Skip to content

இ வரிசைச் சொற்கள்

இ வரிசைச் சொற்கள், இ வரிசைத் தமிழ்ச் சொற்கள், இ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், இ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

இரவச்சம்

சொல் பொருள் கொடுப்பார் போலிருந்து பின்பு அவர் இல்லை என்றுவிட மனந்தடுமாறிச் செயலற்றுப்போம் போக்கையும் கண்டு அவ்விரப்பினை அஞ்சுதலாம். சொல் பொருள் விளக்கம் அஃதாவது ஒருவர் வறுமையுற்ற காலத்து அவ்வறுமைதானே அவரைத் தள்ளிக்கொண்டு போய்… Read More »இரவச்சம்

இரத்தல்

சொல் பொருள் ஈ என்று இரத்தல், இழிந்தோன் செயல்; சொல் பொருள் விளக்கம் ஈ என்று இரத்தல், இழிந்தோன் செயல்; தா என்று கேட்டல், ஒத்தோன் செயல்; கொடு என்று கட்டளை இடுதல், உயர்ந்தோன்… Read More »இரத்தல்

இரட்டைக்கிளவி

சொல் பொருள் இலை இரட்டையும், பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையன சொல் பொருள் விளக்கம் இரட்டைக்கிளவி என்றது மக்கள் இரட்டை விலங்கு இரட்டை போல வேற்றுமை உடையனவற்றை அன்றி இலை இரட்டையும், பூவிரட்டையும்… Read More »இரட்டைக்கிளவி

இரக்கம்

சொல் பொருள் பிறிதோர் உயிரின் துன்பங் கண்டவழி உயிரினிடத்துத் தோன்றும் நெகிழ்ந்த ஈரம் சொல் பொருள் விளக்கம் இரக்கம் ஈர் என்னும் பகுதியின் அடியாகத் தோன்றியது. ஈர் – இரண்டு. தனக்கு வேறான, தன்னின்… Read More »இரக்கம்

இயல்பு

சொல் பொருள் இயல்பாவது பொருட்குப் பின் தோன்றாது உடன் நிகழும் தன்மை. சொல் பொருள் விளக்கம் இயல்பாவது பொருட்குப் பின் தோன்றாது உடன் நிகழும் தன்மை (தொல். சொல் 19. சேனா.)

இமயவர்

சொல் பொருள் இமய மலையில் வாழ்பவர் என்னும் காரணப் பெயர் சொல் பொருள் விளக்கம் இமய மலையில் வாழ்பவர் என்னும் காரணப் பெயர். அமச்சு – அமைச்சு என அகரத்திற்கு ஐகாரம் போலி ஆனாற்… Read More »இமயவர்

இம்மி

சொல் பொருள் மத்தங்காய்ப் புல் அரிசி; குறைந்ததோர் எண் சிற்றளவைப் பொருளாயிற்று சொல் பொருள் விளக்கம் (1) மத்தங்காய்ப் புல் அரிசி; குறைந்ததோர் எண்ணுமாம். (சீவக. 495. நச்) (2) இம்மி என்பது மிகச்… Read More »இம்மி

இதழி

சொல் பொருள் இதழி – கொன்றை சொல் பொருள் விளக்கம் இதழி – கொன்றை. அழகான இதழ்களுடன் காணப்படுவதால் கொன்றைக்கு இதழி என்றும் பெயர் உண்டு. (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 109.)

இடை எழுத்து

சொல் பொருள் இடை நிகர்த்ததாய் ஒலித்தலானும், இடை நிகர்த்ததாய மிடற்று வளியால் பிறத்தலானும் இடையெழுத்தாயிற்று. சொல் பொருள் விளக்கம் இடை நிகர்த்ததாய் ஒலித்தலானும், இடை நிகர்த்ததாய மிடற்று வளியால் பிறத்தலானும் இடையெழுத்தாயிற்று. (தொல். எழுத்து.… Read More »இடை எழுத்து