Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககாலத்து ஊர்

சொல் பொருள் விளக்கம்

ஒரு சங்ககாலத்து ஊர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a city in sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முள்ளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரி என்னும் காரி. இவன் பெண்ணை அம்
படப்பை நாடு கிழவோன் எனப் புறப்பாடல் 126 குறிக்கிறது. எனவே முள்ளூர் பெண்ணையாற்றுப் படுகையிலுள்ளது
எனப்பெறப்படும்.

ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடி ஆங்கு – நற் 170/6-8

ஆரியர்கள் ஒன்று கூடிய பெரும் புகழ் படைத்த முள்ளூர்ப் போர்க்களத்தில்
பலருடன் உருவிய வாளுடன் வந்த ஒளிவிளங்கும் வாட்படை, மலையனது
ஒரு வேற்படைக்குத் தோற்றோடியதைப் போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *