Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மாலை, 2. இலை, தழை, 3. இலை, தழைகளாலான படல், தட்டி, 4. பல மலர்களாலான கதம்பம்

சீப்பு

படர்ந்து அமைந்தது, படலை.

பச்சிலையோடு மலர் விரவித் தொடுத்த மாலை

சொல் பொருள் விளக்கம்

படலை என்பது சீப்பு என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. முடி காற்றில் எழும்பாமல் படிவாக இருக்க மகளிர் தம் கூந்தலில் சீப்பைச் சொருகுதல் வழக்கம். அவ் வழக்கத்தில் இருந்த படலை என்பது ஏற்பட்டிருக்கும். படர்ந்து அமைந்தது, படலை.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

garland, foliage

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வண் சினை கோங்கின் தண் கமழ் படலை
இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்ப – ஐங் 370/1,2

வளமுள்ள கிளைகளையுடைய கோங்க மரத்தின் மலரால் செய்த குளிர்ந்த மணங்கமழும் மாலையை,
கரிய சிறகினைக் கொண்ட வண்டின் பெருங்கூட்டம் மொய்க்க,

படலை பந்தர் புல் வேய் குரம்பை – அகம் 87/3

இலைதழைகளால் ஆகிய பந்தலையுடைய புல்லால் வேயப்பட்ட குடில்கள்

உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார் – புறம் 325/7,8

அறுத்தெடுத்த உடும்பின் தசையை, ஒடு மரத்தின் வலிய கால்களால் செய்யப்பட்டு
மேலே இலைதழைகளாலான படல் சார்த்தப்பட்ட
சிறிய மனையின் முற்றத்தில் கூறுபோடுமாறு

ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 172-175

உயர்கின்ற உச்சிகளிலுள்ள
கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய
பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும்,
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்

பல பூக்கள் கலந்து தொடுக்கப்பட்ட படலை மாலையைக் கண்ணியாக இடையர்கள்/கோவலர்கள்
தங்கள் தலையிலும், நீத்தோருக்கும் சூடிக்கொள்ளும் செய்தியைப் பிறகுறிப்புகளாலும் அறிகிறோம்.

பல் ஆன் கோவலர் படலை கூட்டும் – ஐங் 476/3

ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து
பல் ஆன் கோவலர் படலை சூட்ட
கல் ஆயினையே கடு மான் தோன்றல் – புறம் 265/2-5

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *