Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு சேர மன்னன், 

சொல் பொருள் விளக்கம்

ஒரு சேர மன்னன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a chera king

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே – புறம் 22/34

மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாதுகாத்த நாடு

இவனது முழுப்பெயர் சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இவன் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவனின் மகன். சேரமான் கடுங்கோ வாழியாதன் இவனின் மூத்த உடன் பிறந்தோன் இவன், கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டவன். யானை போலப் பெருமித நோக்கு உடையவன் ஆதலால் இவனை ‘யானைக்கட் சேய்’ என்றனர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இவனைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான். குழியில் விழுந்த யானை குழியை இடித்துக்கொண்டு ஏறி வந்தது போல இந்தப் பொறையன் சிறையைத் தகர்த்துக்கொண்டு தன் நாட்டுக்கு வந்து அரசனானானாம். இவன் கொடைமுரசு முழக்கிப் இரவலர்களை வரவழைத்துப் பரிசில் நல்குவானாம் (புறம் 17).

புறநானூற்றில் பாடப்பட்டிருக்கும் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (புறம் 50), சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை (புறம் 210,211), சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (புறம் 53), சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (புறம் 125), கோச்சேரமான் சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (புறம் 220), சேரமான் கோக்கோதை மார்பன் (புறம் 48,49 ), சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை (புறம் 5) ஆகிய அனைத்துப் பெயர்களும் இவன் ஒருவனையே குறிக்கும் என்பர் (பேரா.சாலமன் பாப்பையா – புறநானூறு புதிய வரிசை வகை – பக்.31)


குறுங்கோழியூர் கிழார் (புறம் 17,20,22), பேரிசாத்தனார் (புறம் 125), பொருந்தில் இளங்கீரனார் (புறம் 53), கூடலூர் கிழார் (புறம் 229) ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *