Skip to content

ஐவாந்தழை

சொல் பொருள்

மருதோன்றி நெல்லை வட்டாரத்தில் ஐவாந்தழை என வழங்கப்படுகின்றது

சொல் பொருள் விளக்கம்

மகிழ்வாக வாழும் வாழ்வின் அடையாளங்களுள் ஒன்று மருதோன்றி அரைவை பூசி கால், கைகளைச் சிவப் பேற்றல். இனிய வாழ்வின் அடையாளமாகக் கொள்வதால் மருதோன்றி நெல்லை வட்டாரத்தில் ஐவாந்தழை என வழங்கப்படுகின்றது. ஐ = அழகு. வாழும் என்பதில் ‘ழு’ மறைந்து விட்டது. வீழ்வு – வீவு என்றும், வாழ்வரசி, வாவரசி என்றும் வழங்கப்படுவதை நோக்கலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *