும்பின் மாலை கமழ் புன் சடையார் விண் - தேவா-சம்:730/1
தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர் முயங்கு மடவாளை - தேவா-சம்:738/1
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் - தேவா-சம்:738/2
காது ஆர் குழையர் வேத திரளர் கயிலை மலையாரே - தேவா-சம்:738/4
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழி புகழ் ஆர் சம்பந்தன் - தேவா-சம்:742/1
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழி புகழ் ஆர் சம்பந்தன் - தேவா-சம்:742/1
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல் - தேவா-சம்:742/2
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் - தேவா-சம்:743/1
விண் கொள் மதி சேர் சடையார் விடை ஆர் கொடியார் வெண் நீறு - தேவா-சம்:756/2
நீறு ஆர் அகலம் உடையார் நிரை ஆர் கொன்றை அரவோடும் - தேவா-சம்:759/1
நீறு ஆர் அகலம் உடையார் நிரை ஆர் கொன்றை அரவோடும் - தேவா-சம்:759/1
ஆறு ஆர் சடையார் அயில் வெம் கணையால் அவுணர் புரம் மூன்றும் - தேவா-சம்:759/2
ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே - தேவா-சம்:759/4
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு - தேவா-சம்:760/2
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் - தேவா-சம்:760/3
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால் - தேவா-சம்:761/2
வரி ஆர் புலியின் உரி தோல் உடையான் மலையான்மகளோடும் - தேவா-சம்:762/1
விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம்-தன்னுள் - தேவா-சம்:764/1
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன் - தேவா-சம்:764/2
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன் - தேவா-சம்:764/3
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே - தேவா-சம்:765/4
பொங்கு ஆர் சடையர் புனலர் அனலர் பூதம் பாடவே - தேவா-சம்:766/1
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி குளிர் பொய்கை - தேவா-சம்:766/3
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய - தேவா-சம்:767/3
கொடி கொள் மாட குழாம் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே - தேவா-சம்:767/4
மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர் - தேவா-சம்:768/2
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே - தேவா-சம்:768/4
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே - தேவா-சம்:768/4
நீர் ஆர் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர் - தேவா-சம்:769/1
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே - தேவா-சம்:769/2
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல - தேவா-சம்:769/3
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல - தேவா-சம்:769/3
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர் சித்தீச்சுரத்தாரே - தேவா-சம்:769/4
ஈண்டு மாடம் எழில் ஆர் சோலை இலங்கு கோபுரம் - தேவா-சம்:770/3
குழல் ஆர் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம் - தேவா-சம்:771/1
தழல் ஆர் மேனி தவள நீற்றர் சரி கோவண கீளர் - தேவா-சம்:771/2
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி - தேவா-சம்:771/3
கழல் ஆர் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சுரத்தாரே - தேவா-சம்:771/4
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை - தேவா-சம்:772/1
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி - தேவா-சம்:772/2
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார் - தேவா-சம்:772/3
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சுரத்தாரே - தேவா-சம்:772/4
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே - தேவா-சம்:773/4
குயில் ஆர் கோல மாதவிகள் குளிர் பூஞ்சுர புன்னை - தேவா-சம்:775/1
செயில் ஆர் பொய்கை சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரை - தேவா-சம்:775/2
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன் - தேவா-சம்:775/3
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் சடை - தேவா-சம்:776/1
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றை கண் - தேவா-சம்:776/2
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில் - தேவா-சம்:776/3
கார் ஆர் கண்டத்து எண் தோள் எந்தை காரோணத்தாரே - தேவா-சம்:776/4
முடி ஆர் மன்னர் மட மான் விழியார் மூ உலகும் ஏத்தும் - தேவா-சம்:777/1
கொடி ஆர் விடையார் மாட வீதி குடந்தை குழகு ஆரும் - தேவா-சம்:777/3
கடி ஆர் சோலை கலவ மயில் ஆர் காரோணத்தாரே - தேவா-சம்:777/4
கடி ஆர் சோலை கலவ மயில் ஆர் காரோணத்தாரே - தேவா-சம்:777/4
குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில் - தேவா-சம்:778/2
குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில் - தேவா-சம்:778/2
கலை ஆர் மொழியார் காதல் செய்யும் காரோணத்தாரே - தேவா-சம்:778/4
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்தி பொலிய அழகு ஆரும் - தேவா-சம்:779/1
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில் அம் தண் குடமூக்கில் - தேவா-சம்:779/2
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில் அம் தண் குடமூக்கில் - தேவா-சம்:779/2
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார் - தேவா-சம்:779/3
காது ஆர் குழையர் காள_கண்டர் காரோணத்தாரே - தேவா-சம்:779/4
பூ ஆர் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவு எல்லாம் - தேவா-சம்:780/1
தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற - தேவா-சம்:780/2
கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை - தேவா-சம்:780/3
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தை காரோணத்தாரே - தேவா-சம்:780/4
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தை காரோணத்தாரே - தேவா-சம்:780/4
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி - தேவா-சம்:781/1
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை - தேவா-சம்:782/1
மான் ஆர் தோலார் புலியின் உடையார் கரியின் உரி போர்வை - தேவா-சம்:782/2
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடி திகழும் குடமூக்கில் - தேவா-சம்:782/3
கான் ஆர் நட்டம் உடையார் செல்வ காரோணத்தாரே - தேவா-சம்:782/4
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் - தேவா-சம்:783/1
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் - தேவா-சம்:783/2
உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும் - தேவா-சம்:783/3
கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தை காரோணத்தாரே - தேவா-சம்:783/4
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி - தேவா-சம்:785/3
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வ காரோணத்தாரை - தேவா-சம்:786/1
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வ காரோணத்தாரை - தேவா-சம்:786/1
திரு ஆர் செல்வம் மல்கு சண்பை திகழும் சம்பந்தன் - தேவா-சம்:786/2
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து - தேவா-சம்:786/3
கரு ஆர் இடும்பை பிறப்பு அது அறுத்து கவலை கழிவாரே - தேவா-சம்:786/4
வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை - தேவா-சம்:787/1
தேன் ஆர் போது தான் ஆர் கங்கை திங்களொடு சூடி - தேவா-சம்:787/2
தேன் ஆர் போது தான் ஆர் கங்கை திங்களொடு சூடி - தேவா-சம்:787/2
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே - தேவா-சம்:787/4
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை - தேவா-சம்:789/1
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார் - தேவா-சம்:789/2
கறை ஆர் சோலை கானூர் மேய பிறை ஆர் சடையாரே - தேவா-சம்:789/4
கறை ஆர் சோலை கானூர் மேய பிறை ஆர் சடையாரே - தேவா-சம்:789/4
விண் ஆர் திங்கள் கண்ணி வெள்ளை மாலை அது சூடி - தேவா-சம்:790/1
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு தழை புன் சடை தாழ - தேவா-சம்:790/2
கண் ஆர் சோலை கானூர் மேய விண்ணோர் பெருமானே - தேவா-சம்:790/4
தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில் - தேவா-சம்:792/3
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசி - தேவா-சம்:793/2
தேவு ஆர் சோலை கானூர் மேய தேவதேவரே - தேவா-சம்:793/4
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி - தேவா-சம்:800/3
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும் - தேவா-சம்:801/1
கனை ஆர் விடை ஒன்று உடையான் கங்கை திங்கள் கமழ் கொன்றை - தேவா-சம்:801/2
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக - தேவா-சம்:802/3
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து - தேவா-சம்:803/2
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக - தேவா-சம்:803/3
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் - தேவா-சம்:805/1
பொடி ஆர் கோலம் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக - தேவா-சம்:806/3
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே - தேவா-சம்:806/4
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே - தேவா-சம்:806/4
பொன் ஆர் மாடம் நீடும் செல்வ புறவம் பதி ஆக - தேவா-சம்:808/1
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை - தேவா-சம்:808/2
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே - தேவா-சம்:816/4
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் - தேவா-சம்:820/3
இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே - தேவா-சம்:820/4
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல் - தேவா-சம்:823/1
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் - தேவா-சம்:827/2
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே - தேவா-சம்:833/4
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் - தேவா-சம்:848/2
மை ஆர் ஒண் கண்ணார் மாடம் நெடு வீதி - தேவா-சம்:866/1
அலை ஆர் புனல் சூடி ஆகத்து ஒருபாகம் - தேவா-சம்:870/1
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் - தேவா-சம்:871/3
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே - தேவா-சம்:875/4
சிக்கு ஆர் துவர் ஆடை சிறு தட்டு உடையாரும் - தேவா-சம்:891/1
ஏனத்து எயிற்றானை எழில் ஆர் பொழில் காழி - தேவா-சம்:892/2
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய - தேவா-சம்:893/2
விடை ஆர் கொடி எந்தை வெள்ளை பிறை சூடும் - தேவா-சம்:893/3
தேன் ஆர் மத மத்தம் திங்கள் புனல் சூடி - தேவா-சம்:894/1
வான் ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய - தேவா-சம்:894/2
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை - தேவா-சம்:894/3
திரை ஆர் புனலோடு செல்வ மதி சூடி - தேவா-சம்:895/1
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய - தேவா-சம்:895/2
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும் - தேவா-சம்:895/3
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகமாய் - தேவா-சம்:897/1
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய - தேவா-சம்:897/2
துணி ஆர் உடையினான் துதை பொன் கழல் நாளும் - தேவா-சம்:897/3
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய - தேவா-சம்:898/2
கொலை ஆர் மழுவோடு கோல சிலை ஏந்தி - தேவா-சம்:900/1
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய - தேவா-சம்:900/2
இலை ஆர் திரிசூல படையான் கழல் நாளும் - தேவா-சம்:900/3
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட - தேவா-சம்:901/1
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா - தேவா-சம்:901/3
வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய - தேவா-சம்:902/3
திரு மா மறை ஞானசம்பந்தன சேண் ஆர்
  பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி - தேவா-சம்:903/2,3
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடு வீதி - தேவா-சம்:905/3
கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே - தேவா-சம்:905/4
தேர் ஆர் விழவு ஓவா செல்வன் திரை சூழ்ந்த - தேவா-சம்:906/3
கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே - தேவா-சம்:906/4
அரை ஆர் அழல் நாகம் அக்கோடு அசைத்திட்டு - தேவா-சம்:910/1
விரை ஆர் வரை மார்பின் வெண் நீறு அணி அண்ணல் - தேவா-சம்:910/2
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே - தேவா-சம்:910/4
பல் ஆர் தலைமாலை அணிவான் பணிந்து ஏத்த - தேவா-சம்:913/3
கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே - தேவா-சம்:913/4
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய - தேவா-சம்:914/1
நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன் - தேவா-சம்:914/2
உரை ஆர் தமிழ் மாலை பாடும் அவர் எல்லாம் - தேவா-சம்:914/3
மணி ஆர் திகழ் கண்டம் உடையான் மலர் மல்கு - தேவா-சம்:919/1
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த - தேவா-சம்:919/3
கொங்கு ஆர் நறும் கொன்றை சூடி குழகு ஆக - தேவா-சம்:921/2
பெண் ஆர் திருமேனி பெருமான் பிறை மல்கு - தேவா-சம்:922/1
கண் ஆர் நுதலினான் கயிலை கருத்தினால் - தேவா-சம்:922/2
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய - தேவா-சம்:925/1
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன - தேவா-சம்:925/3
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு - தேவா-சம்:939/3
துணி ஆர் உடை ஆடை துன்னி அரை-தன் மேல் - தேவா-சம்:941/1
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த - தேவா-சம்:941/3
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே - தேவா-சம்:941/4
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் - தேவா-சம்:947/3
படை ஆர்தரு பூத பகடு ஆர் உரி போர்வை - தேவா-சம்:959/1
இலை ஆர் தரு சூல படை எம்பெருமானாய் - தேவா-சம்:960/1
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற - தேவா-சம்:961/3
திரை ஆர் சடையானை சேர திரு ஆமே - தேவா-சம்:962/4
வீறு ஆர் முலையாளை பாகம் மிக வைத்து - தேவா-சம்:963/1
தேவா என அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட - தேவா-சம்:965/2
கறை ஆர் மிடற்றானை கருத கெடும் வினையே - தேவா-சம்:966/4
ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை - தேவா-சம்:968/1
சீர் ஆர் திகழ் காழி திரு ஆர் சம்பந்தன் - தேவா-சம்:968/2
சீர் ஆர் திகழ் காழி திரு ஆர் சம்பந்தன் - தேவா-சம்:968/2
பாந்தள் ஆர் சடை பூந்தராய் மன்னும் - தேவா-சம்:974/1
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி - தேவா-சம்:976/1
மணி ஆர் முதுகுன்றை பணிவார் அவர் கண்டீர் - தேவா-சம்:1007/1
மொய் ஆர் முதுகுன்றில் ஐயா என வல்லார் - தேவா-சம்:1008/1
பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்-மினே - தேவா-சம்:1017/2
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரை - தேவா-சம்:1028/1
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரை - தேவா-சம்:1028/1
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரை - தேவா-சம்:1030/1
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை - தேவா-சம்:1031/1
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை - தேவா-சம்:1031/1
தொடுத்து ஆர் மலர் சூட்ட விடுத்தார் வேட்கையே - தேவா-சம்:1032/2
மை ஆர் கண்டன் மாது உமை வைகும் திருமேனி - தேவா-சம்:1047/2
மின் ஆர் சடை மேல் அரவும் மதியும் விளையாட - தேவா-சம்:1050/2
பொன் ஆர் புரி நூல் அந்தணர் வாழும் புறவமே - தேவா-சம்:1050/4
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும் - தேவா-சம்:1051/3
பூ ஆர் கோல சோலை சுலாவும் புறவமே - தேவா-சம்:1051/4
ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே - தேவா-சம்:1063/4
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்-மினே - தேவா-சம்:1067/4
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை - தேவா-சம்:1069/1
கொம்பு ஆர் சோலை கோல வண்டு யாழ்செய் குற்றாலம் - தேவா-சம்:1069/2
மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி - தேவா-சம்:1073/1
குலை ஆர் வாழை தீம் கனி மாந்தும் குற்றாலம் - தேவா-சம்:1073/2
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த - தேவா-சம்:1073/3
தண் ஆர் திங்கள் பொங்கு அரவம் தாழ் புனல் சூடி - தேவா-சம்:1091/1
உரவு ஆர் கலையின் கவிதை புலவர்க்கு ஒருநாளும் - தேவா-சம்:1102/1
அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த - தேவா-சம்:1102/3
களக புரிசை கவின் ஆர் சாரும் கலி காழி - தேவா-சம்:1104/2
எண் ஆர் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்து - தேவா-சம்:1105/1
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலி காழி - தேவா-சம்:1105/2
மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட - தேவா-சம்:1106/1
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி - தேவா-சம்:1106/2
உழை ஆர் கரவா உமையாள் கணவா ஒளிர் சங்க - தேவா-சம்:1106/3
குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு - தேவா-சம்:1107/1
கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலி காழி - தேவா-சம்:1107/2
வெறி ஆர் கொன்றை சடையா விடையா என்பாரை - தேவா-சம்:1107/3
உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு - தேவா-சம்:1108/1
மலை ஆர் மாடம் நீடு உயர் இஞ்சி மஞ்சு ஆரும் - தேவா-சம்:1110/1
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலி காழி - தேவா-சம்:1110/2
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை - தேவா-சம்:1114/1
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ - தேவா-சம்:1124/1
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன - தேவா-சம்:1125/3
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம் - தேவா-சம்:1126/1
ஆடும் அமரர்பிரான் அழகு ஆர் உமையோடும் உடன் - தேவா-சம்:1126/2
ஊறல் அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே - தேவா-சம்:1143/4
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை - தேவா-சம்:1145/3
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை - தேவா-சம்:1150/3
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை - தேவா-சம்:1150/3
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை - தேவா-சம்:1153/2
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் - தேவா-சம்:1162/1
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர்
  சீர் உறு வள வயல் சிரபுரமே - தேவா-சம்:1174/3,4
மறி கையோன் தன் முடி மணி ஆர் கங்கை - தேவா-சம்:1247/3
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1271/4
பண் ஆர் நான்மறை பாடும் பரமயோகி - தேவா-சம்:1284/2
கண் ஆர் நீறு அணி மார்பன் கள்ளில் மேயான் - தேவா-சம்:1284/3
கரை ஆர் பொன் புனல் வேலி கள்ளில் மேயான் - தேவா-சம்:1286/3
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே - தேவா-சம்:1286/4
கடி ஆர் பூம் பொழில் சோலை கள்ளில் மேயான் - தேவா-சம்:1288/3
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே - தேவா-சம்:1359/4
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே - தேவா-சம்:1359/4
பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் - தேவா-சம்:1360/1
பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் - தேவா-சம்:1360/1
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே - தேவா-சம்:1360/4
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே - தேவா-சம்:1360/4
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் - தேவா-சம்:1361/3
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே - தேவா-சம்:1361/4
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே - தேவா-சம்:1363/1
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே - தேவா-சம்:1363/1
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே - தேவா-சம்:1363/1
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு - தேவா-சம்:1366/2
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் - தேவா-சம்:1366/3
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் - தேவா-சம்:1366/3
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே - தேவா-சம்:1366/4
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே - தேவா-சம்:1366/4
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே - தேவா-சம்:1366/4
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் - தேவா-சம்:1369/2
கொச்சையள் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே - தேவா-சம்:1380/3
பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில் - தேவா-சம்:1388/2
காந்தாரம் இசை அமைத்து காரிகையார் பண் பாட கவின் ஆர் வீதி - தேவா-சம்:1399/3
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு - தேவா-சம்:1410/1
முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே - தேவா-சம்:1410/4
பூ ஆர் பொன் தவிசின் மிசை இருந்தவனும் பூம் துழாய் புனைந்த மாலும் - தேவா-சம்:1413/1
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் - தேவா-சம்:1417/3
மின் இயலும் மணி மாடம் மிடை வீழிமிழலையான் விரை ஆர் பாதம் - தேவா-சம்:1426/1
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை - தேவா-சம்:1436/1
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள் - தேவா-சம்:1436/2
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் - தேவா-சம்:1436/3
சீரின் ஆர் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே - தேவா-சம்:1436/4
குளிர்ந்து ஆர் சடையன் கொடும் சிலை வில் காமன் - தேவா-சம்:1439/1
மிளிர்ந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே - தேவா-சம்:1439/4
விரிந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே - தேவா-சம்:1441/4
நரை ஆர் விடையான் நலம் கொள் பெருமான் - தேவா-சம்:1443/1
அரை ஆர் அரவம் அழகா அசைத்தான் - தேவா-சம்:1443/2
திரை ஆர் புனல் சூழ் திரு பறியலூரில் - தேவா-சம்:1443/3
விரை ஆர் மலர் சோலை வீரட்டத்தானே - தேவா-சம்:1443/4
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் - தேவா-சம்:1467/3
தேர் உலாம் நெடு வீதி அது ஆர் தெளிச்சேரியீர் - தேவா-சம்:1494/2
திண்ணென புரிசை தொழில் ஆர் திரு வான்மியூர் - தேவா-சம்:1506/2
சிந்த வெந்த கதிரோனோடு மாசு அறு திங்கள் ஆர்
  அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம் - தேவா-சம்:1516/2,3
உறையும் கோயில் பசும்பொன் அணியார் அசும்பு ஆர் புனல் - தேவா-சம்:1517/2
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் - தேவா-சம்:1521/2
வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்_பிரான் விரை ஆர் கழல் - தேவா-சம்:1550/3
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் - தேவா-சம்:1557/1
பள்ளம் ஆர் சடையின் புடையே அடைய புனல் - தேவா-சம்:1561/1
சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை - தேவா-சம்:1569/1
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி - தேவா-சம்:1571/2
மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி - தேவா-சம்:1573/2
எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன் - தேவா-சம்:1579/2
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியுள் - தேவா-சம்:1589/1
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர - தேவா-சம்:1589/3
ஏர் ஆர் பூம் கச்சி ஏகம்பனை எம்மானை - தேவா-சம்:1592/3
எறி ஆர் பூம் கொன்றையினோடும் இள மத்தம் - தேவா-சம்:1638/1
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை - தேவா-சம்:1644/2
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம் - தேவா-சம்:1645/3
விலகும் கடல் ஆர் வேணுபுரமே - தேவா-சம்:1645/4
அரவு ஆர் கரவன் அமை ஆர் திரள் தோள் - தேவா-சம்:1646/1
அரவு ஆர் கரவன் அமை ஆர் திரள் தோள் - தேவா-சம்:1646/1
குரவு ஆர் குழலாள் ஒருகூறன் இடம் - தேவா-சம்:1646/2
அரை ஆர் கலை சேர் அன மென் நடையை - தேவா-சம்:1649/1
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை - தேவா-சம்:1649/3
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே - தேவா-சம்:1649/4
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு நல் - தேவா-சம்:1654/1
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே - தேவா-சம்:1654/4
மடை ஆர் குவளை மலரும் மருகல் - தேவா-சம்:1655/3
கொந்து ஆர் குவளை குலவும் மருகல் - தேவா-சம்:1656/3
அறை ஆர் கழலும் அழல் வாய் அரவும் - தேவா-சம்:1657/1
பிறை ஆர் சடையும் உடையாய் பெரிய - தேவா-சம்:1657/2
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே - தேவா-சம்:1657/4
கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம் - தேவா-சம்:1659/3
எரி ஆர் சடையும் அடியும் இருவர் - தேவா-சம்:1663/1
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே - தேவா-சம்:1664/4
வெறி ஆர் மலர் கொன்றை அம் தார் விரும்பி - தேவா-சம்:1671/1
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான் - தேவா-சம்:1671/2
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை - தேவா-சம்:1675/1
அலை ஆர் புனல் சூழ் அழுந்தை பெருமான் - தேவா-சம்:1681/1
நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும் - தேவா-சம்:1681/2
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ - தேவா-சம்:1681/3
நறவு ஆர் தலையின் நயவா உலகில் - தேவா-சம்:1682/1
அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர் - தேவா-சம்:1682/3
சுடும் ஆறு வல்லாய் சுடர் ஆர் சடையில் - தேவா-சம்:1683/2
அணி ஆர் விரலாய் அழுந்தை மறையோர் - தேவா-சம்:1685/3
முடி ஆர் சடையாய் முனம்நாள் இருவர் - தேவா-சம்:1686/1
அனல் ஆக விழித்தவனே அழகு ஆர்
  கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய் - தேவா-சம்:1688/2,3
இணை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே - தேவா-சம்:1689/4
கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய் - தேவா-சம்:1690/3
பிறை ஆர் சடையாய் பெரியாய் பெரிய - தேவா-சம்:1693/1
கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய் - தேவா-சம்:1693/3
இறை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே - தேவா-சம்:1693/4
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே - தேவா-சம்:1695/1
கழி ஆர் பதி காவலனை புகலி - தேவா-சம்:1698/1
கொலை ஆர் சிலையான் குடவாயில்-தனில் - தேவா-சம்:1701/3
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே - தேவா-சம்:1701/4
அறை ஆர் கழலன் அழலன் இயலின் - தேவா-சம்:1705/1
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே - தேவா-சம்:1705/4
வரை ஆர் திரள் தோள் அரக்கன் மடிய - தேவா-சம்:1706/1
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான் - தேவா-சம்:1706/2
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் - தேவா-சம்:1706/3
வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே - தேவா-சம்:1706/4
தடம் ஆர் புகலி தமிழ் ஆர் விரகன் - தேவா-சம்:1709/3
தடம் ஆர் புகலி தமிழ் ஆர் விரகன் - தேவா-சம்:1709/3
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே - தேவா-சம்:1709/4
மழை ஆர் மிடறா மழுவாள் உடையாய் - தேவா-சம்:1710/1
உழை ஆர் கரவா உமையாள்_கணவா - தேவா-சம்:1710/2
கொலை ஆர் கரியின் உரி மூடியனே - தேவா-சம்:1711/1
மலை ஆர் சிலையா வளைவித்தவனே - தேவா-சம்:1711/2
ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே - தேவா-சம்:1712/4
குன்றே அமர்வாய் கொலை ஆர் புலியின் - தேவா-சம்:1715/1
கண் ஆர் கமழ் காழியர்-தம் தலைவன் - தேவா-சம்:1719/2
நறவு ஆர் பொழில் நாகேச்சுர நகருள் - தேவா-சம்:1721/3
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி - தேவா-சம்:1725/1
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம் - தேவா-சம்:1725/3
கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே - தேவா-சம்:1726/2
நீ ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே - தேவா-சம்:1727/2
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்_கோன் - தேவா-சம்:1730/1
பாதத்து ஆர் ஒலி பல் சிலம்பினன் - தேவா-சம்:1735/1
ஓதத்து ஆர் விடம் உண்டவன் படை - தேவா-சம்:1735/2
நிறையின் ஆர் நிமிர் புன் சடையன் எம் - தேவா-சம்:1736/2
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன் - தேவா-சம்:1738/1
பொருப்பினான் பொழில் ஆர் புகலி ஊர் - தேவா-சம்:1738/3
புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய - தேவா-சம்:1742/1
மடையின் ஆர் மணி நீர் நெல்வாயிலார் - தேவா-சம்:1742/2
காரின் ஆர் கொன்றை கண்ணியார் மல்கு - தேவா-சம்:1747/1
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு - தேவா-சம்:1754/1
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம் - தேவா-சம்:1756/2
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான் - தேவா-சம்:1763/1
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்பந்தன் - தேவா-சம்:1774/1
விருப்பு உடைய அற்புதர் இருக்கும் இடம் ஏர் ஆர்
  மரு திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே - தேவா-சம்:1808/3,4
நயம் தரும் அ வேத ஒலி ஆர் திரு நள்ளாறே - தேவா-சம்:1827/4
ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும் - தேவா-சம்:1829/1
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர்
  பைம் தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே - தேவா-சம்:1836/3,4
அரவ சடை அந்தணன் மேய அழகு ஆர்
  குரவ பொழில் சூழ் குரங்காடுதுறையே - தேவா-சம்:1841/3,4
இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி - தேவா-சம்:1842/2
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம் - தேவா-சம்:1842/3
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி - தேவா-சம்:1845/2
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் - தேவா-சம்:1845/3
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் - தேவா-சம்:1848/2
குரை ஆர் பொழில் சூழ் குரங்காடுதுறையே - தேவா-சம்:1848/4
செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின் - தேவா-சம்:1849/3
நவை ஆர் மணி பொன் அகில் சந்தனம் உந்தி - தேவா-சம்:1850/3
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே - தேவா-சம்:1850/4
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த - தேவா-சம்:1851/3
சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர் - தேவா-சம்:1852/1
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி - தேவா-சம்:1852/2
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் - தேவா-சம்:1852/3
கார் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தே - தேவா-சம்:1852/4
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் - தேவா-சம்:1853/1
குழல் ஆர் மொழி கோல் வளையோடு உடன் ஆகி - தேவா-சம்:1853/2
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் - தேவா-சம்:1853/3
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர் - தேவா-சம்:1857/1
சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி - தேவா-சம்:1857/2
காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே - தேவா-சம்:1857/4
கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடன் ஆகி - தேவா-சம்:1859/2
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா - தேவா-சம்:1866/2
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே - தேவா-சம்:1866/4
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா - தேவா-சம்:1868/2
கால் ஆர் சிலை காமனை காய்ந்த கருத்தே - தேவா-சம்:1868/4
வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில் - தேவா-சம்:1881/2
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர்
  நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான - தேவா-சம்:1884/2,3
கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும் - தேவா-சம்:1885/2
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே - தேவா-சம்:1885/3
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் - தேவா-சம்:1886/3
ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர் - தேவா-சம்:1888/1
முடையில் ஆர் வெண் தலை கை மூர்த்தி ஆம் திரு உருவன் - தேவா-சம்:1904/2
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும் - தேவா-சம்:1904/3
சடையில் ஆர் வெண் பிறையான் தாள் பணிவார் தக்காரே - தேவா-சம்:1904/4
நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார் - தேவா-சம்:1908/1
கார் ஆர் பூம் கொன்றையினான் காதலித்த தொல் கோயில் - தேவா-சம்:1918/2
வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை - தேவா-சம்:1919/1
பாங்கின் ஆர் நான்மறையோடு ஆறு அங்கம் பல் கலைகள் - தேவா-சம்:1923/3
பாடல் ஆர் நான்மறையான் பைம் கொன்றை பாம்பினொடும் - தேவா-சம்:1952/1
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திரு முடி மேல் - தேவா-சம்:1955/3
கோலத்து ஆர் கொன்றையான் கொல் புலி தோல் ஆடையான் - தேவா-சம்:1963/1
நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான் - தேவா-சம்:1963/2
கறை ஆர் மணி மிடற்றான் காபாலி கட்டங்கன் - தேவா-சம்:1964/1
பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய - தேவா-சம்:1964/2
நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம் - தேவா-சம்:1964/3
கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடம் ஆக - தேவா-சம்:1965/1
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி - தேவா-சம்:1965/2
நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை - தேவா-சம்:1966/3
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான் - தேவா-சம்:1978/1
கண் ஆர் மயிலை கபாலீச்சுரம் அமர்ந்தான் - தேவா-சம்:1978/2
பண் ஆர் பதினெண் கணங்கள்-தம் அட்டமி நாள் - தேவா-சம்:1978/3
கள் ஆர் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள் - தேவா-சம்:1990/1
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே - தேவா-சம்:1993/4
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் - தேவா-சம்:1996/1
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் - தேவா-சம்:1996/1
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி - தேவா-சம்:1996/2
கண்டு சேரகிலார் அழகு ஆர் கலி காழி - தேவா-சம்:2002/2
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி - தேவா-சம்:2003/2
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் - தேவா-சம்:2004/3
வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் - தேவா-சம்:2008/3
வெய்ய ஆர் அழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என் - தேவா-சம்:2012/2
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் - தேவா-சம்:2015/1
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள் - தேவா-சம்:2015/2
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திரு களருள் - தேவா-சம்:2018/2
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் - தேவா-சம்:2020/2
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் - தேவா-சம்:2023/3
வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை - தேவா-சம்:2033/1
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை - தேவா-சம்:2035/3
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும் - தேவா-சம்:2042/1
காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும் - தேவா-சம்:2042/3
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை - தேவா-சம்:2046/1
மையின் ஆர் மணி போல் மிடற்றனை மாசு இல் வெண்பொடி பூசும் மார்பனை - தேவா-சம்:2047/1
நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர் - தேவா-சம்:2049/1
மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் - தேவா-சம்:2050/2
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் - தேவா-சம்:2070/3
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர் - தேவா-சம்:2073/2
கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று - தேவா-சம்:2094/1
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில் - தேவா-சம்:2094/3
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை ஆக - தேவா-சம்:2096/1
பாடல் ஆர் வாய்மொழியீர் பைம் கண் வெள் ஏறு ஊர்தியீர் - தேவா-சம்:2098/1
ஆடல் ஆர் மா நடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர் - தேவா-சம்:2098/2
கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில் - தேவா-சம்:2098/3
நீடல் ஆர் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே - தேவா-சம்:2098/4
ஊர் ஆர் உவரி சங்கம் வங்கம் கொடுவந்து - தேவா-சம்:2103/1
கார் ஆர் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலி காழி - தேவா-சம்:2103/2
நீர் ஆர் சடையாய் நெற்றிக்கண்ணா என்று என்று - தேவா-சம்:2103/3
பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே - தேவா-சம்:2106/1
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு - தேவா-சம்:2107/1
புயல் ஆர் பூமி நாமம் ஓதி புகழ் மல்க - தேவா-சம்:2108/1
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி - தேவா-சம்:2108/2
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி - தேவா-சம்:2108/2
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை புகழ்ந்து ஏத்தி - தேவா-சம்:2110/3
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார் - தேவா-சம்:2115/2
கொங்கு ஆர் கொன்றை சூடி என் உள்ளம் குளிர்வித்தார் - தேவா-சம்:2116/2
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே - தேவா-சம்:2127/4
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி - தேவா-சம்:2131/1
முளை ஆர் மதியம் சூடி என்றும் முப்போதும் - தேவா-சம்:2131/2
விளை ஆர் கழனி பழனம் சூழ்ந்த வெண்காடே - தேவா-சம்:2131/4
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே - தேவா-சம்:2132/4
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண்காட்டை - தேவா-சம்:2134/1
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான் - தேவா-சம்:2134/2
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு - தேவா-சம்:2134/3
பூ ஆர் சடையின் முடி மேல் புனலர் அனல் கொள்வர் - தேவா-சம்:2136/1
நா ஆர் மறையர் பிறையர் நற வெண் தலை ஏந்தி - தேவா-சம்:2136/2
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி - தேவா-சம்:2136/3
விடை ஆர் கொடியார் சடை மேல் விளங்கும் பிறை வேடம் - தேவா-சம்:2139/1
படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார் - தேவா-சம்:2139/2
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் - தேவா-சம்:2139/3
விடை ஆர் நடை ஒன்று உடையார் மீயச்சூராரே - தேவா-சம்:2139/4
குளிரும் சடை கொள் முடி மேல் கோலம் ஆர் கொன்றை - தேவா-சம்:2140/1
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன் - தேவா-சம்:2145/2
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு - தேவா-சம்:2146/3
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர் - தேவா-சம்:2147/2
பல் ஆர் தலை சேர் மாலை சூடி பாம்பும் பூண்டு - தேவா-சம்:2148/1
கல் ஆர் மங்கை பங்கரேனும் காணும்-கால் - தேவா-சம்:2148/3
வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான - தேவா-சம்:2153/3
முள் ஆர் கமலத்து அயன் மால் முடியோடு அடி தேட - தேவா-சம்:2154/1
ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும் - தேவா-சம்:2154/2
கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் - தேவா-சம்:2154/3
புள் ஆர் பொய்கை பூ பல தோன்றும் புத்தூரே - தேவா-சம்:2154/4
கை ஆர் சோறு கவர் குண்டர்களும் துவருண்ட - தேவா-சம்:2155/1
மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல - தேவா-சம்:2155/2
கொத்து ஆர் சந்தும் குரவும் வாரி கொணர்ந்து உந்தும் - தேவா-சம்:2161/3
வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி - தேவா-சம்:2162/1
கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும் - தேவா-சம்:2162/3
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே - தேவா-சம்:2162/4
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழி சம்பந்தன் - தேவா-சம்:2166/1
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே - தேவா-சம்:2166/4
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை - தேவா-சம்:2226/2
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி - தேவா-சம்:2227/2
சீர் ஆர் சிரபுரமும் கொச்சைவயம் சண்பையொடு புறவம் நல்ல - தேவா-சம்:2228/1
ஏர் ஆர் கழுமலமும் வேணுபுரம் தோணிபுரம் என்று என்று உள்கி - தேவா-சம்:2228/3
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல் - தேவா-சம்:2230/2
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத - தேவா-சம்:2230/3
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் - தேவா-சம்:2232/2
கொம்பு ஆர் பூம் சோலை குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல் - தேவா-சம்:2244/1
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி - தேவா-சம்:2245/1
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட - தேவா-சம்:2245/3
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு - தேவா-சம்:2250/1
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி - தேவா-சம்:2251/1
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் - தேவா-சம்:2251/2
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே - தேவா-சம்:2251/4
மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும் - தேவா-சம்:2253/1
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி - தேவா-சம்:2253/2
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே - தேவா-சம்:2253/4
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழி கவுணி சீர் ஆர்
  நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும் - தேவா-சம்:2255/1,2
ஆய்ந்த கலை ஆர் புகலி வெங்குரு அது அரன் நாளும் அமரும் ஊரே - தேவா-சம்:2258/4
புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம் மிகு சிரபுரம் பூம் காழி சண்பை - தேவா-சம்:2261/1
ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர்
  பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர் - தேவா-சம்:2266/2,3
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர்
  வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு - தேவா-சம்:2272/2,3
திகழ் மாடம் மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசு ஆர்
  மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம் கொச்சை புறவம் விண்ணோர் - தேவா-சம்:2274/1,2
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர் - தேவா-சம்:2278/2
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலி காழியுள் - தேவா-சம்:2284/3
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலி காழியே - தேவா-சம்:2288/4
எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை - தேவா-சம்:2296/2
இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ - தேவா-சம்:2303/1
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர் - தேவா-சம்:2303/3
தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ - தேவா-சம்:2306/1
விரையின் ஆர் கொன்றை சூடியும் வேக நாகமும் வீக்கிய - தேவா-சம்:2307/1
நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர் - தேவா-சம்:2307/3
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர்
  மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்தி-தன் தாள் தொழ - தேவா-சம்:2312/2,3
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் - தேவா-சம்:2327/3
முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே - தேவா-சம்:2331/3
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும் - தேவா-சம்:2352/3
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர்
  விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே - தேவா-சம்:2353/3,4
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர்
  ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் - தேவா-சம்:2394/1,2
அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர்
  செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே - தேவா-சம்:2425/3,4
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் - தேவா-சம்:2452/1
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்தாம் - தேவா-சம்:2453/2
கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர்
  வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே - தேவா-சம்:2466/3,4
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து அருளுதல்பொருட்டால் - தேவா-சம்:2472/3
இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் - தேவா-சம்:2475/3
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் - தேவா-சம்:2485/2
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே - தேவா-சம்:2508/4
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே - தேவா-சம்:2513/4
பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர்
  பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே - தேவா-சம்:2572/3,4
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே - தேவா-சம்:2573/4
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி - தேவா-சம்:2590/1
நீரின் ஆர் கடல் துயின்றவன் அயனொடு நிகழ் அடி முடி காணார் - தேவா-சம்:2602/1
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி - தேவா-சம்:2602/2
காரின் ஆர் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்-தன் - தேவா-சம்:2602/3
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே - தேவா-சம்:2602/4
விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடிவீரட்டம் - தேவா-சம்:2643/3
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த - தேவா-சம்:2645/2
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி - தேவா-சம்:2653/1
மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம் - தேவா-சம்:2666/1
தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர் - தேவா-சம்:2697/1
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து - தேவா-சம்:2700/2
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் - தேவா-சம்:2702/3
தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி சுரும்பு ஆர் மலர் - தேவா-சம்:2703/1
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் - தேவா-சம்:2722/2
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர் பூசனை - தேவா-சம்:2731/1
கொடிகள் ஓங்கி குலவும் விழவு ஆர் திலதைப்பதி - தேவா-சம்:2747/3
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே - தேவா-சம்:2750/4
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி - தேவா-சம்:2753/3
விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே - தேவா-சம்:2773/1
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் - தேவா-சம்:2773/2
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் - தேவா-சம்:2774/2
உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ - தேவா-சம்:2775/2
மல்லை ஆர் மும் முடி மன்னர் மூக்கீச்சுரத்து அடிகளை - தேவா-சம்:2779/1
அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை - தேவா-சம்:2788/1
அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை - தேவா-சம்:2788/1
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று - தேவா-சம்:2803/1
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா - தேவா-சம்:2805/2
சாதி ஆர் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார் குழையாய் திகழப்படும் - தேவா-சம்:2807/1
வேதியா விகிர்தா விழவு ஆர் அணி தில்லை-தன்னுள் - தேவா-சம்:2807/2
வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது - தேவா-சம்:2808/1
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் - தேவா-சம்:2808/3
தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல - தேவா-சம்:2809/1
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள் - தேவா-சம்:2809/2
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள் - தேவா-சம்:2809/2
பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும் - தேவா-சம்:2817/2
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் - தேவா-சம்:2821/1
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே - தேவா-சம்:2832/6
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே - தேவா-சம்:2841/4
பந்தம் ஆர் வினை பாறிடுமே - தேவா-சம்:2855/4
குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர் - தேவா-சம்:2858/1
ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான் - தேவா-சம்:2887/2
துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா - தேவா-சம்:2898/1
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி - தேவா-சம்:2921/2
கோதிய தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் - தேவா-சம்:2921/3
கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் - தேவா-சம்:2922/3
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் - தேவா-சம்:2923/3
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் - தேவா-சம்:2927/3
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் - தேவா-சம்:2929/3
மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர் - தேவா-சம்:2935/2
பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர் - தேவா-சம்:2935/3
சுழியில் ஆர் வரு புனல் சூழல் தாங்கினான் - தேவா-சம்:2947/2
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே - தேவா-சம்:3022/3
ஆர் வணம் ஆவன அஞ்சுஎழுத்துமே - தேவா-சம்:3039/4
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர் - தேவா-சம்:3042/1
மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான் - தேவா-சம்:3044/2
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது என - தேவா-சம்:3053/1
காதை ஆர் குழையினன் கழுமல வள நகர் - தேவா-சம்:3053/3
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் - தேவா-சம்:3056/3
கானம் ஆர் கட கரி வழிபடும் கானப்பேர் - தேவா-சம்:3080/2
கலையின் ஆர் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர் - தேவா-சம்:3082/3
மின்னின் ஆர் சடை மிசை விரி கதிர் மதியமும் - தேவா-சம்:3087/1
பொன்னின் ஆர் கொன்றையும் பொறி கிளர் அரவமும் - தேவா-சம்:3087/2
கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி - தேவா-சம்:3089/3
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும் - தேவா-சம்:3096/1
சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே - தேவா-சம்:3096/2
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம் - தேவா-சம்:3096/3
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே - தேவா-சம்:3096/4
கங்கை ஆர் சடையிடை கதிர் மதி அணிந்தவன் - தேவா-சம்:3100/1
சேலின் ஆர் கண்ணினாள்-தன்னொடும் சேர்விடம் - தேவா-சம்:3101/3
விண்ணில் ஆர் இமையவர் மெய் மகிழ்ந்து ஏத்தவே - தேவா-சம்:3102/1
ஞாலத்து ஆர் ஆதிரைநாளினான் நாள்-தொறும் - தேவா-சம்:3106/1
பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர் - தேவா-சம்:3109/1
விண்ணின் ஆர் விரி புனல் மேவினார் சடைமுடி - தேவா-சம்:3109/3
மையின் ஆர் மிடறனார் மான் மழு ஏந்திய - தேவா-சம்:3113/1
சிலை-தனால் முப்புரம் செற்றவன் சீரின் ஆர்
  மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான் - தேவா-சம்:3114/1,2
கங்கை ஆர் சடையினான் கருது காட்டுப்பள்ளி - தேவா-சம்:3115/3
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி - தேவா-சம்:3116/3
நீரின் ஆர் புன் சடை நிமலனுக்கு இடம் என - தேவா-சம்:3128/1
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய் - தேவா-சம்:3128/3
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே - தேவா-சம்:3128/4
கொண்டல் சேர் கோபுரம் கோலம் ஆர் மாளிகை - தேவா-சம்:3130/1
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும் - தேவா-சம்:3130/2
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு - தேவா-சம்:3132/1
சங்கம் ஆர் ஒலி அகில் தரு புகை கமழ்தரும் - தேவா-சம்:3132/2
இன்னிசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே - தேவா-சம்:3140/4
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே - தேவா-சம்:3143/4
பொய்கையின் பொழில் உறு புது மலர் தென்றல் ஆர்
  வைகையின் வடகரை மருவிய ஏடகத்து - தேவா-சம்:3145/1,2
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற - தேவா-சம்:3147/2
பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார் - தேவா-சம்:3151/2
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் - தேவா-சம்:3151/3
கானம் ஆர் வாழ்க்கையான் கார் அமண் தேரர் சொல் - தேவா-சம்:3157/1
வானம் ஆர் மதில் அணி மாளிகை வளர் பொழில் - தேவா-சம்:3157/3
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே - தேவா-சம்:3159/4
செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே - தேவா-சம்:3160/4
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே - தேவா-சம்:3161/4
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான் உமையொடும் - தேவா-சம்:3162/1
விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார் மேவிடம் - தேவா-சம்:3162/2
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய் - தேவா-சம்:3162/3
திரையின் ஆர் எறி புனல் திரு முதுகுன்றமே - தேவா-சம்:3162/4
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே - தேவா-சம்:3163/4
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார் பெரியது ஓர் - தேவா-சம்:3164/1
வானம் ஆர் மதியினோடு அரவர் தாம் மருவிடம் - தேவா-சம்:3164/2
தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே - தேவா-சம்:3164/4
ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற - தேவா-சம்:3166/2
வாரின் ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம் - தேவா-சம்:3166/3
ஏடின் ஆர் மலர் மிசை அயனும் மால் இருவரும் - தேவா-சம்:3167/3
தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே - தேவா-சம்:3168/4
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை - தேவா-சம்:3169/1
செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே - தேவா-சம்:3170/4
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் - தேவா-சம்:3173/3
வண்டு இரைக்கும் பொழில் தண்டலை கொண்டல் ஆர்
  தெண் திரை தண் புனல் தென்குடித்திட்டையே - தேவா-சம்:3179/3,4
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை - தேவா-சம்:3180/1
கானல் ஆர் கடி பொழில் சூழ்தரும் காழியுள் - தேவா-சம்:3180/2
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ் - தேவா-சம்:3180/3
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே - தேவா-சம்:3180/4
சந்தம் ஆர் அகிலொடு சாதி தேக்க மரம் - தேவா-சம்:3181/1
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி - தேவா-சம்:3181/3
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி - தேவா-சம்:3182/3
நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே - தேவா-சம்:3182/4
விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை - தேவா-சம்:3191/1
பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள் - தேவா-சம்:3191/3
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே - தேவா-சம்:3191/4
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும் - தேவா-சம்:3192/2
தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் - தேவா-சம்:3193/3
கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன் - தேவா-சம்:3200/2
பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே - தேவா-சம்:3202/4
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் - தேவா-சம்:3208/2
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில் - தேவா-சம்:3215/1
கரு ஆர் கச்சி திரு ஏகம்பத்து - தேவா-சம்:3233/1
மதி ஆர் கச்சி நதி ஏகம்பம் - தேவா-சம்:3234/1
கலி ஆர் கச்சி மலி ஏகம்பம் - தேவா-சம்:3235/1
வரம் ஆர் கச்சி புரம் ஏகம்பம் - தேவா-சம்:3236/1
படம் ஆர் கச்சி இடம் ஏகம்பத்து - தேவா-சம்:3237/1
நலம் ஆர் கச்சி நிலவு ஏகம்பம் - தேவா-சம்:3238/1
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட கண்நுதல் - தேவா-சம்:3247/1
முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன் - தேவா-சம்:3247/2
எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் - தேவா-சம்:3247/3
அதிர் ஆர் பைம் கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே - தேவா-சம்:3247/4
வான் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை - தேவா-சம்:3248/1
கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் - தேவா-சம்:3248/2
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான் - தேவா-சம்:3248/3
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே - தேவா-சம்:3248/4
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான் - தேவா-சம்:3250/3
உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா - தேவா-சம்:3253/3
உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா - தேவா-சம்:3253/3
செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால் - தேவா-சம்:3254/3
சந்தம் ஆர் முலையாள் தன கூறனார் - தேவா-சம்:3255/1
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள் - தேவா-சம்:3255/3
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும் - தேவா-சம்:3270/1
காரின் ஆர் பொழில் சூழ் கழிப்பாலை எம் - தேவா-சம்:3270/3
மண்ணின் ஆர் மலி செல்வமும் வானமும் - தேவா-சம்:3272/1
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம் - தேவா-சம்:3279/3
ஆர் கணா எனை அஞ்சல் எனாததே - தேவா-சம்:3282/4
வையம் ஆர் புகழாய் அடியார் தொழும் - தேவா-சம்:3302/1
செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் - தேவா-சம்:3302/2
தேறல் ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் - தேவா-சம்:3303/2
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய் ஞானசம்பந்தன் - தேவா-சம்:3308/3
அங்கை ஆர் அழலன் அழகு ஆர் சடை - தேவா-சம்:3309/1
அங்கை ஆர் அழலன் அழகு ஆர் சடை - தேவா-சம்:3309/1
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகமாய் - தேவா-சம்:3315/1
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்பந்தன் - தேவா-சம்:3319/3
செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம் - தேவா-சம்:3321/3
பெரியர் ஆர் அறிவார் அவர் பெற்றியே - தேவா-சம்:3373/4
விரை ஆர் கொன்றையினாய் விடம் உண்ட மிடற்றினனே - தேவா-சம்:3384/1
உரை ஆர் பல் புகழாய் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் - தேவா-சம்:3384/2
திரை ஆர் தெண் கடல் சூழ் திரு வான்மியூர் உறையும் - தேவா-சம்:3384/3
இடி ஆர் ஏறு உடையாய் இமையோர்-தம் மணி முடியாய் - தேவா-சம்:3385/1
கொடி ஆர் மா மதியோடு அரவம் மலர் கொன்றையினாய் - தேவா-சம்:3385/2
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும் - தேவா-சம்:3385/3
கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே - தேவா-சம்:3386/1
மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே - தேவா-சம்:3386/2
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் - தேவா-சம்:3386/3
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் - தேவா-சம்:3388/2
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் - தேவா-சம்:3388/2
திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும் - தேவா-சம்:3388/3
வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும் - தேவா-சம்:3390/1
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய் கறை மா மிடற்றாய் - தேவா-சம்:3390/2
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும் - தேவா-சம்:3390/3
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே - தேவா-சம்:3391/2
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் - தேவா-சம்:3391/3
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் - தேவா-சம்:3392/3
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல - தேவா-சம்:3398/2
விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை - தேவா-சம்:3408/2
பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே - தேவா-சம்:3409/2
திருவின் ஆர் போதினாலும் திருமாலும் ஒர் தெய்வம் முன்னி - தேவா-சம்:3413/1
ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே - தேவா-சம்:3424/4
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் - தேவா-சம்:3426/2
அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர்
  கொக்கரையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா - தேவா-சம்:3430/2,3
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய - தேவா-சம்:3435/1
உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே - தேவா-சம்:3438/4
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை - தேவா-சம்:3448/2
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன் - தேவா-சம்:3449/1
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான் - தேவா-சம்:3465/2
எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ - தேவா-சம்:3488/1
வரி ஆர் வெம் சிலை பிடித்து மடவாளை ஒருபாகம் - தேவா-சம்:3488/3
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர்
  தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே - தேவா-சம்:3504/3,4
பங்கம் ஆர் கடல் அலற பருவரையோடு அரவு உழல - தேவா-சம்:3507/1
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள - தேவா-சம்:3511/3
ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால் - தேவா-சம்:3537/3
ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில் - தேவா-சம்:3542/2
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர்
  வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே - தேவா-சம்:3548/3,4
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் - தேவா-சம்:3549/2
கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர் - தேவா-சம்:3556/3
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர்
  தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ - தேவா-சம்:3557/2,3
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர்
  விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம் - தேவா-சம்:3560/1,2
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே - தேவா-சம்:3560/4
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர்
  வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே - தேவா-சம்:3561/3,4
செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய் - தேவா-சம்:3569/2
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர்
  மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் - தேவா-சம்:3571/1,2
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர்
  கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் - தேவா-சம்:3576/2,3
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர்
  ஐயன் அடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலும் மிகவே - தேவா-சம்:3576/3,4
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர்
  பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே - தேவா-சம்:3577/3,4
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம் - தேவா-சம்:3583/1
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர்
  பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் - தேவா-சம்:3585/1,2
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர்
  பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் - தேவா-சம்:3586/1,2
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர்
  செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே - தேவா-சம்:3591/3,4
நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர்
  சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே - தேவா-சம்:3592/3,4
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர்
  தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே - தேவா-சம்:3593/3,4
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர்
  செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே - தேவா-சம்:3594/3,4
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர்
  செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் - தேவா-சம்:3602/1,2
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர்
  தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே - தேவா-சம்:3605/3,4
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் - தேவா-சம்:3607/3
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர்
  வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே - தேவா-சம்:3615/3,4
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர்
  வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே - தேவா-சம்:3617/3,4
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர்
  உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே - தேவா-சம்:3626/3,4
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர்
  ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே - தேவா-சம்:3628/3,4
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே - தேவா-சம்:3629/4
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் - தேவா-சம்:3631/1
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர்
  திண்ணிய அரக்கனை நெரித்து அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம் - தேவா-சம்:3631/1,2
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர்
  ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே - தேவா-சம்:3631/3,4
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர் - தேவா-சம்:3637/2
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர்
  குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே - தேவா-சம்:3646/3,4
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் - தேவா-சம்:3659/2
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர்
  விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே - தேவா-சம்:3659/3,4
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே - தேவா-சம்:3692/4
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க - தேவா-சம்:3694/3
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே - தேவா-சம்:3695/4
செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே - தேவா-சம்:3696/4
அண்டல்செய்து இருவரை வெருவுற ஆர் அழல் ஆயினார் - தேவா-சம்:3753/2
ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி - தேவா-சம்:3757/1
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே - தேவா-சம்:3757/4
கந்தம் ஆர் கேதகை சந்தன காடு சூழ் கதலி மாடே - தேவா-சம்:3759/1
சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி - தேவா-சம்:3779/2
படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர் - தேவா-சம்:3799/1
பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர் - தேவா-சம்:3799/2
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் - தேவா-சம்:3800/3
கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன - தேவா-சம்:3809/3
ஆர் துயர் அருவினை இலரே - தேவா-சம்:3829/4
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே - தேவா-சம்:3883/4
நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி - தேவா-சம்:3885/1
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய - தேவா-சம்:3885/3
காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே - தேவா-சம்:3885/4
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் - தேவா-சம்:3893/2
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் - தேவா-சம்:3893/2
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் - தேவா-சம்:3893/2
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் - தேவா-சம்:3894/2
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில - தேவா-சம்:3897/2
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் - தேவா-சம்:3905/1
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி - தேவா-சம்:3905/2
பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து - தேவா-சம்:3912/2
அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் - தேவா-சம்:3915/3
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார் - தேவா-சம்:3916/2
திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார் - தேவா-சம்:3917/2
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர் - தேவா-சம்:3925/2
கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர் - தேவா-சம்:3926/2
ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே - தேவா-சம்:3930/4
காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் - தேவா-சம்:3932/3
பூமகனும் அவனை பயந்த புயல் ஆர் நிறத்தானும் - தேவா-சம்:3953/1
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும் - தேவா-சம்:3977/2
சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர - தேவா-சம்:3979/1
அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர் - தேவா-சம்:3980/1
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனை சண்பை ஞானசம்பந்தன் வாய் நவில் - தேவா-சம்:4000/1
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே - தேவா-சம்:4000/2
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4001/2
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4002/2
அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4003/2
அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4004/2
எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4005/2
இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4006/2
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4007/2
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4008/2
அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4009/2
இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் - தேவா-சம்:4010/2
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே - தேவா-சம்:4034/1
கஞ்சியை குலவு கையரே கலக்கம் ஆர் அமணர் கையரே - தேவா-சம்:4055/1
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் - தேவா-சம்:4058/3
ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா கா யா - தேவா-சம்:4058/4
நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் - தேவா-சம்:4081/1
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி - தேவா-சம்:4092/3
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல் - தேவா-சம்:4096/3
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு - தேவா-சம்:4104/1
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள - தேவா-சம்:4105/1
மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி - தேவா-சம்:4105/2
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும் - தேவா-சம்:4105/3
சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா - தேவா-சம்:4109/1
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே - தேவா-சம்:4111/4
உலவு பல் புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே - தேவா-சம்:4117/4
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே - தேவா-சம்:4118/4
கள்ளம் ஆர் மனத்து கலதிகட்கு அருளா கடவுளார் உறைவிடம் வினவில் - தேவா-சம்:4119/2
விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலம் ஆர் பாதர் - தேவா-சம்:4124/2
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் - தேவா-சம்:4130/3
நீறு உகந்தீர் நிரை ஆர் விரி தேன் கொன்றை - தேவா-சம்:4141/2
மறி ஆர் கரத்து எந்தை அம் மாது உமையோடும் - தேவா-சம்:4148/1
வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே - தேவா-சம்:4148/4
கரை ஆர் கடல் நஞ்சு அமுது உண்டவர் கங்கை - தேவா-சம்:4150/1
திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர் - தேவா-சம்:4150/2
குரை ஆர் மணியும் குளிர் சந்தமும் கொண்டு - தேவா-சம்:4150/3
விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே - தேவா-சம்:4150/4
கண் ஆர் விழவின் கடி வீதிகள்-தோறும் - தேவா-சம்:4155/3
விள் வாய் நறவு உண்டு வண்டு ஆர் விடைவாயே - தேவா-சம்:4156/4
விடை ஆர் கொடியான் அழகு ஆர் விடைவாயே - தேவா-சம்:4157/4
விடை ஆர் கொடியான் அழகு ஆர் விடைவாயே - தேவா-சம்:4157/4
ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே - தேவா-அப்:5/4
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே - தேவா-அப்:10/4
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் - தேவா-அப்:14/4
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் - தேவா-அப்:15/4
தாழ் இளம் செஞ்சடையானும் தண்ணம் ஆர் திண் கொடியானும் - தேவா-அப்:36/2
பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால் - தேவா-அப்:57/3
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ - தேவா-அப்:57/4
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர்
  அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் - தேவா-அப்:77/1,2
உற்றார் ஆர் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது - தேவா-அப்:91/1
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ - தேவா-அப்:91/2
எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை - தேவா-அப்:151/1
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை - தேவா-அப்:151/2
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை - தேவா-அப்:151/3
அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே - தேவா-அப்:151/4
அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர் நாகத்தர் - தேவா-அப்:159/1
நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும் - தேவா-அப்:159/2
கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி - தேவா-அப்:160/3
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை - தேவா-அப்:163/3
ஈண்டு ஆர் அழலின் இருவரும் கைதொழ - தேவா-அப்:164/1
வஞ்ச வண்ணத்தர் வண்டு ஆர் குழலாளொடும் - தேவா-அப்:168/2
வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை - தேவா-அப்:194/1
ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல - தேவா-அப்:201/3
ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் - தேவா-அப்:298/3
விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்
  பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் - தேவா-அப்:305/2,3
கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும் - தேவா-அப்:331/1
அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி - தேவா-அப்:337/1
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் - தேவா-அப்:368/3
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை - தேவா-அப்:389/3
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே - தேவா-அப்:403/4
கொந்து ஆர் பூம் குழலினாரை கூறியே காலம் போன - தேவா-அப்:410/1
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை - தேவா-அப்:436/3
மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி - தேவா-அப்:438/1
அண்டம் ஆர் அமரர்_கோமான் ஆதி எம் அண்ணல் பாதம் - தேவா-அப்:469/1
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை - தேவா-அப்:474/1
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் - தேவா-அப்:481/2
நீலம் ஆர் கண்டத்தானே நீள் முடி அமரர்_கோவே - தேவா-அப்:491/2
கோலம் ஆர் சடையினானே கோடிகா உடைய கோவே - தேவா-அப்:491/4
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி - தேவா-அப்:522/1
களியின் ஆர் பாடல் ஓவா கடவூர்வீரட்டம் என்னும் - தேவா-அப்:522/2
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே - தேவா-அப்:553/4
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே - தேவா-அப்:592/4
ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அ அரக்கர் கூடி - தேவா-அப்:593/1
மறைவலா இறைவா வண்டு ஆர் கொன்றையாய் வாமதேவா - தேவா-அப்:613/2
உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் - தேவா-அப்:615/2
செம்பொன் ஆர் உருவர் போலும் திகழ் திருநீற்றர் போலும் - தேவா-அப்:642/2
போகம் ஆர் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும் - தேவா-அப்:646/1
வேகம் ஆர் விடையர் போலும் வெண் பொடி ஆடும் மேனி - தேவா-அப்:646/2
பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய - தேவா-அப்:661/3
பாட்டின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேயார் - தேவா-அப்:664/3
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி - தேவா-அப்:682/1
கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி - தேவா-அப்:682/2
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க - தேவா-அப்:791/1
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற - தேவா-அப்:799/1
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் - தேவா-அப்:800/1
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம் - தேவா-அப்:800/2
எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் - தேவா-அப்:803/2
செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் - தேவா-அப்:805/3
களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி - தேவா-அப்:807/2
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே - தேவா-அப்:858/2
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே - தேவா-அப்:858/4
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை - தேவா-அப்:867/1
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே - தேவா-அப்:893/4
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று - தேவா-அப்:900/2
சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும் - தேவா-அப்:901/1
அழல் ஆர் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே - தேவா-அப்:901/4
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர் - தேவா-அப்:915/3
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே - தேவா-அப்:919/2
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே - தேவா-அப்:919/4
பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில் - தேவா-அப்:933/2
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப - தேவா-அப்:935/1
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி - தேவா-அப்:935/2
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார் - தேவா-அப்:938/3
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் - தேவா-அப்:939/3
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் - தேவா-அப்:950/1
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் - தேவா-அப்:953/3
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் - தேவா-அப்:968/1
ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம்அகவன் திரிந்து - தேவா-அப்:1006/1
சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை - தேவா-அப்:1006/3
காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகி கண் ஆர் கெடில - தேவா-அப்:1008/1
பொன் அளவு ஆர் சடை கொன்றையினாய் புகலூர்க்கு அரசே - தேவா-அப்:1011/1
கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிர் ஆர் தடத்து - தேவா-அப்:1015/2
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் - தேவா-அப்:1028/1
துன் ஆர் கடந்தையுள் தூங்கானைமாட சுடர் கொழுந்தே - தேவா-அப்:1028/4
பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே - தேவா-அப்:1029/4
முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும் - தேவா-அப்:1061/1
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே - தேவா-அப்:1127/2
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர் - தேவா-அப்:1149/3
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்வானை - தேவா-அப்:1150/1
தேனை ஆர் குழலாளை ஒர்பாகமா - தேவா-அப்:1150/3
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ - தேவா-அப்:1161/2
நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை - தேவா-அப்:1190/2
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி - தேவா-அப்:1193/3
எற்றின் ஆர் கொடியார் இடைமருதினை - தேவா-அப்:1215/3
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர் - தேவா-அப்:1231/1
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர் - தேவா-அப்:1231/2
வெண்ணி தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர்
  கண்ணி தொத்த சடையர் கபாலியார் - தேவா-அப்:1234/1,2
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார் - தேவா-அப்:1243/1
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே - தேவா-அப்:1252/4
பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை - தேவா-அப்:1260/1
கண்ணின் ஆர் கடம்பூர் கரக்கோயிலே - தேவா-அப்:1260/4
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன் - தேவா-அப்:1261/1
களரி ஆர் கடம்பூர் கரக்கோயிலே - தேவா-அப்:1271/4
புற்றின் ஆர் அரவம் புலி தோல் மிசை - தேவா-அப்:1297/1
உரை பொன்கற்றையர் ஆர் இவரோ எனில் - தேவா-அப்:1300/3
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர் - தேவா-அப்:1302/3
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை - தேவா-அப்:1314/1
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர் - தேவா-அப்:1314/3
ஆர் கொள் கொன்றையன் ஆவடுதண்துறை - தேவா-அப்:1358/3
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனை - தேவா-அப்:1414/3
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார் - தேவா-அப்:1446/3
அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம் - தேவா-அப்:1474/3
சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ - தேவா-அப்:1503/3
நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை - தேவா-அப்:1512/1
நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும் - தேவா-அப்:1517/2
தொல்லை ஆர் பொழில் தோணிபுரவர்க்கே - தேவா-அப்:1522/3
துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை - தேவா-அப்:1524/3
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை - தேவா-அப்:1531/1
இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம் - தேவா-அப்:1549/3
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு - தேவா-அப்:1567/3
தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன் - தேவா-அப்:1571/1
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர் - தேவா-அப்:1592/1
செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை - தேவா-அப்:1595/3
வண்டு ஆர் கொன்றையும் மத்தம் வளர் சடை - தேவா-அப்:1605/1
அரை ஆர் கோவண ஆடையன் ஆறு எலாம் - தேவா-அப்:1606/1
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை - தேவா-அப்:1606/2
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால் - தேவா-அப்:1606/3
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம் - தேவா-அப்:1610/3
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம் - தேவா-அப்:1611/3
செந்நெல் ஆர் வயல் சூழ் திரு கோளிலி - தேவா-அப்:1642/3
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி - தேவா-அப்:1652/3
ஆலத்து ஆர் நிழலில் அறம் நால்வர்க்கு - தேவா-அப்:1663/1
மாலுக்கு ஆர் அருள் செய்தவன் மாற்பேறு - தேவா-அப்:1663/3
வருத்தி ஆர் அருள் செய்தவன் மாற்பேறு - தேவா-அப்:1671/3
மாசு ஆர் பாச மயக்கு அறுவித்து எனுள் - தேவா-அப்:1697/1
நீலத்து ஆர் மிடற்றான் வெள்ளை நீறு அணி - தேவா-அப்:1704/3
அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள் அமர் - தேவா-அப்:1717/3
குரவனை குரவு ஆர் பொழில் கோழம்பத்து - தேவா-அப்:1719/3
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன் - தேவா-அப்:1733/1
செங்கண்மால் இடம் ஆர் திரு வாஞ்சியம் - தேவா-அப்:1746/3
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு - தேவா-அப்:1764/2
அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே - தேவா-அப்:1778/1
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை - தேவா-அப்:1779/1
அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான் - தேவா-அப்:1783/2
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் - தேவா-அப்:1797/3
அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் - தேவா-அப்:1800/2
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி - தேவா-அப்:1840/3
அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை - தேவா-அப்:1870/3
கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை - தேவா-அப்:1893/3
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் - தேவா-அப்:1924/3
சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார் - தேவா-அப்:1926/3
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் - தேவா-அப்:1928/3
மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார் - தேவா-அப்:1930/3
மாட்சி ஆர் மருகல் பெருமானுக்கு - தேவா-அப்:1940/3
புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன் - தேவா-அப்:1962/2
அந்தி_வண்ணனை ஆர் அழல் மூர்த்தியை - தேவா-அப்:1985/3
பூத்து ஆர் கொன்றையினாய் புலியின் அதள் - தேவா-அப்:2020/1
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது - தேவா-அப்:2020/3
அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி - தேவா-அப்:2026/2
அண்டம் ஆர் இருளூடு கடந்து உம்பர் - தேவா-அப்:2027/1
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம் - தேவா-அப்:2027/3
அரு அரா அரை ஆர்த்தவன் ஆர் கழல் - தேவா-அப்:2036/3
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி - தேவா-அப்:2075/3
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து ஆர் அருள் - தேவா-அப்:2085/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட - தேவா-அப்:2100/1
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார் - தேவா-அப்:2100/3
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே - தேவா-அப்:2100/4
காது ஆர் குழையினர் கட்டங்கத்தர் கயிலாய மா மலையார் காரோணத்தார் - தேவா-அப்:2101/1
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே - தேவா-அப்:2101/4
கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை - தேவா-அப்:2115/3
கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி - தேவா-அப்:2129/2
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர் - தேவா-அப்:2151/1
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் - தேவா-அப்:2151/2
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம் - தேவா-அப்:2151/3
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே - தேவா-அப்:2151/4
திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா - தேவா-அப்:2152/1
வரை ஆர் அருவி சூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மா மேருவும் - தேவா-அப்:2152/3
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே - தேவா-அப்:2152/4
செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம் - தேவா-அப்:2153/1
உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் - தேவா-அப்:2155/2
கண் ஆர் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர்-தம் காப்புக்களே - தேவா-அப்:2155/4
சீர் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு காட்டுப்பள்ளி திரு வெண்காடும் - தேவா-அப்:2157/1
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் - தேவா-அப்:2157/3
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு என்றும் கடவூரில் வீரட்டம் காப்புக்களே - தேவா-அப்:2157/4
தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும் - தேவா-அப்:2159/1
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை - தேவா-அப்:2159/3
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை - தேவா-அப்:2159/3
கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே - தேவா-அப்:2159/4
கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே - தேவா-அப்:2159/4
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை - தேவா-அப்:2169/3
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை - தேவா-அப்:2186/3
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே - தேவா-அப்:2195/4
உரை ஆர் பொருளுக்கு உலப்பிலானை ஒழியாமே எவ்வுருவும் ஆனான்-தன்னை - தேவா-அப்:2198/1
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை - தேவா-அப்:2198/3
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே - தேவா-அப்:2198/4
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா - தேவா-அப்:2199/2
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை - தேவா-அப்:2199/3
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த - தேவா-அப்:2204/2
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் - தேவா-அப்:2204/3
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே - தேவா-அப்:2204/4
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் - தேவா-அப்:2220/3
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி போலும் கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும் - தேவா-அப்:2245/1
கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த - தேவா-அப்:2259/1
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே - தேவா-அப்:2259/4
கா ஆர் சடைமுடியர் காரோணத்தர் கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல் - தேவா-அப்:2261/1
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் - தேவா-அப்:2261/2
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் - தேவா-அப்:2261/2
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட - தேவா-அப்:2261/3
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே - தேவா-அப்:2261/4
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார் ஒருநாளும் பேணு காட்டில் - தேவா-அப்:2262/2
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை - தேவா-அப்:2272/2
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் - தேவா-அப்:2274/1
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை - தேவா-அப்:2294/2
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே - தேவா-அப்:2295/4
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் - தேவா-அப்:2298/1
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் - தேவா-அப்:2298/2
வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும் - தேவா-அப்:2298/3
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் - தேவா-அப்:2300/2
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் - தேவா-அப்:2304/1
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே - தேவா-அப்:2305/4
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே - தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே - தேவா-அப்:2307/4
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை - தேவா-அப்:2308/1
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே - தேவா-அப்:2308/4
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய் - தேவா-அப்:2326/1
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் - தேவா-அப்:2327/1
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் - தேவா-அப்:2331/1
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே - தேவா-அப்:2332/4
பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் - தேவா-அப்:2336/1
முடி ஆர் மதி அரவம் வைத்தார் போலும் மூஉலகும் தாமேயாய் நின்றார் போலும் - தேவா-அப்:2370/1
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் - தேவா-அப்:2370/2
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் - தேவா-அப்:2370/3
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார் போலும் திசை அனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும் - தேவா-அப்:2374/3
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி - தேவா-அப்:2384/1
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை - தேவா-அப்:2384/2
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை - தேவா-அப்:2384/3
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே - தேவா-அப்:2445/1
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே - தேவா-அப்:2449/3
பார் ஆர் முழவத்து இடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே - தேவா-அப்:2452/4
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே - தேவா-அப்:2455/2
ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி - தேவா-அப்:2456/3
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே - தேவா-அப்:2461/3
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ - தேவா-அப்:2469/4
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே - தேவா-அப்:2479/4
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே - தேவா-அப்:2480/4
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் - தேவா-அப்:2498/1
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும் - தேவா-அப்:2500/3
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் - தேவா-அப்:2501/1
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் - தேவா-அப்:2506/1
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் - தேவா-அப்:2506/3
வெறி ஆர் மலர் கொன்றை சூடினானை வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை - தேவா-அப்:2516/1
ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை அழகு ஆய பொன் ஆர் மேனி - தேவா-அப்:2518/1
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் - தேவா-அப்:2519/1
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை - தேவா-அப்:2548/3
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் - தேவா-அப்:2556/1
கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர் - தேவா-அப்:2559/2
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே - தேவா-அப்:2559/3
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் - தேவா-அப்:2563/3
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை - தேவா-அப்:2568/2
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் - தேவா-அப்:2597/2
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் - தேவா-அப்:2599/2
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் - தேவா-அப்:2603/3
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் - தேவா-அப்:2620/3
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை - தேவா-அப்:2631/1
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை - தேவா-அப்:2631/1
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை - தேவா-அப்:2631/2
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி - தேவா-அப்:2646/3
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி - தேவா-அப்:2658/4
கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி - தேவா-அப்:2659/4
கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி - தேவா-அப்:2659/4
கன்னி ஆர் கங்கை தலைவா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி - தேவா-அப்:2661/4
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி - தேவா-அப்:2664/1
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி - தேவா-அப்:2664/2
கடி ஆர் பரம் மூன்றும் எய்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி - தேவா-அப்:2664/4
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே - தேவா-அப்:2673/4
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2725/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2726/4
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2727/4
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2728/4
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2730/4
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2731/4
இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2732/4
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2733/4
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2734/4
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2735/4
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2736/4
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை - தேவா-அப்:2737/2
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2737/4
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2738/4
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2739/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2740/4
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2741/4
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2742/4
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2743/4
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே - தேவா-அப்:2744/4
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் - தேவா-அப்:2747/1
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி - தேவா-அப்:2753/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி - தேவா-அப்:2770/1
கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே - தேவா-அப்:2786/4
கூர் ஆர் குறுக்கைவீரட்டானமும் கோட்டூர் குடமூக்கு கோழம்பமும் - தேவா-அப்:2787/3
கார் ஆர் கழுக்குன்றும் கானப்பேரும் கயிலாயநாதனையே காணல் ஆமே - தேவா-அப்:2787/4
மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் - தேவா-அப்:2793/2
திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல் - தேவா-அப்:2797/2
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர்
  பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே - தேவா-அப்:2797/3,4
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு - தேவா-அப்:2803/3
கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா - தேவா-அப்:2805/1
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் - தேவா-அப்:2808/1
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த - தேவா-அப்:2808/3
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே - தேவா-அப்:2808/4
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே - தேவா-அப்:2811/4
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் - தேவா-அப்:2812/2
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் - தேவா-அப்:2812/3
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் - தேவா-அப்:2818/3
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை - தேவா-அப்:2826/2
அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற - தேவா-அப்:2834/2
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட - தேவா-அப்:2841/2
பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை - தேவா-அப்:2848/3
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன் - தேவா-அப்:2850/3
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று - தேவா-அப்:2853/3
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் - தேவா-அப்:2855/1
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் - தேவா-அப்:2855/2
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் - தேவா-அப்:2855/3
குழை ஆர் திரு தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன் - தேவா-அப்:2856/1
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் - தேவா-அப்:2856/2
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் - தேவா-அப்:2856/3
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே - தேவா-அப்:2856/4
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே - தேவா-அப்:2868/1
வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை - தேவா-அப்:2887/1
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் - தேவா-அப்:2899/3
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே - தேவா-அப்:2899/4
சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே - தேவா-அப்:2905/4
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து - தேவா-அப்:2919/2
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா - தேவா-அப்:2930/3
ஆவன் காண் ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண் ஆர் அழலாய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணா - தேவா-அப்:2931/3
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த - தேவா-அப்:2945/3
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே - தேவா-அப்:2945/4
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் - தேவா-அப்:2954/1
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் - தேவா-அப்:2969/1
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம் - தேவா-அப்:2979/3
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை - தேவா-அப்:2982/3
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே - தேவா-அப்:3004/1
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே - தேவா-அப்:3004/1
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே - தேவா-அப்:3017/1
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே - தேவா-அப்:3017/1
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே - தேவா-அப்:3017/2
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே - தேவா-அப்:3017/2
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே - தேவா-அப்:3017/3
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே - தேவா-அப்:3017/3
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே காண்பார் ஆர் கண்நுதலாய் காட்டா-காலே - தேவா-அப்:3017/4
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே காண்பார் ஆர் கண்நுதலாய் காட்டா-காலே - தேவா-அப்:3017/4
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் - தேவா-அப்:3026/3
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் - தேவா-அப்:3031/2
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ - தேவா-அப்:3039/3
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் - தேவா-அப்:3050/3
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் - தேவா-அப்:3050/3
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே - தேவா-அப்:3054/4
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் - தேவா-அப்:3059/1
வேய் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:2/3
மின் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:3/3
செடி ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:4/3
தாது ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:5/3
தண் ஆர் மதிசூடீ தழல் போலும் திருமேனீ - தேவா-சுந்:6/1
மண் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:6/3
தேன் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் - தேவா-சுந்:7/3
தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று - தேவா-சுந்:13/3
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே - தேவா-சுந்:24/3
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே - தேவா-சுந்:24/4
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் - தேவா-சுந்:28/1
வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் - தேவா-சுந்:30/3
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே - தேவா-சுந்:32/4
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே - தேவா-சுந்:33/4
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே - தேவா-சுந்:33/4
அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே - தேவா-சுந்:34/4
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே - தேவா-சுந்:35/4
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே - தேவா-சுந்:36/4
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே - தேவா-சுந்:37/4
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே - தேவா-சுந்:38/4
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே - தேவா-சுந்:39/4
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே - தேவா-சுந்:40/4
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை - தேவா-சுந்:41/2
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண் - தேவா-சுந்:82/1
அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே - தேவா-சுந்:83/4
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே - தேவா-சுந்:84/4
அரிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே - தேவா-சுந்:85/4
இடுபட எய்து எரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கு ஆர் எதிர் எம்பெருமான் - தேவா-சுந்:86/2
பொடிபட நோக்கியது என்னை-கொல்லோ பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே - தேவா-சுந்:86/4
அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே - தேவா-சுந்:87/4
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே - தேவா-சுந்:88/4
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே - தேவா-சுந்:89/4
பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே - தேவா-சுந்:90/4
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே - தேவா-சுந்:91/4
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே - தேவா-சுந்:92/4
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை - தேவா-சுந்:93/2
பண் இசை ஆர் மொழியார் பலர் பாட - தேவா-சுந்:105/3
மலை ஆர் அருவி திரள் மா மணி உந்தி - தேவா-சுந்:123/1
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர் - தேவா-சுந்:123/3
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் - தேவா-சுந்:126/3
மட்டு ஆர் மலர் கொன்றையும் வன்னியும் சாடி - தேவா-சுந்:128/1
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி - தேவா-சுந்:129/1
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும் துறையூர் - தேவா-சுந்:130/3
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர் - தேவா-சுந்:131/3
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன் - தேவா-சுந்:133/1
மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் - தேவா-சுந்:150/1
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா - தேவா-சுந்:155/2
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த - தேவா-சுந்:155/3
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் - தேவா-சுந்:160/2
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே - தேவா-சுந்:160/4
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே - தேவா-சுந்:165/1
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் - தேவா-சுந்:171/2
வாசத்தின் ஆர் மலர் கொன்றை உள்ளார் வடிவு ஆர்ந்த நீறு - தேவா-சுந்:189/1
தலையிடை ஆர் பலி சென்று அகம்-தோறும் திரிந்த செல்வர் - தேவா-சுந்:194/1
இட்டு உகந்து ஆர் மலர் பூசை இச்சிக்கும் இறைவர் முன்நாள் - தேவா-சுந்:195/2
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் - தேவா-சுந்:211/3
கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே - தேவா-சுந்:215/1
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும் - தேவா-சுந்:215/3
விரை ஆர் கொன்றையினாய் விமலா இனி உன்னை அல்லால் - தேவா-சுந்:216/1
திரை ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் - தேவா-சுந்:216/3
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் - தேவா-சுந்:217/3
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய - தேவா-சுந்:220/3
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய - தேவா-சுந்:223/3
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் - தேவா-சுந்:224/1
கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர் - தேவா-சுந்:232/1
ஆர்த்தாய் ஆடு அரவை அரை ஆர் புலி அதன் மேல் - தேவா-சுந்:234/1
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே - தேவா-சுந்:237/4
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை - தேவா-சுந்:238/2
பொன் ஆர் மேனியனே புலி தோலை அரைக்கு அசைத்து - தேவா-சுந்:239/1
மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே - தேவா-சுந்:239/2
கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன் - தேவா-சுந்:240/1
வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே - தேவா-சுந்:240/3
வண்டு ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே - தேவா-சுந்:242/3
பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே - தேவா-சுந்:243/2
மண் ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே - தேவா-சுந்:243/3
மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே - தேவா-சுந்:245/3
மை ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே - தேவா-சுந்:246/3
ஏர் ஆர் முப்புரமும் எரிய சிலை தொட்டவனை - தேவா-சுந்:248/1
வார் ஆர் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை - தேவா-சுந்:248/2
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் - தேவா-சுந்:248/3
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே - தேவா-சுந்:258/4
கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய் - தேவா-சுந்:260/2
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே - தேவா-சுந்:261/1
விடை ஆர் வேதியனே விளங்கும் குழை காது உடையாய் - தேவா-சுந்:261/2
கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன் எம் காளத்தியாய் - தேவா-சுந்:261/3
நீறு ஆர் மேனியனே நிமலா நினை அன்றி மற்று - தேவா-சுந்:266/1
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய் - தேவா-சுந்:266/3
களி ஆர் வண்டு அறையும் திரு காளத்தியுள் இருந்த - தேவா-சுந்:267/3
விடை ஆரும் கொடியாய் வெறி ஆர் மலர் கொன்றையினாய் - தேவா-சுந்:269/1
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே - தேவா-சுந்:269/2
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற - தேவா-சுந்:269/3
கறை ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற - தேவா-சுந்:270/3
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே - தேவா-சுந்:272/2
கை ஆர் சூலத்தினாய் திரு கற்குடி மன்னி நின்ற - தேவா-சுந்:272/3
சந்து ஆர் வெண் குழையாய் சரி கோவண ஆடையனே - தேவா-சுந்:273/1
கந்து ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற - தேவா-சுந்:273/3
அரை ஆர் கீளொடு கோவணமும் அரவும் அசைத்து - தேவா-சுந்:274/1
விரை ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய் - தேவா-சுந்:274/2
சீர் ஆர் மேனியனே திகழ் நீல_மிடற்றினனே - தேவா-சுந்:275/2
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற - தேவா-சுந்:275/3
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும் - தேவா-சுந்:278/1
கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை - தேவா-சுந்:278/2
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை - தேவா-சுந்:278/3
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே - தேவா-சுந்:278/4
பொடி ஆர் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த - தேவா-சுந்:279/1
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் - தேவா-சுந்:279/2
கடி ஆர் கொன்றையனே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் - தேவா-சுந்:279/3
அடிகேள் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே - தேவா-சுந்:279/4
மறை ஆர் வானவனே மறையின் பொருள் ஆனவனே - தேவா-சுந்:280/2
இறைவா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே - தேவா-சுந்:280/4
என் தாதை பெருமான் எனக்கு ஆர் துணை நீஅலதே - தேவா-சுந்:281/4
ஆரா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே - தேவா-சுந்:282/4
மை ஆர் கண்டத்தினாய் மத மா உரி போர்த்தவனே - தேவா-சுந்:283/1
கை ஆர் ஆடு அரவா கடவூர்-தனுள் வீரட்டத்து எம் - தேவா-சுந்:283/3
ஐயா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே - தேவா-சுந்:283/4
அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே - தேவா-சுந்:284/4
எரி ஆர் புன் சடை மேல் இள நாகம் அணிந்தவனே - தேவா-சுந்:285/1
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் - தேவா-சுந்:285/3
அரியாய் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே - தேவா-சுந்:285/4
காறு ஆர் வெண்மருப்பா கடவூர் திரு வீரட்டத்துள் - தேவா-சுந்:286/3
ஆறு ஆர் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீஅலதே - தேவா-சுந்:286/4
ஆறு ஆர் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீஅலதே - தேவா-சுந்:286/4
அயனே என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே - தேவா-சுந்:287/4
அடிகேள் உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே - தேவா-சுந்:320/4
கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகா - தேவா-சுந்:322/3
மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும் - தேவா-சுந்:324/1
கை ஆர் வளை காடுகாளோடும் உடனாய் - தேவா-சுந்:324/3
கொய் ஆர் பொழில் கோடியே கோயில்கொண்டாயே - தேவா-சுந்:324/4
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகை - தேவா-சுந்:329/2
பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும் - தேவா-சுந்:363/3
ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே - தேவா-சுந்:398/4
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை - தேவா-சுந்:414/1
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது - தேவா-சுந்:414/2
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் - தேவா-சுந்:414/3
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே - தேவா-சுந்:414/4
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த - தேவா-சுந்:421/3
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த - தேவா-சுந்:421/3
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் - தேவா-சுந்:427/2
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் - தேவா-சுந்:427/3
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே - தேவா-சுந்:427/4
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் - தேவா-சுந்:428/2
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் - தேவா-சுந்:428/3
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே - தேவா-சுந்:428/4
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் - தேவா-சுந்:430/1
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய் - தேவா-சுந்:430/3
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே - தேவா-சுந்:430/4
கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே - தேவா-சுந்:433/1
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர்
  துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் - தேவா-சுந்:433/2,3
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் - தேவா-சுந்:433/3
எரி தலை பேய் புடை சூழ ஆர் இருள் காட்டிடை - தேவா-சுந்:449/2
சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி - தேவா-சுந்:479/3
வேங்கூர் உறைவாய் விளமர்நகராய் விடை ஆர் கொடியானே - தேவா-சுந்:483/2
முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி-தனை - தேவா-சுந்:524/2
அறிவே அழிந்தேன் ஐயா நான் மை ஆர் கண்டம் உடையானே - தேவா-சுந்:533/2
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் - தேவா-சுந்:535/3
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா - தேவா-சுந்:536/1
மரு ஆர் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலை போல - தேவா-சுந்:540/1
கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர் - தேவா-சுந்:541/2
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் - தேவா-சுந்:543/3
பிறை ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே - தேவா-சுந்:543/4
கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக - தேவா-சுந்:544/1
திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார் - தேவா-சுந்:545/3
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர் கடவூர் உறை வாணர் - தேவா-சுந்:546/1
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார் - தேவா-சுந்:546/2
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து - தேவா-சுந்:547/2
பீடு ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே - தேவா-சுந்:547/4
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த - தேவா-சுந்:564/3
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார் பெறும் ஆர் அருள் கண்டு - தேவா-சுந்:565/3
அறிவினால் மிக்க அறு வகை சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து - தேவா-சுந்:568/1
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை - தேவா-சுந்:570/2
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை - தேவா-சுந்:576/1
கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை - தேவா-சுந்:576/2
கொல்லை வல் அரவம் அசைத்தானை கோலம் ஆர் கரியின் உரியானை - தேவா-சுந்:579/2
பிழைத்து ஒரு கால் இனி போய் பிறவாமை பெருமை பெற்றேன் பெற்றது ஆர் பெறுகிற்பார் - தேவா-சுந்:596/2
கோட்டக புனல் ஆர் செழும் கழனி கோலக்காவினில் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:637/4
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:641/4
பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க - தேவா-சுந்:661/2
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே - தேவா-சுந்:661/4
சிமயம் ஆர் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே - தேவா-சுந்:663/4
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் - தேவா-சுந்:687/1
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி - தேவா-சுந்:703/1
அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே - தேவா-சுந்:709/4
அண்ணலே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே - தேவா-சுந்:710/4
அப்பனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே - தேவா-சுந்:711/4
அதிபனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே - தேவா-சுந்:712/4
அந்தணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே - தேவா-சுந்:713/4
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள் - தேவா-சுந்:714/3
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே - தேவா-சுந்:714/4
ஐயனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே - தேவா-சுந்:715/4
ஆதியே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே - தேவா-சுந்:716/4
ஆனையே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே - தேவா-சுந்:717/4
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி - தேவா-சுந்:753/1
இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி - தேவா-சுந்:759/2
கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல் - தேவா-சுந்:760/3
அழகு ஆர் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ - தேவா-சுந்:784/4
மை ஆர் தடங்கண்ணாள் மடமொழியாள் புனம் காக்க - தேவா-சுந்:805/1
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் - தேவா-சுந்:813/2
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள் - தேவா-சுந்:821/1
சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை - தேவா-சுந்:821/2
மறை ஆர் புகழ் ஊரன் அடித்தொண்டன் உரைசெய்த - தேவா-சுந்:821/3
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம் - தேவா-சுந்:835/3
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல் - தேவா-சுந்:836/2
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை - தேவா-சுந்:854/1
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் - தேவா-சுந்:855/1
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து - தேவா-சுந்:857/1
தண் ஆர் மா மதி சூடி தழல் போலும் திரு மேனிக்கு - தேவா-சுந்:874/1
எண் ஆர் நாள் மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் - தேவா-சுந்:874/2
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர் - தேவா-சுந்:874/3
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர் - தேவா-சுந்:877/3
கருமை ஆர் தருமனார் தமர் நம்மை கட்டிய கட்டு அறுப்பிப்பானை - தேவா-சுந்:916/1
பெருமை ஆர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே - தேவா-சுந்:916/4
படை ஆர் மழுவன் பால் வெண்நீற்றன் - தேவா-சுந்:928/1
விடை ஆர் கொடியன் வேத நாவன் - தேவா-சுந்:928/2
ஊன் ஆர் உடை வெண் தலை உண் பலி கொண்டு - தேவா-சுந்:948/1
ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம் - தேவா-சுந்:948/2
வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய் - தேவா-சுந்:948/3
தேன் ஆர் நறையூர் சித்தீச்சரமே - தேவா-சுந்:948/4
பாண் ஆர் குழலும் முழவும் விழவில் - தேவா-சுந்:951/3
சேண் ஆர் நறையூர் சித்தீச்சரமே - தேவா-சுந்:951/4
போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும் - தேவா-சுந்:953/1
சீர் ஆர் நறையூர் சித்தீச்சரத்தை - தேவா-சுந்:953/2
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே - தேவா-சுந்:953/4
தூமம் விசும்பு ஆர் சோற்றுத்துறையே - தேவா-சுந்:961/4
அற இலகும் அருளான் மருள் ஆர் பொழில் வண்டு அறையும் - தேவா-சுந்:986/3
அரியன முப்புரங்கள் அவை ஆர் அழல் மூட்டல் என்னே - தேவா-சுந்:1013/2
இந்திரன் மால் பிரமன் எழில் ஆர் மிகு தேவர் எல்லாம் - தேவா-சுந்:1025/1
மந்திர மா முனிவர் இவன் ஆர் என எம்பெருமான் - தேவா-சுந்:1025/3
தேர் ஆர் வீதி தென் நாகை திரு காரோணத்து இறையானை - தேவா-சுந்:1037/1
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன் - தேவா-சுந்:1037/2
வார் ஆர் முலையாள் உமை_கணவன் மதிக்க இருப்பார் வானகத்தே - தேவா-சுந்:1037/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *