Skip to content
பூளை

பூளை என்பது ஒரு செடி வகை, அதன் பூ.

1. சொல் பொருள்

(பெ) 1. ஒரு செடி வகை, அதன் பூ, பேப்பூளை, குரீஇப்பூளை, தேங்காய்ப்பூக் கீரை, சிறுபீளை, பூளாப்பூ, பூளைப்பூ (பீளைப்பூ), பொங்கப்பூ, சிறுகண்பீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதிகண்பீளை, பூலாச்செடி, கண்ணுப்பீளை, சுண்ணாம்புக் கீரை, 2. இலவம்பஞ்சு

2. சொல் பொருள் விளக்கம்

பொங்கல் திருநாளில் காப்புக் கட்டுதல் முதலான சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் பூளாப்பூ

இதன் இலைகளுக்கு இடையில் சிறுசிறு வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். இலை, தண்டில் வெள்ளை நிற ரோம வளரிகள் காணப்படும். கற்களைக் கரைக்கும் ஆற்றல் உடையதால் கற்பேதி என்றும், கண்களிலிருந்து வெளியாகும் பீளைபோல இதன் பூக்கள் இருப்பதால் கண்பீளை என்றும் பெயர் உருவாயின

ஒருவர் நோயுற்ற கண்ணினராக இருந்தால், தூங்கும்போது அவரின் கண்களில் ஒருவித வெண்மையான பசை சுரக்கும். அது கண்களின் ஓர இடுக்குகளின் வழியாகப் பிதுக்கிக்கொண்டு ஒரு சிறு வெண்மையான உருண்டையாகத் தெரியும். அதனை இப்போது பீளை என்பர். அதுவே பூளை எனப்படும்.

முற்றின இலவங்காய் வெடித்து, அந்த வெடிப்புகளின் வெளியே வெண்பஞ்சு உருண்டையாக பிதுக்கிக்கொண்டு தெரியவரும். அதனை இங்கு பூளை என்கிறார் பெரும்பாணாற்றுப் புலவர்.

பூளை
பூளை

மொழிபெயர்ப்புகள்

മലയാളം: ചെറൂളрусский: Эрва шерстистаяසිංහල: පොල්පලාதமிழ்: பூளைతెలుగు: పిండిదొండ中文: 绵毛白毛苋中文(简体): 绵毛白毛苋中文(繁體): 綿毛白毛莧

mountain knot-grass, woolly aerva, woolly illecebrum • Bengali: ছায়া chaya • Hindi: छाया chaya, गोरखबूटी gorakhbuti, गोरखगांजा gorakhganja, कपूरीजड़ी kapurijadi, खली khali, खरी khari • Kannada: ಬಿಳಿ ಹಿಮ್ಡಿ ಸೊಪ್ಪು bili himdi soppu • Konkani: तांडलो tamdlo • Malayalam: ചെറൂള cherula • Marathi: कापूरमाधुरी kapurmadhuri • Punjabi: bui-kaltan • Rajasthani: भूई bhui • Sanskrit: अश्मःभेदः ashmahabhedah, भद्र bhadra, गोरक्षगञ्जा gorakshaganja, पाषाणभेद pashanabheda, शतकभेदी shatakabhedi • Sindhi: bhui, jari • Sinhalese: polpala • Tamil: சிறுபூளை ciru-pulai, உழிஞை ulinai • Telugu: పిండిదొండ pindidonda

desert cotton, Javanese wool plant, kapok bush, pillow-weed, snow bush • Gujarati: બૂર bour • Hindi: सफेद बूई safed bui • Kachchhi: બૂર bour • Kannada: ದೊಡ್ಡ ಹಿಂಡಿ ಗಿಡ dodda hindi gida • Marathi: कल kal, खुल khul • Rajasthani: बूई bui • Tamil: சிமிலி cimili, பெரியபூளை periya-pulai • Telugu: మగబీర magabira, పెద్ద పిండి pedda pindi, పిండి కొండ pindi konda

பூளை
பூளை

3. ஆங்கிலம்

Aerua lanata, mountain knotgrass, Aerua javanica, kapok bush, desert cotton, Javanese wool plant,

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பூளாப்பூ
பூளாப்பூ
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன
வரி புற அணில்லொடு கருப்பை ஆடாது – பெரும் 83-85

நீண்ட தாளினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்பு காய்த்த
பஞ்சினையுடைய அழகிய பசிய காயின் முதுகு விரிந்து தோன்றினதைப் போன்ற
வரியை முதுகிலே உடைய அணிலோடு, எலியும் திரியாதபடி,

wool plant, aerua எனப்படும் இந்தச் செடிவகை தமிழில் பூளை எனப்படுகிறது. கண்களின் ஓரங்களில்
படியும் பீளை என்ற ஒருவித வெண்ணிறக் கழிவுப்பொருளே பூளை. இது பூளைப்பூவைப் போல் இருப்பதால்
இப்பெயர் பெற்றது எனலாம். பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தப் பூ சிறுசிறு உருண்டைகளால் ஆனது. ஒவ்வொரு உருண்டையும் மிகச்சிறிய வெண்மையான கடுகுபோன்ற பொருளால் ஆனது. எனவே இதனை வரகரிசிச் சோறுக்கு உவமிக்கிறார் பெரும்பாணாற்றுப்படைகாரார்

நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 192,193

நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை

இதன் சிறுதன்மையை நோக்கி, இதனைக்

குரீஇப்பூளை

என்கிறது மதுரைக்காஞ்சி (அடி 72)

பகைவரின் கோட்டை மதிலை வளைத்துப் போரில் ஈடுபடுவோர் உழிஞைப் பூவோடு
பூளைப் பூவையும் சேர்த்துக் கட்டி அணிந்துகொள்வர் என்கிறது பட்டினப்பாலை.

வேறு பல் பூளையொடு உழிஞை சூடி
————————- ————————————
முனை கெட சென்று முன் சமம் முருக்கி – பட் 235-238

(சிறுபூளை,பெரும்பூளையாகிய)பலவாகிய பூளைகளோடே, உழிஞையைச் சூடி,
—————————————- ——————————————————
பகைப்புலம் கெடும்படி சென்று, முன்னால் நிற்கும் தூசிப்படையை அழித்து
இது வறண்ட வெட்டவெளியில் வளரும் என்கிறது புறநானூறு.

பூளை நீடிய வெருவரு பறந்தலை – புறம் 23/20

வேறு பல் பூளையொடு உழிஞை சூடி – பட் 235

என்கிற அடியால் பூளையில் பல்வேறு வகை உண்டு என அறிகிறோம். அவற்றைப் படத்தில் காண்க.
கண்பீளை
கண்பீளை
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி - பட் 235

பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன - பெரும் 84

நெடும் குரல் பூளை பூவின் அன்ன - பெரும் 192

அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து - கலி 138/9

பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற - கலி 138/18

பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த - கலி 140/4

பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை - அகம் 297/14

பூளை நீடிய வெருவரு பறந்தலை - புறம் 23/20

வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய - அகம் 199/10

கோடை பூளையின் வாடையொடு துயல்வர - அகம் 217/5
பொங்கப்பூ
பொங்கப்பூ
சொரிதரு பூளை ஒத்திடுவர் சொல்லினே - சீறா:1814/4

சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும் - சீறா:4210/3

சேடல் நெய்தல் பூளை மருதம் - மது:22/69

பூளை மெல் அணை மேல் புரளும்-கொலோ - சிந்தா:7 1628/4

தீயின் முன் பூளை போலும் திடனின் முன் பொய்யும் போலும் - தேம்பா:14 117/2

வீயினின் பூளையின் நொய்ய மெய் உடை - தேம்பா:9 102/1

பூளையின் நொய் அம் குரம்பையர் பிறழா புதவு எரி புதைத்து வெந்து எரிவார் - தேம்பா:28 90/4
கண்ணுப்பீளை
கண்ணுப்பீளை
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் - தேவா-சுந்:407/1

பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை - தேவா-சம்:2039/3

புற்றின் நாகமும் பூளையும் வன்னியும் - தேவா-சம்:3258/1

பூளை பூவாம் பிறவி பிணிப்பு ஒழிய போவாராய் - 4.மும்மை:4 22/2

காற்றிடை பூளை கரந்தென அரந்தை உற கடல் அரக்கர் தம் சேனை - நாலாயி:1343/1

வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த சடை திரு - திருப்:113/9

சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே சரவணபவா முகுந்தன் மருகோனே - திருப்:122/3

விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடு அதி பார - திருப்:245/6

அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே - திருப்:648/7

அரவொடு பூளை தார் மதி அறுகொடு வேணி சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே - திருப்:730/8

செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல் - திருப்:979/15

பூளை எருக்கு மதி நாக பூணர் அளித்த சிறியோனே - திருப்:1294/3

யாரும் வெடி பூளை வனம் என்ன ஒருதானே - வில்லி:29 54/3

பூளை மெல் அணை பொதி அவிழ்ந்து அன்ன - உஞ்ஞை:40/333

புடை இடு பூளை பூ புறம் மடுத்து - உஞ்ஞை:56/19

கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும் - உஞ்ஞை:43/186

கிடையும் பூளையும் இடை வரி உலண்டும் - வத்தவ:12/42

பொங்கு கோபம் சுட பூளை வீ அன்ன தன் - பால:7 1/3

பூளை வீ புரை பனி புயற்கு தேம்பிய - பால:10 47/2

பூளை சூடி தன் நகையினில் எயில் பொடிந்தன போல் - பால-மிகை:9 35/2

வீறிய பொழுது பூளை வீ என வீவன் அன்றே - ஆரண்:12 59/4

பூளை வீய்ந்து அன்ன போவன புணரியில் புனல் மீன் - சுந்:13 25/3

பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு - யுத்2:15 255/2

பூளை போன்றது அ பொரு சினத்து அரிகள்-தம் புணரி - யுத்4:32 17/4

பூளையே சூடுவானை பொருவும் மா முனிவன் போனான் - யுத்4-மிகை:42 22/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *