Skip to content

சொல் பொருள்

(பெ) புற்றாஞ்சோறு,

சொல் பொருள் விளக்கம்

சங்க இலக்கியத்தில் குரும்பியைப்பற்றி நான்கு குறிப்புகள் உள்ளன. இவை நான்கிலும் குரும்பி என்பது
புற்றுகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவற்றில் இரண்டு குறிப்புகள் இந்தப் புற்றில் பாம்பு
இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றின் ஒன்று இது ஈசல் புற்று என்று தெளிவாகக் கூறுகிறது.
மேலும், மூன்று குறிப்புகள், இந்தக் குரும்பியைக் கரடிகள் விரும்பி உண்ணும் என்றும் கூறுகின்றன.
கரடிகளின் உணவான இந்தக் குரும்பியைப் பற்றி நாம் அறியும் செய்திகள் இவை:

Black Bears dig up ant colonies, .. to consume their pupae and larvae (collectively known as brood).
In Summer, ant pupae and larvae become abundant. Ant brood is a major food from late spring until
mid to late summer. Ants undergo complete metamorphosis, much like that of butterflies,
where they pass from egg to larva to pupa before maturing into an adult ant.
Bears consider this as a top favorite food source and is a huge part of their diet at this time of year.

தேன்கூட்டைப் போன்ற ஓர் அமைப்பில் இராணிக் கறையான்கள் ஆயிரக்கணக்கில் முட்டையிடுகின்றன.
இந்த முட்டைகள் புழுவாக மாறி (larva), பின்னர் கூட்டுப்புழுவாக (pupa) மாறி, பின்னர் ஈசல்களாக மாறுகின்றன.
இந்த முட்டைகளும், முட்டைப்புழுக்களும், கூட்டுப்புழுக்களும் சேர்ந்த கலவையே குரும்பி எனப்படுகிறது.
இதுவே நம் மக்களால் புற்றாஞ்சோறு என்றும் அழைக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

comb of white ants’ nest

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇ – பெரும் 277-278

பாம்பு வாழும் புற்றிலிருக்கும் புற்றாம்பழஞ் சோற்றை ஒக்கும்,
பொலிவுள்ள புறத்தினையுடைய நல்ல (நெல்)முளையை (அதில்)கலந்து….

முளை கட்டின அரிசியைப் போல் இருக்கும் இந்தக் குரும்பி என்கிறது இது. அடை என்பது முளை.

ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை
தூங்கு தோல்துதிய வள் உகிர் கதுவலின்
பாம்பு மதன் அழியும் – அகம் 8/1-4

ஈசல்களையுடைய புற்றின் குளிர்ந்த மேல்பாகத்தில் தங்கிய
புற்றாஞ்சோற்றை உணவாகக் கொண்ட பெரிய கையை உடைய ஆண்கரடியின்
தொங்கும் தோல் உலுறைக்குள் பொருந்தியிருக்கும் கூர்மையான நகம் பற்றிக்கொள்வதால்
பாம்பு தன் வலிமையை இழக்கும்

குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை – அகம் 72/5

கெண்டுதல் என்பது தோண்டியெடுத்தல்.

பெரும் கை எண்கு இனம் குரும்பி தேரும் – அகம் 307/10

எண்கு என்பது கரடி.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *