Skip to content
செருந்தி

செருந்தி என்பது புதர்ச் செடி, வாள்கோரைப் புல்.

1. சொல் பொருள்

(பெ) 1. வாள்கோரைப் புல், 2. சிலந்தி,

2. சொல் பொருள் விளக்கம்

நீளமாக வளர்வதால், நெட்டுக்கோரை. வாள் போல் பூ பூப்பதால், வாள்கோரை(வாட்கோரை).

  • செருந்தி பொய்கையில் பொன் போல் கொத்தாகப் பூக்கும், புதர்புதராக வளரும்.
  • சூரியக் கதிர் போல் அரும்பிப் பூக்கும்
  • செருந்தியையும் நெய்தலையும் சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர்
  • நெருக்கமான மொட்டுகளைக் கொண்டது
  • வண்டு அருந்தும் தேன் உள்ள மலர்
  • நெய்தல் நிலத்தில் பொன் நிறத்தில் பூக்கும்
  • வயலில் கோரைப்புல் போல வளரும்
  • செருந்திப் பூவின் கால் செந்நிறம் கொண்டது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a kind of sedge

Panicled golden-blossomed pear tree, Ochna squarrosa, Konok Chapa, Golden Champak, Ochna serrulata, Mickey Mouse bush;

செருந்தி

செருந்திப்பூ

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர – மது 171,172

செங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்
யானை(யும்) மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ – ஐங் 141/1

மணல் மேட்டினில் உள்ள ஞாழல் மரத்தின் பூ, செருந்திப்பூவுடன் கமழ்ந்திருக்க,

தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் - சிறு 147

செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம் - குறி 75

கொழும் கால் புதவமொடு செருந்தி நீடி - பட் 243

செருந்தி தாய இரும் கழி சேர்ப்பன் - ஐங் 112/2

நனைத்த செருந்தி போது வாய் அவிழ - அகம் 150/9

விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர் - அகம் 240/13

பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர் செருந்தி/பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள் - அகம் 280/1,2

அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் - புறம் 390/3

பருதி_அம்_செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும்/மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் - கலி  26/2,3

புரி அவிழ் பூவின கைதையும் செருந்தியும்/வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத - கலி  127/2,3

களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர - மது 172

இரும் சாய் அன்ன செருந்தியொடு வேழம் - ஐங் 18/1

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ - ஐங் 141/1

நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇ - ஐங் 182/1

நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை செருந்தி
இரும் கழி தாழும் எறி கடல் தண் சேர்ப்ப - பழ:170/2,3
செருந்தி
செருந்தி
செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும் - மணி:3/165

குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும்
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும் - மணி: 19/93,94

செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம் - அயோ:9 8/2
செருந்தி
செருந்திச்செடி
கொங்கு செருந்தி கொன்றை மலர் கூட - தேவா-சம்:255/1

பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் - தேவா-சம்:768/3

கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் - தேவா-சம்:816/3

சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி
காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே - தேவா-சம்:1881/3,4

செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் - தேவா-சம்:3174/3

மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் - தேவா-சம்:3632/3

விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் - தேவா-சம்:4126/3

செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே - தேவா-சுந்:662/4

செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திரு ஆரூர் - தேவா-சுந்:973/1

செருந்தி செம்பொன் மலரும் திரு நாகேச்சரத்து அரனே - தேவா-சுந்:1007/4

ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும் - தேவா-சம்:2957/1

நாளி கேரம் செருந்தி நறு மலர் நரந்தம் எங்கும் - 1.திருமலை:2 28/1

வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் - 1.திருமலை:5 94/1

சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு - 4.மும்மை:5 34/2,3

கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை - 8.பொய்:6 4/2

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி பொதும்பினில் வாழும் குயிலே - நாலாயி:545/3

செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலை திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே - நாலாயி:1144/4

செருந்தி நாள்மலர் சென்று அணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே - நாலாயி:1148/4

புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் - நாலாயி:1191/3

சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே - 
நாலாயி:1228/3

சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே - நாலாயி:1241/3

பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி - நாலாயி:1339/3

பொன்னை நைவிக்கும் அ பூம் செருந்தி மண நீழல்வாய் - நாலாயி:1768/2

பூம் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன் - நாலாயி:1785/3

பொன் அலர்ந்த நறும் செருந்தி பொழிலினூடே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே - நாலாயி:2076/4

செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் - நாலாயி:3458/2

குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை - நாலாயி:3903/2

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று - நாலாயி:351/3

மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே - திருப்:231/8

முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம் - திருப்:1013/1

புன்னையும் செருந்தியும் பொன் இணர் ஞாழலும் - உஞ்ஞை:48/154

அரும்பு அணி புன்னையும் சுரும்பு இமிர் செருந்தியும்
இலை அணி இகணையும் இன்னவை பிறவும் - இலாவாண:9/7,8

சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் - மது:13/153

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *