Skip to content
நானிலம்

நானிலம் என்பதன் பொருள்பூமி(குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம்).

1. சொல் பொருள்

(பெ) குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்னும் நான்கு வகை நிலமுடைய பூமி, நானிலம் = நால்+ நிலம்.

2. சொல் பொருள் விளக்கம்

தமிழர் நிலத்தை நான்கு வகையாகப் பாகுபடுத்திப் பார்த்தனர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன அவை. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்னும் நான்கு வகை நிலமுடைய பூமி,

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

the earth consisting of the four types of lands, mullai, kurinji, marutham and neythal.

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி – பரி 13/35-37

இம் மண்ணுலகத்து மக்களின் நடுக்கம் தீர, பெரிய அடிப்பகுதிவரை சென்று நாட்டிய
பொன்னாலான மலரால் அழகிய மணிகளையுடைய மடலையுடைய பெரிய குமிழ் போன்ற
பூணினைக் கொண்ட பிரகாசமாய் ஒளிவிடும் கொம்புகளையுடைய ஆண்பன்றியும் ஆகி

நடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் - சிலப்.மது 22/59

5. பயன்பாடு

1. ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான்
2. நானிலம் போற்றும் நல்லவர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *