Skip to content

சொல் பொருள்

1 (வி.மு) கலங்கவேண்டாம்,

2. (பெ) மயக்கம், மனக்கலக்கம்,

சொல் பொருள் விளக்கம்

‘அலமரல்’ ‘தெருமரல்’ ‘உழலுதல்’ என்னுஞ்சொற்கள், குற்றவாளிகளைச் சக்கரத்திலிட்டுச்
சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும். (சொல். கட். 25.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

do not be perturbed

giddiness, perplexity

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தெருமரல் வாழி தோழி நம் காதலர்
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர்
செரு மேம்பட்ட வென்றியர்
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/22-25

கலங்கவேண்டாம், வாழ்க, தோழியே!, நம் காதலர்
போரிட்டு எதிர்த்து நிற்கும் யானைப்படையுடன் போரினை எதிர்கொண்டு எழுந்துவந்த பகைவருடனான
போரில் மேலான ஆற்றல்காட்டி வெற்றிசூடியவராய்த்
திரும்பி வருகிறார் என்று வந்து கூறுகின்றனர் அவர் செய்தியைத் தாங்கிவரும் தூதுவர்.

தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்_வயின்
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/7,8

மனக்கலக்கமுள்ள உள்ளத்தோடு வருந்தும் உன்னிடத்தில்
நீங்குவாயாக என்று யான் எங்ஙனம் மொழிவேன்?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *