Skip to content
பேரியாறு

பெரியாறு அல்லது பேரியாறு என்பது இன்றைய கேரள மாநிலத்தின் மிகவும் நீளமான ஓர் ஆறு ஆகும்.

1. சொல் பொருள்

(பெ) 1. பெரிய ஆறு, பேராறு, 2. சேரநாட்டிலுள்ள பெரியாறு எனப்படும் ஆறு, 

2. சொல் பொருள் விளக்கம்

பேரி என்றால் முரசு வெற்றி முரசுபோல் ஆர்ப்பரித்தபடி பாயும் ஆறு,

பெரியாறு அல்லது பேரியாறு என்பது இன்றைய கேரள மாநிலத்தின் மிகவும் நீளமான ஓர் ஆறு ஆகும். இது தமிழகத்திலுள்ள சிவகிரி மலையின் சுந்தரமலை பகுதியில் உற்பத்தியாகிறது. இதற்கு சூர்ணியாறு என்று வடமொழிப் பெயரும் ஒன்று உள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பேரியாற்றை பெரியாறு எனும் ஒலிக்குறிப்போடு அழைத்தும், எழுதியும் வந்ததால் தற்காலத்தில் இது பெரியாறு என அழைக்கப்படுகின்றது.

பேரியாறு
பேரியாறு

முல்லைப் பெரியாறு அணை அல்லது முல்லைப் பேரியாறு அணை (Mullaiperiyar Dam) மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.

இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Periyar, (meaning: big river) is the longest river and the river with the largest discharge potential in the Indian state of Kerala, a mighty river,

the river Periyar in kerala.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பேரியாறு
பேரியாறு

பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் – அகம் 35/16

கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகம் 62/9,10

அத்தம் நீளிடைப் போகி நன்றும்
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன் வாழியென் நெஞ்சே சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ – அகநானூறு. 149-7

கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு – மது 696

மாற்றரும் தெய்வத்து கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு
வருநர் வரையா செழும் பல் தாரம் – பதி 88/24-26

மாற்றுதற்கரிய தெய்வமாகிய கொற்றவை கூடியிருக்கும் மலையாகிய அயிரையிடத்தே தோன்றிய
நீர் நிறைந்த பெரிய ஆறானது இறங்கி வந்தாற் போன்ற
நின்னை நோக்கி வரும் இரவலர்க்கு வரையாது வழங்கும் செழுமையாய்ப் பலவாகிய பொருள்கள்

பேரியாறு
பேரியாறு

நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று
சீர் உடை வியன் புலம் – பதி 28/10,11

கரையளவும் உயர்ந்து நீர் பெருகி வழிந்து இழியும் அகன்ற இடத்தையுடைய பேரியாறு பாயும்
சிறப்புப்பொருந்திய அகன்ற புலத்தில்

மேலே குறிக்கப்பட்டுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் அடிகள் இந்தப் பேரியாற்றின் பெயரையோ, இடத்தையோ குறிப்பிடவில்லை. இப்பாடல் சேரமான் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கோதமனார் பாடியது. எனவே, இது இன்றைய கேரளத்தில் உள்ள பெரியாறு என அழைக்கப்படும் ஆறாக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.:

நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப – சிலப்பதிகாரம். (காட்சிக்காதை. 21-23)

பெரியாறு
பேரியாறு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *