Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மலரும் பருவத்து அரும்பு, 2. பொழுது, நாள்,

சொல் பொருள் விளக்கம்

மலரும் பருவத்து அரும்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Flower bud ready to open, time, day

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முள் அரை தாமரை முகிழ் விரி நாள்போது – சிறு 183

முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்

கூம்பிய நிலையில் இருக்கும் மொட்டு, முறுக்கு அவிழ்ந்து, சற்றே விரிந்து மலரத்தொடங்கும் நிலையில்
போது எனப்படும். இதனைக் கீழ்க்கண்ட அடிகளால் உணரலாம்.

போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564

போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை – மது 654

போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83

போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள் – நற் 176/6

பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை – நற் 231/7

போது அவிழ் தாமரை அன்ன நின் – ஐங் 424/3

போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய் – கலி 118/10

போது அவிழ் அலரி நாரின் தொடுத்து – புறம் 371/3

போது விரி பகன்றை புது மலர் அன்ன – புறம் 393/17

யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த – அகம் 269/23

போது அறியேன் பதி பழகவும் – புறம் 400/14

அவன் ஊரின்கண் இருந்தேனாகக் கழிந்த நாட்களை அறியேனாயினேன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *