Skip to content

கஞ்சிதண்ணீர்

சொல் பொருள்

கஞ்சி – நீராளமாகக் காய்ச்சப் பெற்ற பொறுக்கும் நீரும்.
தண்ணீர் – சோற்றில் விட்டு வைத்துக் காடியான நீர்.

சொல் பொருள் விளக்கம்

கஞ்சி, அன்னப்பால் எனப்படும். “அன்னப்பால் காணாத ஏழைகட்கு நல்ல ஆவின்பால் எங்கே கிடைக்குமம்மா?” என்பது வறுமையர் வினா? கஞ்சிப்பசை, கஞ்சிக் கலயம், கஞ்சித்தொட்டி என்பவை எவரும் அறிந்தவை. ‘கஞ்சியை அன்னசாரக் கஞ்சி’ என்றும் மருத்துவர் சுட்டுவர்.

தண்ணீர் என்பது சோற்றுத் தண்ணீர் ; நீற்றுத் தண்ணீர் என்பதும் அது. புளிப்புமிக்கதாகலின் அது ‘காடி’ எனவும் படும். “காடிக் கஞ்சியானாலும் மூடிக் குடி” என்பது பழமொழி. “கஞ்சி தண்ணிக்கு வழியில்லை” என்பது வறுமை ஒலி.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *