Skip to content

பாழி என்பது ஓர் சங்க காலத்து ஊர்

1. சொல் பொருள்

(பெ) சங்க காலத்து ஓர் ஊர்

2. சொல் பொருள் விளக்கம்

சங்க காலத்து ஓர் ஊர்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a city in sangam period

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பாழி என்பது ஏழில்மலைப்பகுதியை ஆண்ட கொண்கான நன்னன் என்பானது ஊரில் இருந்த நகரம்.
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் என்ற அடியால், இது ஏழில்மலையில் இருந்த ஒரு கோட்டை நகரம்
என்பது பெறப்படும்.

பாழி அன்ன கடி உடை வியல் நகர் – அகம் 15/11

கறை அடி யானை நன்னன் பாழி – அகம் 142/9,10

ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் – அகம் 152/13

அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை – அகம் 208/6

நன்னன் உதியன் அரும் கடி பாழி – அகம் 258/1

அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் – அகம் 372/3

யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞ்லியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது – அகம் 396/3-6

நன்னன் என்பானுக்காக ஆஅய் எயியன் பாழியின்கண் மினிலியொடு பொருது உயிர் துறந்தான் என்பது
இதனால் பெறப்படும்.

எழாஅ திணி தோள் சோழர் பெருமகன்
விளங்கு புகழ் நிறுத்த இளம்பெரும் சென்னி
——————- ———————
செம்பு உறழ் புரிசை பாழி நூறி – அகம் 375/10- 13

என்ற அடிகளால் இந்தக் கோட்டை நகரம் சோழன் இளம்பெரும் சென்னியால் வென்று அழிக்கப்பட்டது
என்பது பெறப்படும்.

பாழி அன்ன கடி உடை வியல் நகர் - அகம் 15/11
கறை அடி யானை நன்னன் பாழி/ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய் - அகம் 142/9,10
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் - அகம் 152/13
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை - அகம் 208/6
நன்னன் உதியன் அரும் கடி பாழி/தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த - அகம் 258/1,2
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் - அகம் 372/3
செம்பு உறழ் புரிசை பாழி நூறி - அகம் 375/13
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் - அகம் 396/3

பாழி போல் மாயவன் தன் பற்றார் களிற்று எறிந்த - திணை150:97/1
பாழி தோள் வட்டித்தார் காண்பாம் இனிது அல்லால் - பழ:338/3

பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர் பாழி வந்து அடைந்த பொழுதே - தேம்பா:5 146/2
பாசு அலம் புரி பாழி பற்றிய பள்ளி பண்பொடு வீங்கினான் - தேம்பா:10 134/3

பணை ஓம்பு அயிலக்கின பாழியினான்
  இணையோ தவிர் யாப்பியன் எய்தினன்-ஆல் - தேம்பா:15 31/3,4


பாழி மொய்ம்பினர் வெட்டிய பட்டையம் - சீறா:3903/4

பாழி வன் புயம் வலம் துடித்து உடல் உற பரிந்து - வில்லி:1 25/2
பாழி அம் புய கிரி பாண்டவன்-தனை - வில்லி:3 24/1
பாழி மேனியை வளர்த்தனன் பாவகன் பவனனும் பாங்கானான் - வில்லி:9 10/4
பாழி ஆடக வெற்பில் படர் சிரம் - வில்லி:13 35/1
பாழி அம் புய கிரி பவனன் மைந்தனை - வில்லி:32 4/3

பாழி-தொறும் இறைக்கின்ற பைம் புனலும் அல்லது வெம் பருவம்-தன்னால் - வில்லி:8 18/3

பாழி பயிற்றி நூழிலாட்டவும் - மகத:20/42

தாழா சிறப்பின் பாழியில் பயின்ற - உஞ்ஞை:37/38
சூழியின் பொலிந்தன பாழியில் பயின்றன - மகத:26/71

பயம்பும் பாழியும் இயங்குவனர் வதியும் - உஞ்ஞை:55/106
அறியா பாழியும் அறிய காட்டி - இலாவாண:9/73
பரப்பும் சுருக்கும் பாழியும் அறியான் - மகத:20/135

பாழி கொள்ளும் ஏமத்தானும் - பொருள். புறத்:17/8

பாழி தட வரை தோள் பாடலே பாடல் - வஞ்சி:29/180

பாழி நம் படை மேல் அது இ பார் எலாம் - சிந்தா:3 762/1

பாழியால் பிறரை வேண்டேம் பணிப்பதே பாணி என்றான் - சிந்தா:8 1929/4
பை புடை அல்குலாளை பாழியால் படுக்கல் உற்றே - சிந்தா:13 2665/4

பாழி மா முகட்டு உச்சி பச்சை மா - பால:6 24/3
பாழி புயம் உயர் திக்கிடை அடைய புடை படர - பால:24 11/1
பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் - அயோ:3 46/4
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா - அயோ:11 54/3
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற - அயோ:14 34/2
பரம் கிடந்த மாதிரம் பரித்த பாழி யானையின் - ஆரண்:10 93/1
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று - ஆரண்:13 2/1
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண் - கிட்:2 30/3
பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய - கிட்:7 52/3
பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே - கிட்:9 21/3
பாழி நல் நெடும் தோள் கிளர் படை கொண்டு பரவை - கிட்:12 17/2
பாழி வெம் புயத்து அரியொடும் இடபனும் படர்ந்தான் - கிட்:12 18/4
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால் - கிட்:14 69/3
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான் - சுந்:1 30/2
பாழி நல் நெடும் கிடங்கு என பகர்வரேல் பல பேர் - சுந்:2 145/1
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை - சுந்:4 110/3
பாழி தோள் நெடும் படைக்கல பதாதியின் பகுதி - சுந்:9 11/4
பாழி மா மேரு ஒத்தான் வீரத்தின் பன்மை தீர்ப்பான் - சுந்:11 13/4
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான் - சுந்:11 43/2
பாழி காட்டி அரும் பழி காட்டினாய் - சுந்:12 33/4
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை - சுந்:12 58/2
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் - சுந்:13 38/4
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த - யுத்1:1 1/3
பாழி வன் தடம் திசை சுமந்து ஓங்கிய பணை கை - யுத்1:3 3/1
பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என - யுத்1:4 4/1
கரத்தொடும் பாழி மா கடல் கடைந்துளான் - யுத்1:5 10/1
பாழி வல் நெடும் கொடும் சிலை வழங்கிய பகழி - யுத்1:6 17/1
பாழி ஆள் வயிர படி பல் முறை - யுத்2:15 38/3
பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும் - யுத்2:16 8/2
பாழி திசை நின்று சுமந்த பணை - யுத்2:18 58/2
பாழி புயம் அம்பு உருவ படலும் - யுத்3:20 70/1
படுகள பரப்பை நோக்கி பாழி வாய் மடித்து நூழில் - யுத்3:22 128/1
பாழி சிகை பரப்பி தனை படர்கின்றது பார்த்தான் - யுத்3:27 133/3
பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி - யுத்3:30 41/4
பாழி கடை நாள் விடு பல் மழை போல் - யுத்3:31 195/3
பாழி மா கடலும் வெளி பாய்ந்ததால் - யுத்4:37 195/2
பாழி துற்று அரி பற்றிய பீடமும் - யுத்4:39 4/3

ஆழ் துயரம் ஏது என்று அறிகிலேன் பாழி
   வரையோ எனும் நெடும் தோள் மன்னாவோ தின்னும் - நள:125/2,3


மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் - தேவா-சம்:1886/3
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா - தேவா-சம்:3523/1
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் - தேவா-அப்:127/3
பாழி தண் புனல் பாய் கெடில கரை - தேவா-அப்:1617/3
பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி - தேவா-சுந்:182/3
பாழி அகலும் எரியும் திரி போல் இட்டு - திருமந்:219/1
பாழி பெரியது ஓர் பள்ளி அறையே - திருமந்:594/4

நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் - 5.திருநின்ற:1 58/2
பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்து - 6.வம்பறா:1 519/3
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும் - 6.வம்பறா:1 632/1
பன்னும் பாழி பள்ளிகளும் பறித்து குளம் சூழ் கரைபடுத்து - 6.வம்பறா:4 24/3

பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி - 6.வம்பறா:1 601/2
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் - 6.வம்பறா:1 871/2

பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் - நாலாயி:380/2
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் - நாலாயி:1762/2
பத்து நீள் முடியும் அவற்று இரட்டி பாழி தோளும் படைத்தவன் செல்வம் - நாலாயி:1859/1
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ - நாலாயி:1938/2
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை - நாலாயி:2161/2
பாழி தான் எய்திற்று பண்டு - நாலாயி:2194/4
படை பரவை பாழி பனி நீர் உலகம் - நாலாயி:2317/3
பதி பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர் பாழி
  மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன் - நாலாயி:2455/1,2
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் - நாலாயி:3931/3

பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய - நாலாயி:1854/3

செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டு மடிந்து குருதி - திருப்:478/13
எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர் - திருப்:574/1
மாலியன் பாற ஒரு ஆடகன் சாக மிகு வாலியும் பாழி மரமோடு கும்பாகனனும் - திருப்:592/19
புத்தெருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை வேணியர்க்கு அருள்கூரும் - திருப்:1252/3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *