Skip to content

சொல் பொருள்

அகராதி – ஆணவன், செருக்கன்

சொல் பொருள் விளக்கம்

அகர முதலாகச் சொற்களை அமைத்துப் பொருள் கூறப் பட்டுள்ள நூல் அகராதி என்பது அனைவரும் அறியதது. அகராதி வீரமா முனிவரால் முதற்கண் செய்யப்பட்டது. எனினும் ‘அகராதி நிகண்டு’ என ஒரு நூல் அவர் காலத்திற்குச் சில நூற்றாண்டுகளின் முன்னரே வந்து விட்டது. ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் முதலியவை அகர முறையில் அமைந்தவை. அகராதி என்பது நூற்பெயராக இருக்கîம் அகராதிக்கு எப்படி ஆணவப் பொருள் வந்தது? அகராதி படித்தவன் சொல்லாற்றலுடன் விளங்கினான். அவனை வெல்லல் அரிதாக இருந்தது. அதனால் அகராதி படித்தவனோடு சொல்லாடலை விரும்பாமல் ஒதுங்கினர். பின்னர் அகராதி படித்தவன் என்பது அகராதி பிடித்தவனாக ஆகி ஆணவப் பொருளில் வழங்கலாயிற்று. அவன் பெரிய அகராதி எனப் பழிப்பாரும் உளர். பெருமைக்கு நேரிட்ட சிறுமை இது !

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *