Skip to content

வெங்காயம் (வெண்காயம்)

சொல் பொருள்

வெங்காயம் (வெண்காயம்) – ஒன்றும் இல்லாதது

சொல் பொருள் விளக்கம்

வெங்காயம் என்பது வசைமொழி “அவன் கிடக்கிறான் வெங்காயம்” “அந்த வெங்காயம் என்னதான் செய்துவிடுவான்” என்பன போல வெங்காயம் வழக்கில் உள்ளன. உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது – தோலாகவே இருப்பது – வெண்காயமாம். அதனால் ஒன்றும் இல்லாதது என்னும் பொருளில் வழங்கிற்றாம். ‘உள்ளி’ என்பது அதன் பெயர். உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லாதது ‘உள்ளில்’ என்றாய் ‘உள்ளி’ என வழக்கிலுள்ளதாம்.

இது ஒரு வழக்குச் சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *