Skip to content

தும்பைக் காலி

சொல் பொருள்

உவமை வகையால் சலவையைக் குறித்த தும்பை சலவை செய்வாரைக் குறிப்பதாகத் ‘தும்பைக் காலி’ எனப்பட்டது

சொல் பொருள் விளக்கம்

தும்பைப் பூ நல்ல வெண்ணிறமானது. “சலவை தும்பைப் பூப் போல உள்ளது” என்பது பாராட்டு மொழி. உவமை வகையால் சலவையைக் குறித்த தும்பை சலவை செய்வாரைக் குறிப்பதாகத் ‘தும்பைக் காலி’ எனப்பட்டது. இது, திண்டுக்கல் வட்டார வழக்கு. ஏகாலி எனச் சலவையரைச் சொல்லுவதில் உள்ள ‘காலி’ தும்பையொடு ஒட்டப்பட்டுள்ளது. ஏகாலி என்பது எழுகாலி என்பதன் பிழைவடிவு. அவர்கால் இரண்டு; கழுதைகால் நான்கு; கவைக் கொம்பின் கால் ஒன்று; ஆக ஏழுகால் என்பர். ஏகாலி நெல்லை, முகவை வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *