Skip to content

விழுந்து எழுதல்

சொல் பொருள்

விழுந்து எழுதல் – வறுமைப்பட்டு வளமையாதல்

சொல் பொருள் விளக்கம்

கீழே விழுதலும், விழுந்தவர் காலூன்றியும் கையூன்றியும் எழுதலும் வழக்கே. இவ்வழக்கில் இருந்து பொருள் நிலையில் வீழ்ச்சியடைதல் விழுதலாகவும், பின்னர் அரிதின் முயன்று தேடி நிலை பெறுதல் எழுதலாகவும் சொல்லப்பட்டனவாம். “விழுந்தவன்தான்; மேலும் மேலும் விழுந்தானே அன்றி எழுந்தபாட்டைக் காணோம்” என்பது ஏக்கவுரை. “விழுந்தானா? எழுந்தானா? மாயமாக நடந்துவிட்டது” என்பது வியப்புரை.

இது ஒரு வழக்குச் சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *