பொருநை –‘தண்பொருநை‘, ‘பொருநை‘, ‘பொருநல்‘, ‘தண் பொருத்தம்‘, ‘தாமிரபரணி‘ என இலக்கியங்களும், ‘தண்பொருந்த ஆறு‘, ‘தண் பொருத்தப் பேராறு‘, ‘முடி கொண்ட சோழப் பேராறு‘ என்று கல்வெட்டுகளும் இன்றைய தாமிரபரணி ஆற்றினைச் சுட்டுகின்றன.
சொல் பொருள்
(பெ) சேரநாட்டிலுள்ள ஓர் ஆறு, தாமிரபரணி நதி
‘தண்பொருநை‘, ‘பொருநை‘, ‘பொருநல்‘, ‘தண் பொருத்தம்‘, ‘தாமிரபரணி‘ என இலக்கியங்களும், ‘தண்பொருந்த ஆறு‘, ‘தண் பொருத்தப் பேராறு‘, ‘முடி கொண்ட சோழப் பேராறு‘ என்று கல்வெட்டுகளும் இன்றைய தாமிரபரணி ஆற்றினைச் சுட்டுகின்றன.
சொல் பொருள் விளக்கம்
பொருநை அல்லது தன்பொருனை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இவ்வாறு நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து , வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறது.
பொதிகை மலையிலிருந்து உருவாகி பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி.
‘தண்பொருநை‘, ‘பொருநை‘, ‘பொருநல்‘, ‘தண் பொருத்தம்‘, ‘தாமிரபரணி‘ என இலக்கியங்களும், ‘தண்பொருந்த ஆறு‘, ‘தண் பொருத்தப் பேராறு‘, ‘முடி கொண்ட சோழப் பேராறு‘ என்று கல்வெட்டுகளும் இன்றைய தாமிரபரணி ஆற்றினைச் சுட்டுகின்றன. இந்நதிக் கரையில்தான் ஆதிச்சநல்லூரும், கொற்கையும் பழந்தமிழர் நாகரிகத்தினை வளர்த்துள்ளன. கீழ்வேம்ப நாட்டுத் திருநெல்வேலி, குலசேகரச் சதுர் வேதிமங்கலம் எனக் கல்வெட்டுகள் கூறும் திருநெல்வேலியும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பழம்பெருமை மிக்க ஊராகும். திருநெல்வேலி பகுதியைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் பனைமரம் மிகுதி. அதனால் இங்குள்ள மக்கள் தமிழ் இலக்கியங்களையும் பிறகலைகளையும் பனை ஒலைகளில் பதிவு செய்து பாதுகாத்துள்ளனர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The river Thamiraparaṇi in the south of India,
A river in the Chera Country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 4477. 'தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல், என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம்மலையை இறைஞ்சி ஏகி, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக் கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர். பொன் திணிந்த புனல் பெருகும் - பொன் நிரம்பிய நீர் பெருகுகின்ற; பொருநை எனும் திருநதி தண் பொருநை புனல் பாயும் விண் பொரு புகழ் விறல் வஞ்சி – புறம் 11/5,6 குளிர்ந்த ஆன்பொருந்தத்து நீரின்கண் பாய்ந்து விளையாடும் வானை முட்டிய புகழினையும் வென்றியையுமுடைய கருவூரின்கண் பொருநைத் துறைவன் பொற்பாவாய் புது நீராடி யருளுகவே” (குமர. பிர, மீனா. பிள். 88.) 3675 பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும் தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக் கிடந்தானே (1) 3679 பவளம்போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் பவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய் சினப் பறவை ஊர்ந்தானே 3685 கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே பொருநல் வடகரை வண்டொலை வில்லி மங்கலம். (திவ். திருவாய். 6, 5, 8) குமரகுருபரரால் ” அங்கயற்கண்ணியின் எல்லையில்லாக் கருணை போல் பொங்கும் பொருநை” என்றும் தாலமி காலத்து கிரேக்கர்களால் “சோலன்” என்றும் மகாகவி பாரதியாரால் “தமிழ் கண்டதோர் வையை, பொருநை” என்றும் போற்றப்பட்டுள்ளது தாமிரபரணி! தமிழ் கண்டதோர் வையை, பொருநை பொருநை என்பது ஆன்பொருநை என்றும் அழைக்கப்படும். இது இன்றைய கரூர் நகரையொட்டிப் பாயும் அமராவதி நதி என்பர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்