Skip to content

சொல் பொருள்

தயநாத்து என்பது கெஞ்சுதல் – மன்றாடுதல் – பொருளது.

சொல் பொருள் விளக்கம்

“உன் தயநாத்துக்கெல்லாம் நான்மசிய மாட்டேன்” என்பது நெல்லை வழக்கு. தயநாத்து என்பது கெஞ்சுதல் – மன்றாடுதல் – பொருளது. நாற்று – நாத்து என்றாதல் வழக்கு. தயை – தயவு – தய என நின்றது. நாறுதல் என்பது முளைத்தல்; வெளிப்படுதல் தயவு ஏற்பட நீ கெஞ்சினாலும் நான் உதவ மாட்டேன் என்பது பொருளாம். மசிதல் என்பது குழைவு கொள்ளல் பொருளது. மசித்தல்=கடைதல்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *